மேலும் அறிய

மருத்துவ சிகிச்சைகளுக்காக மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்ட பேரறிவாளனின் பரோல்

’’கடந்த 3 மாதங்களாக பரோல்   காலத்தில் பின்பற்றப்பட்டதோ அதே விதிமுறைகளை தொடர்டந்து இந்த 30 நாட்களிலும் பின்பற்றப்பட வேண்டும் என காவல்துறைக்கு அறிவுத்தப்பட்டுள்ளது’’

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், கடந்த 30 வருடத்திற்கும் மேலாக பல்வேறு சிறைகளில் தண்டனை அனுபவித்து வரும் அறிவு (எ) பேரறிவாளனுக்கு (49) சிறுநீரக தொற்று உள்ளிட்ட உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு சிகிச்சை பெற வேண்டி இருந்ததால், அவருக்கு 30 நாட்கள் பொது விடுப்பு வழங்கவேண்டும் என்று அவரது தாய் அற்புதம் அம்மாள் கடந்த  மே மாதம் 10-ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு  மனு அளித்திருந்தார். அற்புதம் அம்மாள் மனுவைப் பரிசீலித்த முதல்வர் மே மாதம் 16ஆம் தேதி, பேரறிவாளனுக்கு 30  நாட்கள் பொது விடுப்பு அளிக்க  உத்தரவிட்டார்.
 
மருத்துவ சிகிச்சைகளுக்காக மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்ட பேரறிவாளனின் பரோல்
 
இதனையடுத்து ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு காவல்துறை பாதுகாப்புடன், கடந்த மே மாதம் 28ஆம் தேதி பரோலில் அழைத்து வரப்பட்ட பேரறிவாளனுக்கு, வீட்டில் இருந்த படியே சிறுநீரக தொற்று உள்ளிட்ட உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பேரறிவாளனின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால் ஜூன் மாதத்தோடு முடிவடையும் அவரது பரோலை மேலும் ஒரு மாதம் நீடிக்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள்  தமிழக அரசுக்கு மீண்டும் கோரிக்கை வைத்தார். இதனால் ஜூலை 28ஆம் தேடி வரை அவரது பரோலை தமிழ் நாடு அரசு நீடித்து அனுமதி வழங்கியது. இந்நிலையில், கடந்த  ஜூலை 28ஆம் தேதி  பேரறிவாளன் பரோல் முடிவடைந்து சிறை திரும்பவேண்டிய நிலையில்  அவருக்கு ரத்த அழுத்தம், மூட்டுவலி, வயிற்றுக்கோளாறு, சிறுநீரக தொற்று என உடல்நிலை மோசம் அடைந்ததால் , இரண்டாவது முறையாக அவரது பரோல் மேலும் ஒரு மாதம் அதாவது ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரை  நீட்டிக்கப்பட்டது.
 
 
இரண்டு முறை பரோல் நீடிக்கப்பட்டு மே மாதம் 28ஆம் தேடி முதல் வீட்டிலிருந்தபடியே சிகிச்சை பெற்றுவந்த பேரறிவாளனுக்குக் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர்  திடீரென மூட்டுவலி , சிறுநீரக தொற்று உள்ளிட்ட தொந்தரவால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பேரறிவாளனை, அவர் ஏற்கனவே சிகிச்சை பெற்றுவந்த விழுப்புரம் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல அவரது குடும்பத்தார் முடிவுசெய்தனர். அவரது தாய் அற்புதம்மாள், சிறைத்துறை அதிகாரிகளுக்கு வைத்த கோரிக்கையின் அடிப்படையில்,  டி.எஸ்.பி மகேஷ் தலைமையில் திருப்பத்தூர் மாவட்டம் கந்தலி  காவல் நிலைய ஆய்வாளர்  மணிமாறன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் விழுப்புரம் நகரம், காந்தி சிலை அருகே செயல்பட்டுவரும்  தனியார்   மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு  மீண்டும் ஜோலார் பேட்டையிலுள்ள அவரது வீட்டிற்கு  போலீஸ் பாதுகாப்புடன்  தங்கவைக்கப்பட்டுள்ளார் .
 

மருத்துவ சிகிச்சைகளுக்காக மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்ட பேரறிவாளனின் பரோல்
 
இன்றுடன் அவரது பரோல் முடிவடையும் நிலையில் மூன்றாவது முறையாக அவரது உடல்நலம் கருதி பேரறிவாளனுக்கு மேலும் 30 நாட்கள் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 3 மாதங்களாக பரோல்  காலத்தில் பின்பற்றப்பட்டதோ அதே விதிமுறைகளை தொடர்டந்து இந்த 30 நாட்களிலும் பின்பற்றப்பட வேண்டும் என்று காவல்துறையினருக்கு சிறைத்துறை நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது .
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
Rahul Gandhi: தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
TN Power Shutdown: மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
ABP Premium

வீடியோ

அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah
ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
Rahul Gandhi: தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
TN Power Shutdown: மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
Top 5 Scooters in India: Activa முதல் Access வரை; இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள், விலை, அம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
Activa முதல் Access வரை; இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள், விலை, அம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
Honda Shine 100: குறைந்த விலை.. 65 கிமீ மைலேஜ்.. ஸ்பிளெண்டருக்கு டஃப் கொடுக்கும் பைக் இதுதான்...
குறைந்த விலை.. 65 கிமீ மைலேஜ்.. ஸ்பிளெண்டருக்கு டஃப் கொடுக்கும் பைக் இதுதான்...
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
Trump Karoline Leavitt: பெண்கள வர்ணிச்சு மாட்டுறதே இந்த ட்ரம்புக்கு வேலையா போச்சு; இந்த முறை யார்னு பாருங்க.?
பெண்கள வர்ணிச்சு மாட்டுறதே இந்த ட்ரம்புக்கு வேலையா போச்சு; இந்த முறை யார்னு பாருங்க.?
Embed widget