மேலும் அறிய

வேலூர் : வேப்பமரத்தில் வடிந்த  பால்.. அம்மன் பிரசாதம் என்று குவிந்த பக்தர்கள் கூட்டத்தால் பரபரப்பு..!

வேப்பமரத்தில் இருந்து வழிந்த இனிப்பான பால் அம்மனின் பிரசாதம் என்ற நம்பிக்கையுடன் இருந்த வேலூரை சேர்ந்த தாவரவியல் பேராசிரியர் ஒருவர், இந்த சம்பவத்திற்கு  அறிவியல்பூர்வமாக வேறு விளக்கத்தை தந்துள்ளார்.

இந்து மத நம்பிக்கைகளின்படி ஆடிமாதம் என்பது உலகையே காக்கும் சிவபெருமானுக்கே சக்தியை வழங்கும் அம்பாளுக்கு உகந்த மாதம் என்பதால், ஆடி மாதம் முழுவதும், அம்மனுக்கு திருவிழா எடுத்து வழிபட்டால் , தீய சக்திகள் , பஞ்சம் மக்களை நெருங்காது என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் ஆடி மாதத்தில் திருமணம் , திருமண நிச்சயதார்த்தம் , புதுமனை புகுவிழா உள்ளிட்ட சுப காரியங்கள் செய்தால் அம்மனின் கோவத்திற்கு ஆளாகிவிடுவார்கள் என்ற நம்பிக்கையும் பல நூற்றாண்டுகளாக கடைபிடிக்கப்பட்டுவருகிறது .


வேலூர் : வேப்பமரத்தில் வடிந்த  பால்.. அம்மன் பிரசாதம் என்று குவிந்த பக்தர்கள் கூட்டத்தால் பரபரப்பு..!

 இப்படி 'ஆடிமாதம் என்றாலே அம்மனின் மாதம்' என்று சொல்லும் அளவுக்கு , அம்மன் கோவில்களில் , கூழ் ஊற்றுவது , தீ மிதிப்பது போன்ற கொண்டாட்டங்கள் அதிகளவில் காணப்படும் . இந்த மாதத்தில்  நடக்கும் சிறு சிறு நிகழ்வுகளையும் , அம்மனுடன் ஒப்பிட்டுப்பார்ப்பது , மக்களின் வழக்கமாகவே உள்ளது. இதுபோலவே , நேற்று மாலை வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பஜார் பகுதியில் அமைந்திருக்கும் , கிராம நிர்வாக அலுவலகத்தின் எதிரே 25 ஆதி உயரமுள்ள ஒரு வேப்பமரத்தில் நிகழ்ந்த விஷயத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அந்தப் பகுதியை சேர்ந்த சிலர் , இங்குள்ள வேப்பமரத்தின் அடியில் நின்று பேசிக்கொண்டு இருந்தபோது , வேப்பமரத்தில்  இருந்து திடீரென்று வெள்ளை நிறத்தில் பால் போன்ற ஒரு திரவம் அவர்கள் மேல் சொட்ட ஆரம்பித்துள்ளது .


வேலூர் : வேப்பமரத்தில் வடிந்த  பால்.. அம்மன் பிரசாதம் என்று குவிந்த பக்தர்கள் கூட்டத்தால் பரபரப்பு..!

அங்கு இருந்தவர்கள் அதனை உற்று கவனித்தபொழுது , வேப்பமர உச்சியில் இருந்த ஒரு கிளையில் இருந்து , இனிப்பு  தன்மை வாய்ந்த பால் கொட்டுவதை கண்டு ஆச்சரியம் அடைந்தனர் . பிறகு அந்த மரத்தில் அம்மன் இறங்கி இருப்பதாகவும் , இறங்கிய அம்மன் தனது பக்தர்களுக்கு , பிரசாதமாக இந்த இனிப்பான பாலை வழங்குவதாகவும் கருதிய பொது மக்கள் , மரத்தின் அடியில் மூன்று செங்கலை வைத்து அதற்கு மஞ்சள் , குங்குமம் தடவி சூடம் ஏற்றி  வழிபட்டனர். பின்பு சொட்டு சொட்டாக வழிந்த பாலை பிரசாதம் என கருதி ,தங்கள் கைகளில் பிடித்து அவர்களது வீட்டுக்கு எடுத்து சென்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கவே , சம்பவம் அறிந்து அங்கு வந்த அணைக்கட்டு போலீசார் கொரோனா காலகட்டம் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகம் சேராமல் அப்புறப்படுத்தினர். இதனால் பக்தர்களுக்கும் போலீசாருக்கும் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது .


வேலூர் : வேப்பமரத்தில் வடிந்த  பால்.. அம்மன் பிரசாதம் என்று குவிந்த பக்தர்கள் கூட்டத்தால் பரபரப்பு..!

வேப்ப மரத்தில் பால் வடிவது ஏன்?

இந்த பகுதியில் இருக்கும் மக்கள் , வேப்பமரத்தில் இருந்து வழிந்த இனிப்பான பால் அம்மனின் பிரசாதம் என்று நம்பிக்கையில் இருக்க வேலூரை சேர்ந்த தாவரவியல் பேராசிரியர் ஒருவர் இந்த சம்பவத்திற்கு  அறிவியல் பூர்வமாக வேறு விளக்கத்தை தந்துள்ளார். 'பொதுவாக வேப்பமரத்தில் உள்ள மாவுச்சத்தை , வேப்பமர இலைகள் சர்க்கரையாக மாற்றும் . இந்த நேரத்தில்  வேப்பமரத்தின் வேர்களுக்கு அதிகப்படியான தண்ணீர் கிடைத்தால், தண்ணீரின் அளவு அதிகமாகி வேப்பமரப் பட்டையின் அடியிலுள்ள திசு பாதிக்கப்பட்டு, மரத்திலுள்ள மாவுச்சத்து , மரத்தின் பட்டைகளை பிளந்துகொண்டு  இனிப்புப் பால் போன்று வடியும்.
வேலூர் : வேப்பமரத்தில் வடிந்த  பால்.. அம்மன் பிரசாதம் என்று குவிந்த பக்தர்கள் கூட்டத்தால் பரபரப்பு..!

மரத்திலுள்ள தண்ணீரின் அளவு குறையும்போது, பாதிக்கப்பட்ட திசு வளர்ந்து ஓட்டை அடைபட்டு, பால் போன்ற திரவியம் வடிவது நின்றுபோகும். இது வேப்பமரத்தின் இயல்பான தன்மைதான் , அம்மன் இறங்கியுள்ளார் என்பதெல்லாம் மக்களின் நம்பிக்கை மட்டுமே" என்று தெரிவித்தார் .

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Happy Pongal 2026 Wishes: தைத்திருநாளில் நட்புக்கும் உறவுக்கும் அனுப்ப 10 புதுமையான வாழ்த்துகள் இதோ!
Happy Pongal 2026 Wishes: தைத்திருநாளில் நட்புக்கும் உறவுக்கும் அனுப்ப 10 புதுமையான வாழ்த்துகள் இதோ!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Happy Pongal 2026 Wishes: தைத்திருநாளில் நட்புக்கும் உறவுக்கும் அனுப்ப 10 புதுமையான வாழ்த்துகள் இதோ!
Happy Pongal 2026 Wishes: தைத்திருநாளில் நட்புக்கும் உறவுக்கும் அனுப்ப 10 புதுமையான வாழ்த்துகள் இதோ!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
DMK Congress: கூட்டாட்சி கிடையாது.. தவெக-வுடன் காங்கிரஸ் இணைந்தால் திமுக பலம் குறையாது - ஆ.ராசா காட்டம்
DMK Congress: கூட்டாட்சி கிடையாது.. தவெக-வுடன் காங்கிரஸ் இணைந்தால் திமுக பலம் குறையாது - ஆ.ராசா காட்டம்
DMK ELECTION PLAN: கூட்டணி ஆட்சி.! கிரீன் சிக்னல் கொடுத்த ராகுல்.? திமுகவை விடாமல் நெருக்கும் காங்கிரஸ்- நடப்பது என்ன.?
கூட்டணி ஆட்சி.! கிரீன் சிக்னல் கொடுத்த ராகுல்.? திமுகவை விடாமல் நெருக்கும் காங்கிரஸ்- நடப்பது என்ன.?
TVK Vijay: ஜனநாயகன் பிரச்னை.. பிரதமர் மோடிக்கு எதிராக வீடியோ வெளியிட விஜய் முடிவு?
TVK Vijay: ஜனநாயகன் பிரச்னை.. பிரதமர் மோடிக்கு எதிராக வீடியோ வெளியிட விஜய் முடிவு?
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Embed widget