மேலும் அறிய

“எனது மகன் என்று இல்லாமல், கட்சியின் பொதுச்செயலாளராக ஆணையிடுகிறேன்! வெற்றி பெற வைத்த மக்களை அடிக்கடி சந்தியுங்கள்” - அமைச்சர் துரைமுருகன்

நான் எப்படி 13 முறை ஒரு தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்ற ரகசியம், கதிர் ஆனந்திற்கு தெரியும், எனவே அந்த ரகசியத்தை கடைப்பிடிக்க வேண்டும் என ஆணையிடுகிறேன்.

 
வாணியம்பாடியில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி கதிர்ஆனந்த் கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு  நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில், திமுக பொதுசெயலாளரும், அமைச்சருமான துரை முருகன் மக்களை சந்திக்குமாறு கதிர் ஆனந்திற்கு கட்டளையிட்டார்,
 
இந்தியா முழுவதும் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார். 
 
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள தனியார் மண்டபத்தில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்காக, திமுக கட்சியின், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது‌. இக்கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் மற்றும் கதிர் ஆனந்த் பங்கேற்றனர். அப்பொழுது திமுக கட்சி தொண்டர்கள்மற்றும் நிர்வாகிகள், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற கதிர் ஆனந்திற்கு சால்வை மற்றும் மாலை, அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

“எனது மகன் என்று இல்லாமல், கட்சியின் பொதுச்செயலாளராக ஆணையிடுகிறேன்! வெற்றி பெற வைத்த மக்களை அடிக்கடி சந்தியுங்கள்” - அமைச்சர் துரைமுருகன்
 
அப்பொழுது பேசிய கதிர் ஆனந்த், “தாய் வீட்டு சீதனம் போல் அன்பும், அரவணைப்பும் எப்போதும் கிடைக்கிறது, வாணியம்பாடி தொகுதிற்கு நான் கொடுத்த வாக்குறுதியையெல்லாம், எவ்வளவு விரைவாக செய்யமுடியுமோ, அவ்வளவு விரைவாக செய்து முடிக்கின்றேன்” என்று தெரிவித்தார்.
 
பின்னர் பேசிய திமுக பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கூறுகையில், “கடந்த முறை கதிர் ஆனந்த் வெற்றி பெற வாணியம்பாடி தான் பங்களித்தது. இந்த தேர்தலிலும், 6 தொகுதிகளில்  கதிர் ஆனந்திற்கு அதிக வாக்கு பெற்ற தொகுதி வாணியம்பாடி தொகுதி தான். என்னிடம் எல்லோரும் கூறினார்கள் வாணியம்பாடி இந்த முறை கைகொடுக்காது என்று, நான் வாணியம்பாடியில் படித்தவன், எனக்கு ஓரளவிற்கு இந்த தொகுதி பற்றி தெரியும், இந்த தொகுதியில் வெற்றி பெற வைத்த அனைவருக்கும் நன்றிகள்” என பேசினார்.

“எனது மகன் என்று இல்லாமல், கட்சியின் பொதுச்செயலாளராக ஆணையிடுகிறேன்! வெற்றி பெற வைத்த மக்களை அடிக்கடி சந்தியுங்கள்” - அமைச்சர் துரைமுருகன்
 
மேலும் இந்த தொகுதியில் பெரும் பிரச்சனை ரயில்வே மேம்பாலம், இந்த முறை மேம்பாலம் கட்டி முடிக்கப்படும் பொழுது தான் நான் கதிர் ஆனந்தை வாழ்த்துவேன்  என தெரிவித்தார்.
 
மேலும்  பேசிய அவர். “ஒன்றை சொல்கின்றேன் எனது மகன் என்பதற்காக அல்ல, திமுக கட்சியின் பொதுச்செயலாளர் என்ற முறையில், நான் ஆணையிடுகிறேன், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களை அடிக்கடி சந்தியுங்கள், இரண்டு வாரத்திற்கு ஒருமுறையாவது, பொது மக்களின் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும்.
 
நான் எப்படி 13 முறை ஒரு தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்ற ரகசியம், கதிர் ஆனந்திற்கு தெரியும், எனவே அந்த ரகசியத்தை கடைப்பிடிக்க வேண்டும் என கதிர் ஆனந்திற்கு ஆணையிடுகிறேன் என பேசினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Minister KN Nehru: விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் -  வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் - வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
அறை எண் 305 ஞாபகம் இருக்கா... பிளாஷ்பேக்கை சொல்லி நாஞ்சில் சம்பத்தை கதறவிடும் திமுக நிர்வாகி
அறை எண் 305 ஞாபகம் இருக்கா... பிளாஷ்பேக்கை சொல்லி நாஞ்சில் சம்பத்தை கதறவிடும் திமுக நிர்வாகி
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister KN Nehru: விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் -  வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் - வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
அறை எண் 305 ஞாபகம் இருக்கா... பிளாஷ்பேக்கை சொல்லி நாஞ்சில் சம்பத்தை கதறவிடும் திமுக நிர்வாகி
அறை எண் 305 ஞாபகம் இருக்கா... பிளாஷ்பேக்கை சொல்லி நாஞ்சில் சம்பத்தை கதறவிடும் திமுக நிர்வாகி
டிசம்பர் 9, 11, 16... அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு- தமிழகத்திற்கு அலர்ட் விடுத்த வெதர்மேன்
டிசம்பர் 9, 11, 16... அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு- தமிழகத்திற்கு அலர்ட் விடுத்த வெதர்மேன்
Indigo Flight: ரூ.610 கோடி கொடுத்தாச்சு.. இனியும் விமானங்கள் லேட்டாதான் புறப்படும் - இண்டிகோவால் தொடரும் அவதி
Indigo Flight: ரூ.610 கோடி கொடுத்தாச்சு.. இனியும் விமானங்கள் லேட்டாதான் புறப்படும் - இண்டிகோவால் தொடரும் அவதி
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
Hyundai Venue: ரூபாய் 10 லட்சம்தான் ஆரம்ப விலை.. Hyundai Venue கார் தரமும், மைலேஜும் எப்படி?
Hyundai Venue: ரூபாய் 10 லட்சம்தான் ஆரம்ப விலை.. Hyundai Venue கார் தரமும், மைலேஜும் எப்படி?
Embed widget