மேலும் அறிய

காஞ்சியை தொடர்ந்து ஆரணியிலும் வீட்டில் கருப்பு கொடியை ஏற்றி கைத்தறி நெசவாளர்கள் போராட்டம்

ஆரணியில் கைத்தறி பட்டு விசைத்தறியில் உற்பத்தி செய்வதை தடை செய்ய மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி நெசவாளர்கள் வீட்டில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்.

திருவண்ணாமலை (Tiruvannamalai News):  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி என்றாலே பட்டுக்கு பெயரெடுத்த ஊராகும் காஞ்சிபுரம் பட்டுக்கு நிகராக ஆரணி பட்டு விளங்கி வருகின்றது. மேலும் ஆரணி நகரப்பகுதி, சேவூர், தேவிகாபுரம், எஸ்.வி.நகரம், முள்ளிப்பட்டு, மூனுகபட்டு , ஒண்ணுபுரம் உள்ளிட்ட சுற்றி வட்டார பகுதிகளில் 100-க்கும்மேற்பட்ட கிராமங்களில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறி பட்டு நெசவாளர்கள் இந்த தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.மேலும் கடந்த சில மாதங்களாக ஆரணி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கைத்தறி பட்டு புடவை நெய்வர்த்க்கான வடிவமைப்பை வைத்து விசைதறியில் (பவர்லூம் ) புடவை நெய்ந்து அதனை கைத்தறி பட்டு என்று கூறி குறைந்த விலையில் விற்பனை செய்யபட்டு வருவதாகவும், இதனால் கைத்தறி பட்டு நெசவாளர்கள்வாழ்வாதாரம் பாதிக்கபடுவதாக கைத்தறி பட்டு நெசவாளர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

 

 


காஞ்சியை தொடர்ந்து ஆரணியிலும் வீட்டில் கருப்பு கொடியை ஏற்றி கைத்தறி நெசவாளர்கள் போராட்டம்

இதனையொடுத்து கைத்தறி நெசவாளர்கள் கடந்த வாரம் விசைத்தறியை தடை செய்ய கோரி மாபெரும் கண்டன ஊர்வலம் மற்றும் ஓருநாள் அடையாள உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இருப்பினும் ஆரணி பகுதிகளில் தொடர்ந்து விசைத்தறி இயங்குகின்றன. இதனால் இன்று தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கைத்தறி நெசவாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஆரணி நகரம் ,சேவூர் முள்ளிபட்டு, வேலப்பாடி,கீழ்பட்டு, நெடுங்குணம், தேவிகாபுரம் திருமணி, வாழைப்பந்தல், கொருக்காத்தூர், மெய்யூர் , ஒண்ணுபுரம், துருவம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீடுகளில் கருப்பு கொடி ஏந்தியும் நெசவாளர்கள் கருப்பு சட்டை அணிந்து கண்டன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 


காஞ்சியை தொடர்ந்து ஆரணியிலும் வீட்டில் கருப்பு கொடியை ஏற்றி கைத்தறி நெசவாளர்கள் போராட்டம்

நெசவாளர்களின் கோரிக்கையான பட்டு கைத்தறி ரகங்களை விசைத்தறையில் பவர்லூம் உற்பத்தியை செய்வதை தடை செய்ய வேண்டும் என்றும், கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் 1985 அமல்படுத்த வேண்டும் என்றும், அதிகாரிகள் விசைத்தறிகளை ஆய்வு செய்வதை வெளிபடை தன்மையாக ஆய்வு செய்ய வேண்டும், அண்டை மாநிலங்களில் விசைத்தறியில் உற்பத்தி செய்யும் பட்டு ரகங்களை தடை செய்ய வேண்டும், என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டத்தில் எடுத்துரைத்தனர். மேலும் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் போராட்டம் நடத்த போவதாக கைத்தறி நெசவாளர்கள் தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பட்டு கைத்தறி உற்பத்தியாளர் சங்கத் தலைவர் குருராஜாராவ் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வீரபத்திரன், பாபு, அப்பாசாமி ஜெயக்குமார் அன்பு கருணாகரன் இளங்கோ பரணி மற்றும் கைத்தறி நெசவாளர்கள் பங்கேற்றனர்.

தலைப்பு செய்திகள்

Premalatha vs Vijay : தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
Nagercoil Sabarivarman :நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
EV Car Charging : மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
Vanathi Srinivasan: விசாரணை கைதி மரணம்.. காவல் நிலையம் சித்ரவதைக்கூடமா? .. விஜயை விளாசிய வானதி சீனிவாசன்!
Vanathi Srinivasan: விசாரணை கைதி மரணம்.. காவல் நிலையம் சித்ரவதைக்கூடமா? .. விஜயை விளாசிய வானதி சீனிவாசன்!

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Premalatha vs Vijay : தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
Nagercoil Sabarivarman :நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
EV Car Charging : மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
Vanathi Srinivasan: விசாரணை கைதி மரணம்.. காவல் நிலையம் சித்ரவதைக்கூடமா? .. விஜயை விளாசிய வானதி சீனிவாசன்!
Vanathi Srinivasan: விசாரணை கைதி மரணம்.. காவல் நிலையம் சித்ரவதைக்கூடமா? .. விஜயை விளாசிய வானதி சீனிவாசன்!
ஒரே ஆண்டில் ஒரு லட்சம் ஏக்கர் காலி! தமிழகத்தை உலுக்கும் தண்ணீர் பற்றாக்குறை! முழு விபரம் உள்ளே!
ஒரே ஆண்டில் ஒரு லட்சம் ஏக்கர் காலி! தமிழகத்தை உலுக்கும் தண்ணீர் பற்றாக்குறை! முழு விபரம் உள்ளே!
உனக்கு காதலி இருக்கா? .. வயசு என்ன?.. டார்ச்சர் பண்றீங்களேப்பா.. நிர்வாகியிடம் திண்டுக்கல் சீனிவாசன் டென்ஷன்!
உனக்கு காதலி இருக்கா? .. வயசு என்ன?.. டார்ச்சர் பண்றீங்களேப்பா.. நிர்வாகியிடம் திண்டுக்கல் சீனிவாசன் டென்ஷன்!
CM Vijay:
CM Vijay: "இந்த பக்கமே வரக்கூடாது.." கூட்டணி கட்சிகளை விரட்டிவிட்ட முதலமைச்சர் விஜய் - எதற்காக?
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
Embed widget