மேலும் அறிய

Election 2024 Results

UTTAR PRADESH (80)
43
INDIA
36
NDA
01
OTH
MAHARASHTRA (48)
30
INDIA
17
NDA
01
OTH
WEST BENGAL (42)
29
TMC
12
BJP
01
INC
BIHAR (40)
30
NDA
09
INDIA
01
OTH
TAMIL NADU (39)
39
DMK+
00
AIADMK+
00
BJP+
00
NTK
KARNATAKA (28)
19
NDA
09
INC
00
OTH
MADHYA PRADESH (29)
29
BJP
00
INDIA
00
OTH
RAJASTHAN (25)
14
BJP
11
INDIA
00
OTH
DELHI (07)
07
NDA
00
INDIA
00
OTH
HARYANA (10)
05
INDIA
05
BJP
00
OTH
GUJARAT (26)
25
BJP
01
INDIA
00
OTH
(Source: ECI / CVoter)

சாத்தனூர் அணையில் இருந்து 690 கனஅடி உபரி நீர் திறப்பு - 4 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 690 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. நான்கு மாவட்ட மக்களுக்கு நீர்வளத்துறை அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் அணை 119 அடி உயரம் கொண்டதாகும். இதில் 7321 மில்லியன் கனஅடி தண்ணீர் தேக்கி வைக்க முடியும். அணையில் தேங்கும் தண்ணீர் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் சுமார் 50,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனை வசதி பெறுகின்றன. தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து காணப்பட்டது. இதனால் சாத்தனூர் அணைக்கு தென்பெண்ணை ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் வர தொடங்கியது. இதனால் அணைக்கு இதுகுறித்து உதவி செயற்பொறியாளர் அறிவழகன் நிருபர்களிடம் கூறுகையில், திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா சாத்தனூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் 307 கிலோமீட்டரில் 1954 ஆம் ஆண்டு ஆரம்பித்து 1957ஆம் ஆண்டில் சாத்தனூர் அணை கட்டி முடிக்கப்பட்டது. தென்பெண்ணை ஆறு கர்நாடக மாநிலம் சென்னகேசவர் மலையில் உற்பத்தி ஆகி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வட்டம் பாகலா கிராமத்தில் தமிழகத்தில் நுழைந்து மொத்தம் 432 கிலோ மீட்டரில் 125 கிலோமீட்டர் பயணம் செய்து கடலூருக்கு அருகில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. ஆரம்ப காலத்தில் அணையின் கொள்ளளவு 4600 மில்லியன் அடியாகும். 1958 ஆம் ஆண்டு சாத்தனூர் அணை இரண்டாம் கட்ட பணி துவங்கப்பட்டு அணை நீர் தேக்கி கதவுகள் அடைக்கப்பட்டு இதன் கொள்ளளவு 8,100 மில்லியன் கனியாக உயர்த்தப்பட்டது.

 


சாத்தனூர் அணையில் இருந்து  690 கனஅடி உபரி நீர் திறப்பு -  4 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தற்போது வண்டல் மண் வடிவின் காரணத்தால் இதன் கொள்ளளவு 7321 மில்லியன் கனியாக உள்ளது. கடையில் மொத்த நீளம் 780மீட்டர் ஆகும். கல்லணை 419 மீட்டர், மண்ணை 361 மீட்டர், அதன் நீர் பிடிப்பு பரப்பளவு 18 .25 சதுர கிலோமீட்டர் ஆகும். அணையில் இருந்து 7.5 கிலோமீட்டர் தொலைவில் பிக்கப் அணைக்கட்டு அழைக்கப்பட்டுள்ளது. இந்த அணைக்கட்டில் இருந்து வலது மற்றும் இடது புற வாய்க்கால் மூலம் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 30 ஏரிகளுக்கும் கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் 10 ஏரிகளுக்கும் பாசன வசதி பெறுகிறது. மொத்தமாக சுமார் 50,000 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன. திருவண்ணாமலை செங்கம் புதுப்பாளையம் உட்பட 249 கிராமங்களில் குடிநீர் தேவனை பூர்த்தி செய்து வருகிறது. தானிப்பாடி வாணாபுரம் லாடபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம் உட்பட 322.24 மில்லியன் கன அடி தண்ணீர் ஆண்டு ஒன்றுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சாத்தனூர் அனல் மின் திட்டத்தின் வாயிலாக 7.5 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் வாயிலாக மீன் வளர்க்கப்பட்டு நாள்தோறும் பொதுமக்களுக்கு மின் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் நீர்வளத் துறைக்கு மீன் வளர்ச்சி கழகத்தினால் வருவாய் செலுத்தப்பட்டு வருகிறது.

 

 


சாத்தனூர் அணையில் இருந்து  690 கனஅடி உபரி நீர் திறப்பு -  4 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

 

சாத்தனூர் அணை பூங்கா பகுதிகள் காலை 6:00 மணி முதல் இரவு 7:30 மணி வரை சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். அனுமதிச்சீட்டு மற்றும் கடைகளில் ஏழைகள் வாயிலாக சுமார் 80 லட்சம் முதல் 1 கோடி வரை அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது. சாத்தனூர் அணை நீர்நிலை பயன்படுத்துவோர் தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கங்கள் இடதுபுற கால்வாயில் 27 வலதுபுற கால்வாயில் 22 என மொத்தம் 49 சங்கங்கள் உள்ளன. தற்போது அணையின் நீர்மட்டம் 117.05 அடியாக உள்ளது. மேலும் பருவமழையின் காரணமாக சாத்தனூர் அணைக்கு  வரும் தண்ணீர் தொடர்ந்து அதிகரித்து வருவதால் உபரி நீரை பாசன விதிமுறைகளின் படி வெளியேற்றப்பட்ட வேண்டியுள்ளதால் இன்று நிலவரப்படி அணைக்கு  1245 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பதினொரு கண் மதகு வழியாக 690 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. என இவ்வாறு அவர் தெரிவித்தார். தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ கூடாது என நீர்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Narendra Modi: தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர்.. ஜூன் 9ம் தேதி பதவியேற்கும் மோடி..? ஏஎன்ஐ தகவல்!
PM Narendra Modi: தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர்.. ஜூன் 9ம் தேதி பதவியேற்கும் மோடி..? ஏஎன்ஐ தகவல்!
BJP Annamalai:ஆட்டை வெட்டி இருக்கிறார்கள்.. திமுகவினர் முடிந்தால் என் மீது கை வைக்கட்டும் -அண்ணாமலை கருத்து!
ஆட்டை வெட்டி இருக்கிறார்கள்.. திமுகவினர் முடிந்தால் என் மீது கை வைக்கட்டும் -அண்ணாமலை கருத்து!
”ஆந்திராவில் பதற்றம்” : ஆந்திர ஆளுநருக்கு ஜெகன்மோகன் ரெட்டி வேண்டுகோள்!
”ஆந்திராவில் பதற்றம்” : ஆந்திர ஆளுநருக்கு ஜெகன்மோகன் ரெட்டி வேண்டுகோள்!
Breaking News LIVE: ஜூன் 9ல் பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி?
Breaking News LIVE: ஜூன் 9ல் பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Rahul gandhi :  எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்? I.N.D.I.A போடும் ப்ளான்! கூட்டத்தில் பேசியது என்ன?Cuddalore Drunkard : அடடா மழைடா..அடைமழைடா! கொட்டும் மழையில் குளியல்மதுபிரியர்கள் ATROCITYNaveen Patnaik vs Modi : மோடி பக்கா ஸ்கெட்ச்..நவீனுக்கு முற்றுப்புள்ளி!உதவிய VK பாண்டியன்?BJP Cadre Tonsure : ’’அண்ணாமலை தோத்தா மொட்டை!’’ சபதத்தை நிறைவேற்றிய பாஜககாரர்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Narendra Modi: தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர்.. ஜூன் 9ம் தேதி பதவியேற்கும் மோடி..? ஏஎன்ஐ தகவல்!
PM Narendra Modi: தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர்.. ஜூன் 9ம் தேதி பதவியேற்கும் மோடி..? ஏஎன்ஐ தகவல்!
BJP Annamalai:ஆட்டை வெட்டி இருக்கிறார்கள்.. திமுகவினர் முடிந்தால் என் மீது கை வைக்கட்டும் -அண்ணாமலை கருத்து!
ஆட்டை வெட்டி இருக்கிறார்கள்.. திமுகவினர் முடிந்தால் என் மீது கை வைக்கட்டும் -அண்ணாமலை கருத்து!
”ஆந்திராவில் பதற்றம்” : ஆந்திர ஆளுநருக்கு ஜெகன்மோகன் ரெட்டி வேண்டுகோள்!
”ஆந்திராவில் பதற்றம்” : ஆந்திர ஆளுநருக்கு ஜெகன்மோகன் ரெட்டி வேண்டுகோள்!
Breaking News LIVE: ஜூன் 9ல் பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி?
Breaking News LIVE: ஜூன் 9ல் பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி?
“எல்லாத்துக்கும் அண்ணாமலைதான் காரணம்” - உண்மையை உடைத்து பேசிய வேலுமணி தோல்வி குறித்து  விளக்கம்
“எல்லாத்துக்கும் அண்ணாமலைதான் காரணம்” - உண்மையை உடைத்து பேசிய வேலுமணி தோல்வி குறித்து விளக்கம்
Sathyaraj: ரஜினியுடன் என்ன பிரச்னை.. எந்திரன், சிவாஜியில் நடிக்காத காரணம் இதுதான்.. சத்யராஜ் பளிச்!
Sathyaraj: ரஜினியுடன் என்ன பிரச்னை.. எந்திரன், சிவாஜியில் நடிக்காத காரணம் இதுதான்.. சத்யராஜ் பளிச்!
Premalatha:  “விஜய பிரபாகரன் தோற்கவில்லை; இது சூழ்ச்சி” - பிரேமலதா பகிரங்க குற்றச்சாட்டு
Premalatha: “விஜய பிரபாகரன் தோற்கவில்லை; இது சூழ்ச்சி” - பிரேமலதா பகிரங்க குற்றச்சாட்டு
IND vs IRE: டி20யில் அதிக மெய்டன்கள் வீசிய பும்ரா.. பிரத்யேக சாதனை பட்டியலில் இணைந்து அசத்தல்..!
டி20யில் அதிக மெய்டன்கள் வீசிய பும்ரா.. பிரத்யேக சாதனை பட்டியலில் இணைந்து அசத்தல்..!
Embed widget