மேலும் அறிய

வேலூர் : வேப்பமரத்தில் வடிந்த  பால்.. அம்மன் பிரசாதம் என்று குவிந்த பக்தர்கள் கூட்டத்தால் பரபரப்பு..!

வேப்பமரத்தில் இருந்து வழிந்த இனிப்பான பால் அம்மனின் பிரசாதம் என்ற நம்பிக்கையுடன் இருந்த வேலூரை சேர்ந்த தாவரவியல் பேராசிரியர் ஒருவர், இந்த சம்பவத்திற்கு  அறிவியல்பூர்வமாக வேறு விளக்கத்தை தந்துள்ளார்.

இந்து மத நம்பிக்கைகளின்படி ஆடிமாதம் என்பது உலகையே காக்கும் சிவபெருமானுக்கே சக்தியை வழங்கும் அம்பாளுக்கு உகந்த மாதம் என்பதால், ஆடி மாதம் முழுவதும், அம்மனுக்கு திருவிழா எடுத்து வழிபட்டால் , தீய சக்திகள் , பஞ்சம் மக்களை நெருங்காது என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் ஆடி மாதத்தில் திருமணம் , திருமண நிச்சயதார்த்தம் , புதுமனை புகுவிழா உள்ளிட்ட சுப காரியங்கள் செய்தால் அம்மனின் கோவத்திற்கு ஆளாகிவிடுவார்கள் என்ற நம்பிக்கையும் பல நூற்றாண்டுகளாக கடைபிடிக்கப்பட்டுவருகிறது .


வேலூர் : வேப்பமரத்தில் வடிந்த  பால்.. அம்மன் பிரசாதம் என்று குவிந்த பக்தர்கள் கூட்டத்தால் பரபரப்பு..!

 இப்படி 'ஆடிமாதம் என்றாலே அம்மனின் மாதம்' என்று சொல்லும் அளவுக்கு , அம்மன் கோவில்களில் , கூழ் ஊற்றுவது , தீ மிதிப்பது போன்ற கொண்டாட்டங்கள் அதிகளவில் காணப்படும் . இந்த மாதத்தில்  நடக்கும் சிறு சிறு நிகழ்வுகளையும் , அம்மனுடன் ஒப்பிட்டுப்பார்ப்பது , மக்களின் வழக்கமாகவே உள்ளது. இதுபோலவே , நேற்று மாலை வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பஜார் பகுதியில் அமைந்திருக்கும் , கிராம நிர்வாக அலுவலகத்தின் எதிரே 25 ஆதி உயரமுள்ள ஒரு வேப்பமரத்தில் நிகழ்ந்த விஷயத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அந்தப் பகுதியை சேர்ந்த சிலர் , இங்குள்ள வேப்பமரத்தின் அடியில் நின்று பேசிக்கொண்டு இருந்தபோது , வேப்பமரத்தில்  இருந்து திடீரென்று வெள்ளை நிறத்தில் பால் போன்ற ஒரு திரவம் அவர்கள் மேல் சொட்ட ஆரம்பித்துள்ளது .


வேலூர் : வேப்பமரத்தில் வடிந்த  பால்.. அம்மன் பிரசாதம் என்று குவிந்த பக்தர்கள் கூட்டத்தால் பரபரப்பு..!

அங்கு இருந்தவர்கள் அதனை உற்று கவனித்தபொழுது , வேப்பமர உச்சியில் இருந்த ஒரு கிளையில் இருந்து , இனிப்பு  தன்மை வாய்ந்த பால் கொட்டுவதை கண்டு ஆச்சரியம் அடைந்தனர் . பிறகு அந்த மரத்தில் அம்மன் இறங்கி இருப்பதாகவும் , இறங்கிய அம்மன் தனது பக்தர்களுக்கு , பிரசாதமாக இந்த இனிப்பான பாலை வழங்குவதாகவும் கருதிய பொது மக்கள் , மரத்தின் அடியில் மூன்று செங்கலை வைத்து அதற்கு மஞ்சள் , குங்குமம் தடவி சூடம் ஏற்றி  வழிபட்டனர். பின்பு சொட்டு சொட்டாக வழிந்த பாலை பிரசாதம் என கருதி ,தங்கள் கைகளில் பிடித்து அவர்களது வீட்டுக்கு எடுத்து சென்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கவே , சம்பவம் அறிந்து அங்கு வந்த அணைக்கட்டு போலீசார் கொரோனா காலகட்டம் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகம் சேராமல் அப்புறப்படுத்தினர். இதனால் பக்தர்களுக்கும் போலீசாருக்கும் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது .


வேலூர் : வேப்பமரத்தில் வடிந்த  பால்.. அம்மன் பிரசாதம் என்று குவிந்த பக்தர்கள் கூட்டத்தால் பரபரப்பு..!

வேப்ப மரத்தில் பால் வடிவது ஏன்?

இந்த பகுதியில் இருக்கும் மக்கள் , வேப்பமரத்தில் இருந்து வழிந்த இனிப்பான பால் அம்மனின் பிரசாதம் என்று நம்பிக்கையில் இருக்க வேலூரை சேர்ந்த தாவரவியல் பேராசிரியர் ஒருவர் இந்த சம்பவத்திற்கு  அறிவியல் பூர்வமாக வேறு விளக்கத்தை தந்துள்ளார். 'பொதுவாக வேப்பமரத்தில் உள்ள மாவுச்சத்தை , வேப்பமர இலைகள் சர்க்கரையாக மாற்றும் . இந்த நேரத்தில்  வேப்பமரத்தின் வேர்களுக்கு அதிகப்படியான தண்ணீர் கிடைத்தால், தண்ணீரின் அளவு அதிகமாகி வேப்பமரப் பட்டையின் அடியிலுள்ள திசு பாதிக்கப்பட்டு, மரத்திலுள்ள மாவுச்சத்து , மரத்தின் பட்டைகளை பிளந்துகொண்டு  இனிப்புப் பால் போன்று வடியும்.
வேலூர் : வேப்பமரத்தில் வடிந்த  பால்.. அம்மன் பிரசாதம் என்று குவிந்த பக்தர்கள் கூட்டத்தால் பரபரப்பு..!

மரத்திலுள்ள தண்ணீரின் அளவு குறையும்போது, பாதிக்கப்பட்ட திசு வளர்ந்து ஓட்டை அடைபட்டு, பால் போன்ற திரவியம் வடிவது நின்றுபோகும். இது வேப்பமரத்தின் இயல்பான தன்மைதான் , அம்மன் இறங்கியுள்ளார் என்பதெல்லாம் மக்களின் நம்பிக்கை மட்டுமே" என்று தெரிவித்தார் .

தலைப்பு செய்திகள்

இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Alto K10 Price: நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
Embed widget