ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
தற்கொலை செய்து கொண்ட பகுதிநேர ஆசிரியர் கண்ணன் குடும்பத்திற்கு ரூபாய் 50 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் பகுதி நேர ஆசிரியர்கள் தங்களது பணி நிரந்தரம், சம ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆசிரியர் தற்கொலை:
இந்த நிலையில், நேற்று போராட்டம் நடத்தியபோது பெரம்பலூரைச் சேர்ந்த பகுதிநேர ஆசிரியர் கண்ணன் தற்கொலை முயற்சி செய்த நிலையில், அவர் இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது மரணம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
அவரது மரணம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
அதிர்ச்சி:
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பொய் வாக்குறுதி தந்து, ஆட்சிக்கு வந்தபின் போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர் கண்ணனின் உயிரை பறித்துள்ள விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள். திமுக கொடுத்த வாக்குறுதிகளால் பணி நிரந்தரம் ஆகிவிடும் எனும் நம்பிக்கையில் காத்திருந்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன், விஷம் அருந்தி உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பொய் வாக்குறுதி தந்து, ஆட்சிக்கு வந்தபின் போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர் திரு.கண்ணன் அவர்களின் உயிரை பறித்துள்ள விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள்.
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) January 14, 2026
திமுக கொடுத்த வாக்குறுதிகளால் பணி நிரந்தரம் ஆகிவிடும் எனும் நம்பிக்கையில்…
அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும் சக ஆசிரியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். ஆசிரியர் ஒருவர் மரணித்துவிட்ட கவலை கொஞ்சம் கூட இல்லாமல், கவிதை பாட சொல்லி "வைப்" செய்து கொண்டிருக்கிறாரே மு.க.ஸ்டாலின்.
ரூபாய் 50 லட்சம் நஷ்ட ஈடு:
முதல்வர் என்ற உயர்வான பதவிக்கே இந்த Failure Model முதல்வர் ஒரு இழுக்கு. உயிரிழந்த கண்ணனின் குடும்பத்தினருக்கு இந்த அரசு உடனடியாக ரூ.50 லட்சம் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன். மேலும் போராட்டத்தில் ஈடுபடுவோர், இதுபோன்ற முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்று உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
நெருங்கும் தேர்தல்:
தமிழ்நாட்டில் இன்னும் 4 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான டேப்ஸ் திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியது. அதற்கு ஒரு தரப்பினர் வரவேற்பு தெரிவித்தாலும், ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பகுதி நேர ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகளை தொடர்ந்து முன்வைத்து போராட்டத்தை பல்வேறு வகையில் முன்னெடுத்து வருகின்றனர்.






















