மேலும் அறிய

கார்த்திகை தீபம்: திருவண்ணாமலை கோயிலில் பக்தர்கள் இன்றி நடந்த பந்தக்கால் நடும் நிகழ்ச்சி

’’நவம்பர் 19 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு திருக்கோவில் கருவறையில் பரணி தீபமும் அன்று மாலை 6 மணிக்கு திருக்கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்படும்’’

நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும், பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும் விளங்கக் கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. திருவிழாவிற்கு தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுமார் 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வர். இந்நிலையில் இந்த பிலவ ஆண்டு திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் கொடியேற்று விழா வருகின்ற நவம்பர் 10 ஆம் தேதி காலை திருக்கோவிலில் அண்ணாமலையார் சன்னதியின் முன்புறம், 64 அடி உயரம் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கி முக்கிய விழாவான வெள்ளித் தேர் திருவிழா நவம்பர் 15 ஆம் தேதியும், மகா ரதம் என்னும் பஞ்ச மூர்த்திகளின் மகா தேரோட்டம் நவம்பர் 16 ஆம் தேதியும்  அதனைத் தொடர்ந்து நவம்பர் 19 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு திருக்கோவில் கருவறையில் பரணி தீபமும் அன்று மாலை 6 மணிக்கு திருக்கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்படும். இந்தத் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் 10 நாட்களும் காலை இரவு என இரு வேளைகளிலும் சுவாமி அம்பாள் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பர்.

கார்த்திகை தீபம்: திருவண்ணாமலை கோயிலில் பக்தர்கள் இன்றி நடந்த பந்தக்கால் நடும் நிகழ்ச்சி

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பூர்வாங்க பணிகளுக்காக பந்தல் அமைத்தல், சுவாமி வீதி உலா வரும் வாகனங்கள் பழுது பார்த்தல் மற்றும் வர்ணம் தீட்டுதல், தேர்கள் பழுதுபார்த்தல் உள்ளிட்ட திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதற்காக இன்று காலை திருக்கோவிலில் உள்ள சம்பந்த கணேசருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.

கார்த்திகை தீபம்: திருவண்ணாமலை கோயிலில் பக்தர்கள் இன்றி நடந்த பந்தக்கால் நடும் நிகழ்ச்சி

பின்னர் சம்மந்த கணேசர் சந்நதியில் பந்தக்காலுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டது. திருக்கோவிலின் உள்ளே ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, தமிழகத்திலேயே இரண்டாவது உயரமான ராஜகோபுரம் முன்புள்ள 16 கால் மண்டபம் வளாகத்தில் காலை 05:41 மணிக்கு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க  உத்திராட நட்சத்திரம்  சிம்ம லக்னத்தில், பந்தக்கால் முகூர்த்தம் விழா நடைபெற்றது. கொரோனா வைரஸ் தொற்றினால் இந்த ஆண்டு பக்தர்களின்றி சிவாச்சாரியார்கள், கோவில் பணியாளர்கள்  மட்டுமே கலந்துகொண்டு பந்தக்கால் முகூர்த்தம் விழாவினை நடத்தினர். இந்த விழாவில்  திருக்கோவில் இணை ஆணையர் (கூடுதல்) அசோக்குமார் , மாவட்ட எஸ்பி பவன்குமார் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

முன்னாள் அமைச்சர் கேசி வீரமணிக்கு சொந்தமான ஓட்டல்கள், கல்லூரிகள், மண்டபம் உள்ளிட்ட பல இடங்களில் தொடரும் சோதனை..

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

இன்று தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடர்.. கார்குண்டு வெடிப்பு முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் வரை - அனல் பறக்கப்போகும் வாதம்
இன்று தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடர்.. கார்குண்டு வெடிப்பு முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் வரை - அனல் பறக்கப்போகும் வாதம்
TN Weather Update: வடமாவட்டங்களை ஏமாற்றிப்போன டிட்வா புயல், கனமழை தொடருமா? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: வடமாவட்டங்களை ஏமாற்றிப்போன டிட்வா புயல், கனமழை தொடருமா? தமிழக வானிலை அறிக்கை
சாதிய ஆணவம்..அடித்து, சுட்டு, தலையை நசுக்கி கொலை, காதலனின் உடலுடன் திருமணம் செய்துகொண்ட காதலி
சாதிய ஆணவம்..அடித்து, சுட்டு, தலையை நசுக்கி கொலை, காதலனின் உடலுடன் திருமணம் செய்துகொண்ட காதலி
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இன்று தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடர்.. கார்குண்டு வெடிப்பு முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் வரை - அனல் பறக்கப்போகும் வாதம்
இன்று தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடர்.. கார்குண்டு வெடிப்பு முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் வரை - அனல் பறக்கப்போகும் வாதம்
TN Weather Update: வடமாவட்டங்களை ஏமாற்றிப்போன டிட்வா புயல், கனமழை தொடருமா? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: வடமாவட்டங்களை ஏமாற்றிப்போன டிட்வா புயல், கனமழை தொடருமா? தமிழக வானிலை அறிக்கை
சாதிய ஆணவம்..அடித்து, சுட்டு, தலையை நசுக்கி கொலை, காதலனின் உடலுடன் திருமணம் செய்துகொண்ட காதலி
சாதிய ஆணவம்..அடித்து, சுட்டு, தலையை நசுக்கி கொலை, காதலனின் உடலுடன் திருமணம் செய்துகொண்ட காதலி
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
சென்னை ; காரில் கடத்தி வரப்பட்ட 265 கிலோ புகையிலை !! அதிரடியாக பறிமுதல் செய்த போலீசார்
சென்னை ; காரில் கடத்தி வரப்பட்ட 265 கிலோ புகையிலை !! அதிரடியாக பறிமுதல் செய்த போலீசார்
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Embed widget