மேலும் அறிய

6வயது மகளை கரும்பால் அடித்து கொலை செய்த தாய் கைது!

திருவண்ணாமலை அருகே வீட்டில் கூச்சலிட்டபடி விளையாடிய 6 வயது மகளை சமாதானம் செய்தும் கேட்காததால் அவரது தாய் கரும்பால் அடித்துள்ளார்.இதில் சிறுமி இறந்துவிட்டார். இதையடுத்து அவரது தாயை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் அடுத்த உள்ள அரடாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பூபாலன் வயது (38) இவர் தார் சாலை அமைக்கும் கூலி தொழிலாளி, இவருடைய மனைவி சுகன்யா வயது (30) இவர்களுடைய மகன் பிரசன்னதேவ் வயது (8), மகள் ரித்திகா வயது (6). இருவரும் அதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளில் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் பூபாலன், சுகன்யா இடையே கடந்த சில ஆண்டுகளாக அவ்வப்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் சுகன்யா கோபித்து கொண்டு தாய் வீட்டிற்கு அடிக்கடி சென்று விடுவாராம். அவரை பெற்றோர் சமாதானம் செய்து கணவருடன் சேர்ந்து வாழ அனுப்பி வைப்பார்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பூபாலன் சாலை அமைக்கும் பணிக்காக தேனி மாவட்டத்திற்கு சென்றுள்ளார். 

 


6வயது மகளை கரும்பால் அடித்து கொலை செய்த தாய் கைது!

அப்போது நேற்று விடுமுறை நாள் என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இதனால் பிரசன்னதேவ், ரித்திகா வீட்டில் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது ரித்திகா அதிகமாக சத்தம் போட்டுள்ளார்.அப்போது தாய் சுகன்யா, பலமுறை மகளை சத்தம் போடாதே என கூறியுள்ளார். ஆனால் ரித்திகா கேட்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சுகன்யா, அருகில் இருந்த கரும்பை எடுத்து ரித்திகாவை அடித்துள்ளார்.இதில் தலையின் பின்பகுதியில் அடி விழுந்தததால் ரித்திகா மயங்கி கீழே விழுந்துள்ளார்.அதிர்ச்சியடைந்த தாய் சுகன்யா, உடனடியாக ரித்திகாவை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுார். ஆனால் வழியிலேயே ரித்திகா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

 


6வயது மகளை கரும்பால் அடித்து கொலை செய்த தாய் கைது!

இதனால் கதறி அழுத தாய் சுகன்யா, மருத்துவமனைக்கு செல்லாமல் ரித்திகாவின் சடலத்தை வீட்டிற்கு கொண்டு வந்துள்ளார். பின்னர் கணவர் மற்றும் உறவினர்களுக்கு பயந்து ரித்திகாவின் சடலத்தை கீழ்பென்னாத்தூர் அடுத்த கொளத்தூர் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து பூபாலன் விரைந்து வந்து மகளின் சடலத்தை பார்த்து கதறி அழுதார். பின்னர் இந்த சம்பவம் குறித்து வெறையூர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விரைந்து வந்து, ரித்திகாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து சுகன்யாவை கைது செய்தனர். பின்னர் சுகன்யாவை, திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில்  உள்ள பொதுமக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சசிகலாவும் ஓபிஎஸ்க்கு பச்சை கொடி: அதிமுக அரசியலில் ஏற்படும் அதிரடி திருப்பங்கள்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

முதல்வர், துணை முதல்வர் இடையே மோதல்! நீயா, நானா போட்டியில் கர்நாடக காங்கிரஸ்!
முதல்வர், துணை முதல்வர் இடையே மோதல்! நீயா, நானா போட்டியில் கர்நாடக காங்கிரஸ்!
State Education Policy: முதல்வரிடம் மாநில கல்விக் கொள்கை சமர்ப்பிப்பு; என்ன சிறப்பு அம்சங்கள்?
State Education Policy: முதல்வரிடம் மாநில கல்விக் கொள்கை சமர்ப்பிப்பு; என்ன சிறப்பு அம்சங்கள்?
Breaking News LIVE: சபாநாயகர் முடிவை கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு!
Breaking News LIVE: சபாநாயகர் முடிவை கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு!
Dinesh Karthik RCB: அடிதூள் - ஆர்சிபி அணியின் பேட்டிங் பயிற்சியாளராக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நியமனம்
Dinesh Karthik RCB: அடிதூள் - ஆர்சிபி அணியின் பேட்டிங் பயிற்சியாளராக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நியமனம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jagan Mohan Reddy  vs Chandra Babu Naidu | ஜெகனுக்கு END CARD!அதிரடி காட்டும் சந்திரபாபு..Puducherry Police Exam | ’’வாழ்க்கையே போச்சு’’கண்ணீர் விட்டு அழுத பெண்கள்..தேர்வுக்கு அனுமதி மறுப்புDhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முதல்வர், துணை முதல்வர் இடையே மோதல்! நீயா, நானா போட்டியில் கர்நாடக காங்கிரஸ்!
முதல்வர், துணை முதல்வர் இடையே மோதல்! நீயா, நானா போட்டியில் கர்நாடக காங்கிரஸ்!
State Education Policy: முதல்வரிடம் மாநில கல்விக் கொள்கை சமர்ப்பிப்பு; என்ன சிறப்பு அம்சங்கள்?
State Education Policy: முதல்வரிடம் மாநில கல்விக் கொள்கை சமர்ப்பிப்பு; என்ன சிறப்பு அம்சங்கள்?
Breaking News LIVE: சபாநாயகர் முடிவை கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு!
Breaking News LIVE: சபாநாயகர் முடிவை கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு!
Dinesh Karthik RCB: அடிதூள் - ஆர்சிபி அணியின் பேட்டிங் பயிற்சியாளராக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நியமனம்
Dinesh Karthik RCB: அடிதூள் - ஆர்சிபி அணியின் பேட்டிங் பயிற்சியாளராக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நியமனம்
ITR Filing: ஜுலை 31 கடைசி, வருமான வரி தாக்கலில் திருத்தம் செய்வது எப்படி? படிப்படியான வழிமுறைகள் இதோ..!
ITR Filing: ஜுலை 31 கடைசி, வருமான வரி தாக்கலில் திருத்தம் செய்வது எப்படி? படிப்படியான வழிமுறைகள் இதோ..!
Amala Paul: மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்டாரா அமலாபால்? பெண் மேக்கப் கலைஞர் குற்றச்சாட்டு
Amala Paul: மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்டாரா அமலாபால்? பெண் மேக்கப் கலைஞர் குற்றச்சாட்டு
NEET Re-Exam Result: வெடித்த கருணை மதிப்பெண் சர்ச்சை - நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது
NEET Re-Exam Result: வெடித்த கருணை மதிப்பெண் சர்ச்சை - நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது
Shocking Video : நீர்வீழ்ச்சி வெள்ளத்தில் சிக்கிய குடும்பம்.. 7 பேர்.. பதைபதைக்க வைக்கும் காட்சிகள்
நீர்வீழ்ச்சி வெள்ளத்தில் சிக்கிய குடும்பம்.. 7 பேர்.. பதைபதைக்க வைக்கும் காட்சிகள்
Embed widget