மேலும் அறிய

சமூகசேவை செய்ய வேலூருக்கு வந்து சொந்த நாட்டுக்கு செல்ல முடியாமல் தவிக்கும் நெதர்லாந்து சமூகசேவகி

’’டெல்லியில் உள்ள நெதர்லாந்து தூதரக அதிகாரிகள் மூலம் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, அதுவரை அவரது செலவுகளை மாவட்ட நிர்வாகமே ஏற்றுக்கொள்ளும்’’

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு சேவை செய்வதற்காக வேலூர் வந்த  நெதர்லாந்து பெண்மணி , அவரது வங்கிக்கணக்கு முடக்கப்பட்டதால்  சொந்த நாட்டுக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றார். உணவு , தங்குமிடம் என அத்யாவிசய தேவைகளுக்குக் கூட பணம் இல்லாமல் தவிப்பதால் தன்னை  சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பிவைக்கும்படி  வேலூர் மாவட்ட ஆட்சியர்  குமாரவேல் பாண்டியனிடம் மனு அளித்துள்ளார் .
 

சமூகசேவை செய்ய வேலூருக்கு வந்து சொந்த நாட்டுக்கு செல்ல முடியாமல் தவிக்கும் நெதர்லாந்து சமூகசேவகி
 
வடமேற்கு ஐரோப்பிய நாடான நெதர்லாந்தைச் சேர்ந்தவர் ஹென்னா மேரி (44). இந்தியாவில் உள்ள மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்குச் சேவை செய்யும் நோக்கில் பல அனாதை இல்லங்கள் மற்றும் தனியார் காப்பகங்கள் மூலம் உதவி தேவைப்படும் குழந்தைகளை அடையாளம் கண்டு பல ஆண்டுகளாக அவர்களுக்கு சேவை மற்றும்  நிதியுதவி செய்து வருகிறார் . இந்நிலையில்   வேலூர் பகுதியிலுள்ள குழந்தைகளுக்குச் சேவை செய்யும் நோக்கத்துடன் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வேலூருக்கு வந்துள்ளார்.
 
பின்னர் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் வேலூரிலேயே தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.  அதனால் காட்பாடி காந்திநகர் ஜெகநாதபுரம் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கி வேலூர், காட்பாடி, சத்துவாச்சாரியில் பல்வேறு சமூகப் பணிகள் செய்து வந்தார். 2 ஆண்டுகளாக இங்கேயே தங்கி இருப்பதால் அவர் கொண்டு வந்த பணம் முழுவதும் தீர்ந்து விட்டது. மேலும் அவர் இந்தியாவில் தங்கி இருப்பதற்கான விசா காலம் முடிந்து விட்டது. அவரது வங்கிக் கணக்கும் முடங்கியது. 
 

சமூகசேவை செய்ய வேலூருக்கு வந்து சொந்த நாட்டுக்கு செல்ல முடியாமல் தவிக்கும் நெதர்லாந்து சமூகசேவகி
 
சொந்த ஊர் செல்லவும், சாப்பாட்டுக்கு வழியின்றியும் தவித்த அவர், நெதர்லாந்து நாட்டில்  உள்ள உறவினர்களுக்கு கடிதம் எழுதியும் பதில் இல்லை. மொபைலிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையறிந்த அ.தி.மு.க கட்சியின் மாநில மாணவரணி துணை செயலாளர் எம்.டி.பாபுவுக்கு தகவல் தெரியவந்தது.  இதையடுத்து ஹென்னா மேரியை அவரது நாட்டுக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார். அதன்படி நேற்று ஹென்னா மேரியை, எம்.டி.பாபு வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அழைத்து வந்தார்.
 
அவர்கள், மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனை சந்தித்து நெதர்லாந்து நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர், நெதர்லாந்து தூதரகம் மூலம் ஹென்னா மேரியை அவரது நாட்டுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும்  இதுகுறித்து சென்னை மற்றும் டெல்லியில் உள்ள தூதரக அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கும்படி மனு அளித்துள்ளனர்.
 
சமூகசேவை செய்ய வேலூருக்கு வந்து சொந்த நாட்டுக்கு செல்ல முடியாமல் தவிக்கும் நெதர்லாந்து சமூகசேவகி
 
ஹென்னாமேரி கூறுகையில், மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் வாழ்க்கை மேம்படுவதற்கு என்னால் முடிந்த உதவி செய்ய வேலூருக்கு வந்தேன். வந்த இடத்தில் ஊரடங்கால் இங்குச் சிக்கிக்கொண்டேன். எனது வங்கிக் கணக்கு எனது நாட்டில் உள்ளது. அந்த கணக்கு முடக்கப்பட்டுள்ளதால் என்னால் பணம் எடுத்து செலவு செய்யவும் முடியவில்லை. நாடு திரும்பவும் முடியவில்லை. இதனால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளானேன் என தெரிவித்தார் .
 
இது குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் தெரிவிக்கும் பொழுது டில்லியில் உள்ள நெதர்லாந்து தூதரக அதிகாரிகள் மூலம், அவரை சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தனர். அதுவரைக்கும் அவரது அனைத்து செலவுகளையும் மாவட்ட நிர்வாகமே ஏற்றுக்கொள்ளும் என்று தெரிவித்தனர்.

தலைப்பு செய்திகள்

TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
SUV Rivals: எஸ்யுவி தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
SUV தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
Embed widget