மேலும் அறிய

எல்லையில் அந்நியர்கள் ஊடுருவலை காட்டிக்கொடுமா இந்த கருவி? அரசுப்பள்ளி மாணவன் கண்டுபிடித்த சாஃப்ட்வேர்..

இந்திய எல்லையில் அந்நியர்கள் நுழைவதை உடனடியாக தெரிவிக்கும் வகையிலும், மின்சாதன பொருட்களில் ஏற்படும் தீயினை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் எனவும் அரசு பள்ளி மாணவன் புதிய மென்பொருளை கண்டுபிடித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது.மேலும் பள்ளி கல்லூரிக்லுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் திருவண்ணாமலை அருகே பள்ளி மாணவன் கொரோனா கால விடுமுறையை வீணாக்காமல் விஞ்ஞான ரீதியாக புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்துள்ளார். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பார்கள் இதற்கும் உதாரணமாக மாவட்டம் தச்சம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 9- ம் வகுப்பு மாணவன் இளம் விஞ்ஞானியாக உருவாகி வருகிறார்.

இந்த மாணவன் மக்கள் மனதில் இடம் பிடிக்கவும் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வழியில் நாட்டு பற்றுடன் நாட்டு மக்களுக்கும் ராணுவத்திற்கும் பயன்படும் வகையில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி அறிமுகப்படுத்தியும் வருகிறார். யார் அந்த மாணவன்?


எல்லையில் அந்நியர்கள் ஊடுருவலை காட்டிக்கொடுமா இந்த கருவி? அரசுப்பள்ளி மாணவன் கண்டுபிடித்த சாஃப்ட்வேர்..

 

திருவண்ணாமலை மாவட்டம் தலையாம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. இவருடைய மனைவி கலைவாணியும் இருவரும் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்களின் மகன் ஜவகர் வயது (15), இவர் தச்சம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பள்ளி மாணவன் சிறுவயதில் இருந்தே நாம் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் பல்வேறு சிறிய சிறிய சாதனங்களை கண்டுபிடித்துள்ளார். நமது நாட்டில் எல்லைப்பகுதியில் அந்நிய சக்திகளான எதிரிநாட்டினர் நமது நாட்டில் நுழையாத வகையில் ராணுவ வீரர்கள் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு பயன்படும் வகையிலும் நமது நாட்டின் மீது உள்ள பற்றிலும், ஒரு அந்நிய நபர் எந்த வகையில் வருகிறார் எவ்வளவு தூரத்தில் வருகிறார் என்பதைக் கண்டறியும் வகையில், மாணவன் கண்டுபிடித்துள்ள கருவியின் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் பல்வேறு தொழில் நிறுவனங்களில் ஏற்படும் தீ விபத்துகள் அதன்மூலம் அதிகளவில் ஏற்படும் உயிரிழப்பு உள்ளிட்டவைகளை தடுக்கும் வகையில் ஒரு மென்பொருளை உருவாக்கி அதன்மூலம் மின்சாதனங்களில் ஏற்படும் தீ விபத்துகளை தடுக்கவேண்டும் என்று மாணவன் ஜவஹருக்கு தோன்றியது. இந்த இரண்டு கருவிகளையும் உருவாக்கும் முயற்சியில் கடந்த 2 வருடங்களாக ஈடுபட்ட அவர், தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக தானாக இயங்கி தீயை அணைக்கும் கருவி ஒன்றையும் கண்டுபிடித்தார்.

 


எல்லையில் அந்நியர்கள் ஊடுருவலை காட்டிக்கொடுமா இந்த கருவி? அரசுப்பள்ளி மாணவன் கண்டுபிடித்த சாஃப்ட்வேர்..

 

கண்டுபிடிக்கப்பட்டுள்ள கருவிகள் குறித்து ABPNADU குழுமத்திற்கு மாணவர் ஜவஹர் கூறுகையில் 

நமது நாடு இந்திய எல்லையில் பாதுகாப்பில் இருக்கும் ராணுவ வீரர்களுக்கு ஒரு மென்பொருள் சாதனம் கண்டுபிடித்துள்ளேன். இதில் அந்நியர்கள் நுழைவதை உடனடியாக தெரிவிக்கவும், குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் ஊடுருவுவதை தடுக்கவும் ஒரு கருவி கண்டுபிடித்துள்ளேன். தற்போது கண்டுபிடித்துள்ள மென்பொருள் கருவி 10 மீட்டர் வரை அந்நியர்கள் வருவதை தெரியப்படுத்தும் வகையில் உள்ளது. அதனை மேம்படுத்தினால் 50 கிலோமீட்டர் வரை அந்நியர்கள் ஊடுருவலை கண்டுபிடித்து தடுத்துவிடலாம் என்றும் மேலும் வெடிகுண்டு உள்ளிட்ட ஆயுதங்கள் எல்லை மீறி கொண்டு வரப்பட்டாலும் அதனை இந்த கருவி காட்டிக் கொடுத்துவிடும் என்று மாணவர் விளக்கம் அளித்தார். மேலும் இந்த கண்டுபிடிப்பை இந்திய ராணுவத்திற்கு ஒப்படைக்வும் உள்ளேன்‌ என்று ‌தெரிவித்தார்.


எல்லையில் அந்நியர்கள் ஊடுருவலை காட்டிக்கொடுமா இந்த கருவி? அரசுப்பள்ளி மாணவன் கண்டுபிடித்த சாஃப்ட்வேர்..

 

அதேபோல் பொதுவாக ஏ.சி., வாஷிங்மெஷின் உள்ளிட்ட எந்திரங்களில் தீ விபத்து ஏற்பட்டால் அதன் மூலம் ஏற்படும் வாயுக்களால் உயிரிழப்பு ஏற்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் சென்சார் மூலம் செயல்படும். எந்திரத்தில் தீ ஏற்படும்போது உடனடியாக எந்திரத்திற்கு வரும் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. அடுத்த வினாடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்துகிறது. தானியங்கி முறையில் இந்த மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.

நமது நாட்டின் முதுகெலும்பாக உள்ள விவசாயிகளின் தண்ணீர் பஞ்சதை போக்கும் வகையில் தண்ணீரை சிக்கனமாக பயண்படுத்தும் வகையில் விவசாயிகளுக்கு ஏற்றாற்போல் பயிர்கள் தண்ணீர் இன்றி வறட்சி ஏற்பட்டால் தானாக தண்ணீர் வந்து ஊற்றும் வகையில் ஒரு மென்பொருளை கண்டுபிடித்து வருகிறேன் என்றும், எனது வருங்காலங்களில் நான் சிறியதாக ஒரு ஆய்வுகூடத்தை ஏற்படத்தி நமது நாட்டு மக்களுக்கு பயன்படும் வகையில் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து பயனுள்ளவற்றை உருவாக்க விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Maruti Cars 2026: மாருதியின் லிஸ்டில் நான்கு கார்கள் - ரெண்டு EV கன்ஃபார்ம், ஃப்ளெக்ஸ் ஃபியூல் மாடலும் - விவரங்கள் இதோ
Maruti Cars 2026: மாருதியின் லிஸ்டில் நான்கு கார்கள் - ரெண்டு EV கன்ஃபார்ம், ஃப்ளெக்ஸ் ஃபியூல் மாடலும் - விவரங்கள் இதோ
ABP Premium

வீடியோ

TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Maruti Cars 2026: மாருதியின் லிஸ்டில் நான்கு கார்கள் - ரெண்டு EV கன்ஃபார்ம், ஃப்ளெக்ஸ் ஃபியூல் மாடலும் - விவரங்கள் இதோ
Maruti Cars 2026: மாருதியின் லிஸ்டில் நான்கு கார்கள் - ரெண்டு EV கன்ஃபார்ம், ஃப்ளெக்ஸ் ஃபியூல் மாடலும் - விவரங்கள் இதோ
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
HOLIDAY: 2 நாள் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை
2 நாள் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Embed widget