மேலும் அறிய

13 ஆண்டுகளுக்குப் பிறகு, அண்ணாமலையார் கோயில் சைவ சமய அர்ச்சகர் பயிற்சி வகுப்பு: நேர்முக தேர்வு மாணவர் சேர்க்கை

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு சைவ சமய அர்ச்சகர் பயிற்சி பள்ளி வகுப்பு மாணவர் சேர்க்கை நேர்முகத்தேர்வு நடைபெற்றது.

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் 13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சைவ சமய அர்ச்சகர் பயிற்சிப்பள்ளி தொடங்கப்படுகிறது. அதனையொட்டி, மாணவர்கள் சேர்க்கைக்கான நேர்முகத் தேர்வு நடந்தது.சாதி வேறுபாடு இல்லாமல், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வாய்ப்பை வழங்குவதற்காக, சென்னை பார்த்த சாரதி கோயில், திருவரங்கம் கோயிலில் வைணவ பயிற்சியும், திருவண்ணாமலை, மதுரை, பழனி, கோவில்களில் சைவ சமய பயிற்சி பள்ளியும் கடந்த 2007ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஓராண்டுக்கு பிறகு இந்த பயற்சியில் தகுதி பெற்ற மாணவர்களுக்கு தகுதிச் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆனால், அதன்பிறகு இப்பயிற்சி பள்ளிகள் செயல்படவில்லை.இந்நிலையில், தமிழகத்தில் மீண்டும் ஏற்கனவே அர்ச்சகர் பயிற்சி முடித்த 28 நபர்களுக்கு கோயில்களில் அர்ச்சராக பணிபுரிவதற்கான ஆணைகள் தமிழக அரசால் வழங்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அர்ச்சகர் பயிற்சிப்பள்ளிகள் தொடங்க, இந்து சமய அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது.


13 ஆண்டுகளுக்குப் பிறகு, அண்ணாமலையார் கோயில் சைவ சமய அர்ச்சகர் பயிற்சி வகுப்பு: நேர்முக தேர்வு மாணவர் சேர்க்கை

அதனைத்தொடர்ந்து, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சைவ தேர்வை நடத்தினர். சமய அர்ச்சகர் பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியில், 40 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இந்து மதத்தை சார்ந்த, 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 14 வயது முதல் 24 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் இந்த பயிற்சிகள் பெற தகுதியுள்ளவர்கள்.

பயிற்சி பெறும் மாணவர்களுக்கு இலவச தங்குமிடம், உணவு, சீருடை, மாதம் 3 ஆயிரம் உதவித்தொகை என அனைத்தும் வழங்கப்படும்.இந்நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் செயல்படும் சைவ சமய அர்ச்சகர் பயிற்சி பள்ளி மாணவர் சேர்க்கைக்கான நேர்முகத் தேர்வு நேற்று கோயிலில் நடைபெற்றது.


13 ஆண்டுகளுக்குப் பிறகு, அண்ணாமலையார் கோயில் சைவ சமய அர்ச்சகர் பயிற்சி வகுப்பு: நேர்முக தேர்வு மாணவர் சேர்க்கை

 

அண்ணாமலையார் கோவிலின் இணை ஆணையர் கே.பி.அசோக்குமார், உதவி ஆணையர்கள் ராஜேந்திரன். சந்திரசேகர், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மு.ஜோதிலட் சுமி, தமிழ்த்துறை பேராசிரியர் ராஜமாணிக்கம், கோயில் சிவாச்சாரியார்கள் ஆகியோர் இந்த தேர்வை நடத்தினர். இந்த தேர்வில் பங்கேற்க 32 மாணவர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அதில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 24 மாணவர்கள் கலந்து கொண்டனர். காலியாக உள்ள இடங்களுக்கு தகுதியுள்ள மாணவர்கள் சேர விரும்பினால் வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சைவ சமய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் பணிபுரிய, வேத பாட ஆசிரியர்களுக்கான நேர்முகத் தேர்வும் நடந்தது. மாணவர் சேர்க்கைக்கான நேர்காணல் முடிந்துள்ள நிலையில், விரைவில் பயிற்சிப்பள்ளிகள் செயல்படும் என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தலைப்பு செய்திகள்

SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget