மேலும் அறிய
“எனது மகன் என்று இல்லாமல், கட்சியின் பொதுச்செயலாளராக ஆணையிடுகிறேன்! வெற்றி பெற வைத்த மக்களை அடிக்கடி சந்தியுங்கள்” - அமைச்சர் துரைமுருகன்
நான் எப்படி 13 முறை ஒரு தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்ற ரகசியம், கதிர் ஆனந்திற்கு தெரியும், எனவே அந்த ரகசியத்தை கடைப்பிடிக்க வேண்டும் என ஆணையிடுகிறேன்.

அமைச்சர் துரைமுருகன்
வாணியம்பாடியில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி கதிர்ஆனந்த் கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில், திமுக பொதுசெயலாளரும், அமைச்சருமான துரை முருகன் மக்களை சந்திக்குமாறு கதிர் ஆனந்திற்கு கட்டளையிட்டார்,
இந்தியா முழுவதும் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள தனியார் மண்டபத்தில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்காக, திமுக கட்சியின், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் மற்றும் கதிர் ஆனந்த் பங்கேற்றனர். அப்பொழுது திமுக கட்சி தொண்டர்கள்மற்றும் நிர்வாகிகள், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற கதிர் ஆனந்திற்கு சால்வை மற்றும் மாலை, அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

அப்பொழுது பேசிய கதிர் ஆனந்த், “தாய் வீட்டு சீதனம் போல் அன்பும், அரவணைப்பும் எப்போதும் கிடைக்கிறது, வாணியம்பாடி தொகுதிற்கு நான் கொடுத்த வாக்குறுதியையெல்லாம், எவ்வளவு விரைவாக செய்யமுடியுமோ, அவ்வளவு விரைவாக செய்து முடிக்கின்றேன்” என்று தெரிவித்தார்.
பின்னர் பேசிய திமுக பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கூறுகையில், “கடந்த முறை கதிர் ஆனந்த் வெற்றி பெற வாணியம்பாடி தான் பங்களித்தது. இந்த தேர்தலிலும், 6 தொகுதிகளில் கதிர் ஆனந்திற்கு அதிக வாக்கு பெற்ற தொகுதி வாணியம்பாடி தொகுதி தான். என்னிடம் எல்லோரும் கூறினார்கள் வாணியம்பாடி இந்த முறை கைகொடுக்காது என்று, நான் வாணியம்பாடியில் படித்தவன், எனக்கு ஓரளவிற்கு இந்த தொகுதி பற்றி தெரியும், இந்த தொகுதியில் வெற்றி பெற வைத்த அனைவருக்கும் நன்றிகள்” என பேசினார்.

மேலும் இந்த தொகுதியில் பெரும் பிரச்சனை ரயில்வே மேம்பாலம், இந்த முறை மேம்பாலம் கட்டி முடிக்கப்படும் பொழுது தான் நான் கதிர் ஆனந்தை வாழ்த்துவேன் என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர். “ஒன்றை சொல்கின்றேன் எனது மகன் என்பதற்காக அல்ல, திமுக கட்சியின் பொதுச்செயலாளர் என்ற முறையில், நான் ஆணையிடுகிறேன், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களை அடிக்கடி சந்தியுங்கள், இரண்டு வாரத்திற்கு ஒருமுறையாவது, பொது மக்களின் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும்.
நான் எப்படி 13 முறை ஒரு தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்ற ரகசியம், கதிர் ஆனந்திற்கு தெரியும், எனவே அந்த ரகசியத்தை கடைப்பிடிக்க வேண்டும் என கதிர் ஆனந்திற்கு ஆணையிடுகிறேன் என பேசினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


7400
Active
11967
Recovered
87
Deaths
Last Updated: Sat 14 June, 2025 at 04:00 pm | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
கிரிக்கெட்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion