மேலும் அறிய

“எனது மகன் என்று இல்லாமல், கட்சியின் பொதுச்செயலாளராக ஆணையிடுகிறேன்! வெற்றி பெற வைத்த மக்களை அடிக்கடி சந்தியுங்கள்” - அமைச்சர் துரைமுருகன்

நான் எப்படி 13 முறை ஒரு தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்ற ரகசியம், கதிர் ஆனந்திற்கு தெரியும், எனவே அந்த ரகசியத்தை கடைப்பிடிக்க வேண்டும் என ஆணையிடுகிறேன்.

 
வாணியம்பாடியில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி கதிர்ஆனந்த் கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு  நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில், திமுக பொதுசெயலாளரும், அமைச்சருமான துரை முருகன் மக்களை சந்திக்குமாறு கதிர் ஆனந்திற்கு கட்டளையிட்டார்,
 
இந்தியா முழுவதும் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார். 
 
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள தனியார் மண்டபத்தில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்காக, திமுக கட்சியின், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது‌. இக்கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் மற்றும் கதிர் ஆனந்த் பங்கேற்றனர். அப்பொழுது திமுக கட்சி தொண்டர்கள்மற்றும் நிர்வாகிகள், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற கதிர் ஆனந்திற்கு சால்வை மற்றும் மாலை, அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

“எனது மகன் என்று இல்லாமல், கட்சியின் பொதுச்செயலாளராக ஆணையிடுகிறேன்! வெற்றி பெற வைத்த மக்களை அடிக்கடி சந்தியுங்கள்” - அமைச்சர் துரைமுருகன்
 
அப்பொழுது பேசிய கதிர் ஆனந்த், “தாய் வீட்டு சீதனம் போல் அன்பும், அரவணைப்பும் எப்போதும் கிடைக்கிறது, வாணியம்பாடி தொகுதிற்கு நான் கொடுத்த வாக்குறுதியையெல்லாம், எவ்வளவு விரைவாக செய்யமுடியுமோ, அவ்வளவு விரைவாக செய்து முடிக்கின்றேன்” என்று தெரிவித்தார்.
 
பின்னர் பேசிய திமுக பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கூறுகையில், “கடந்த முறை கதிர் ஆனந்த் வெற்றி பெற வாணியம்பாடி தான் பங்களித்தது. இந்த தேர்தலிலும், 6 தொகுதிகளில்  கதிர் ஆனந்திற்கு அதிக வாக்கு பெற்ற தொகுதி வாணியம்பாடி தொகுதி தான். என்னிடம் எல்லோரும் கூறினார்கள் வாணியம்பாடி இந்த முறை கைகொடுக்காது என்று, நான் வாணியம்பாடியில் படித்தவன், எனக்கு ஓரளவிற்கு இந்த தொகுதி பற்றி தெரியும், இந்த தொகுதியில் வெற்றி பெற வைத்த அனைவருக்கும் நன்றிகள்” என பேசினார்.

“எனது மகன் என்று இல்லாமல், கட்சியின் பொதுச்செயலாளராக ஆணையிடுகிறேன்! வெற்றி பெற வைத்த மக்களை அடிக்கடி சந்தியுங்கள்” - அமைச்சர் துரைமுருகன்
 
மேலும் இந்த தொகுதியில் பெரும் பிரச்சனை ரயில்வே மேம்பாலம், இந்த முறை மேம்பாலம் கட்டி முடிக்கப்படும் பொழுது தான் நான் கதிர் ஆனந்தை வாழ்த்துவேன்  என தெரிவித்தார்.
 
மேலும்  பேசிய அவர். “ஒன்றை சொல்கின்றேன் எனது மகன் என்பதற்காக அல்ல, திமுக கட்சியின் பொதுச்செயலாளர் என்ற முறையில், நான் ஆணையிடுகிறேன், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களை அடிக்கடி சந்தியுங்கள், இரண்டு வாரத்திற்கு ஒருமுறையாவது, பொது மக்களின் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும்.
 
நான் எப்படி 13 முறை ஒரு தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்ற ரகசியம், கதிர் ஆனந்திற்கு தெரியும், எனவே அந்த ரகசியத்தை கடைப்பிடிக்க வேண்டும் என கதிர் ஆனந்திற்கு ஆணையிடுகிறேன் என பேசினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7400
Active
11967
Recovered
87
Deaths
Last Updated: Sat 14 June, 2025 at 04:00 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

UP Govt: ”செத்து நாலு மாசம் ஆச்சு, கண்டு கொள்ளாத யோகி” 82 பேர் பலி, 37 என பொய் சொல்லும் உ.பி., அரசு?
UP Govt: ”செத்து நாலு மாசம் ஆச்சு, கண்டு கொள்ளாத யோகி” 82 பேர் பலி, 37 என பொய் சொல்லும் உ.பி., அரசு?
DMK: திமுக கல்வித் தந்தைகள் குமுறல் - 25% இடஒதுக்கீடு தாமதத்திற்கு யார் காரணம்? நீதிமன்றம் செய்த சம்பவம்
DMK: திமுக கல்வித் தந்தைகள் குமுறல் - 25% இடஒதுக்கீடு தாமதத்திற்கு யார் காரணம்? நீதிமன்றம் செய்த சம்பவம்
WTC Final 2025: தோல்வியே சந்திக்காத பவுமா... தடுத்து நிறுத்துவாரா பேட் கம்மின்ஸ்...WTC இறுதிப்போட்டி இன்று தொடக்கம்
WTC Final 2025: தோல்வியே சந்திக்காத பவுமா... தடுத்து நிறுத்துவாரா பேட் கம்மின்ஸ்...WTC இறுதிப்போட்டி இன்று தொடக்கம்
New Railway Ticket Rules: தட்கல் டிக்கெட் விதிகளை மாற்றிய ரயில்வே - இனிமே புக்கிங் இப்படி தான் செய்யனுமாம், புதிய விதிகள்
New Railway Ticket Rules: தட்கல் டிக்கெட் விதிகளை மாற்றிய ரயில்வே - இனிமே புக்கிங் இப்படி தான் செய்யனுமாம், புதிய விதிகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

2026ல் கூட்டணி ஆட்சி தான்!EPS-ஐ மதிக்காத அமித் ஷா?அதிருப்தியில் அதிமுக | Amitshah | EPS pressmeet | Annamalaiதமிழ்த்தாய் வாழ்த்தில் பிழை!தவறாக பாடிய பாஜகவினர் அ.மலை கொடுத்த REACTION | Amishah | Madurai | Annamalai | Nainar Nagendranஅமித்ஷாவின் ப்ளான் என்ன? கோபமான அதிமுக தலைகள்! EPS-க்கு கொடுத்த வார்னிங்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UP Govt: ”செத்து நாலு மாசம் ஆச்சு, கண்டு கொள்ளாத யோகி” 82 பேர் பலி, 37 என பொய் சொல்லும் உ.பி., அரசு?
UP Govt: ”செத்து நாலு மாசம் ஆச்சு, கண்டு கொள்ளாத யோகி” 82 பேர் பலி, 37 என பொய் சொல்லும் உ.பி., அரசு?
DMK: திமுக கல்வித் தந்தைகள் குமுறல் - 25% இடஒதுக்கீடு தாமதத்திற்கு யார் காரணம்? நீதிமன்றம் செய்த சம்பவம்
DMK: திமுக கல்வித் தந்தைகள் குமுறல் - 25% இடஒதுக்கீடு தாமதத்திற்கு யார் காரணம்? நீதிமன்றம் செய்த சம்பவம்
WTC Final 2025: தோல்வியே சந்திக்காத பவுமா... தடுத்து நிறுத்துவாரா பேட் கம்மின்ஸ்...WTC இறுதிப்போட்டி இன்று தொடக்கம்
WTC Final 2025: தோல்வியே சந்திக்காத பவுமா... தடுத்து நிறுத்துவாரா பேட் கம்மின்ஸ்...WTC இறுதிப்போட்டி இன்று தொடக்கம்
New Railway Ticket Rules: தட்கல் டிக்கெட் விதிகளை மாற்றிய ரயில்வே - இனிமே புக்கிங் இப்படி தான் செய்யனுமாம், புதிய விதிகள்
New Railway Ticket Rules: தட்கல் டிக்கெட் விதிகளை மாற்றிய ரயில்வே - இனிமே புக்கிங் இப்படி தான் செய்யனுமாம், புதிய விதிகள்
Coimbatore Power Shutdown: கோவையில் இன்றைய(11.06.25) மின்தடை பகுதிகள்.. முழு விவரம்
Coimbatore Power Shutdown: கோவையில் இன்றைய(11.06.25) மின்தடை பகுதிகள்.. முழு விவரம்
Hyundai EV: ரூ.4 லட்சம் தள்ளுபடி, எல்லாமே இருந்தும் வாங்க ஆள் இல்லை - என்ன பிரச்னை? இந்த கார் ஏன் பிடிக்கல?
Hyundai EV: ரூ.4 லட்சம் தள்ளுபடி, எல்லாமே இருந்தும் வாங்க ஆள் இல்லை - என்ன பிரச்னை? இந்த கார் ஏன் பிடிக்கல?
இந்த முறை அதிக தொகுதிகளை கேட்போம்.. ஓப்பனாக பேசிய திருமா.. திமுக கூட்டணியில் குழப்பமா?
இந்த முறை அதிக தொகுதிகளை கேட்போம்.. ஓப்பனாக பேசிய திருமா.. திமுக கூட்டணியில் குழப்பமா?
பிரதமராக 11 ஆண்டுகள்.. மோடியின் செயல்பாடுகள் எப்படி இருக்கு? ஜன் மன் சர்வே சொல்வது என்ன?
பிரதமராக 11 ஆண்டுகள்.. மோடியின் செயல்பாடுகள் எப்படி இருக்கு? ஜன் மன் சர்வே சொல்வது என்ன?
Embed widget