மேலும் அறிய

Crime: காசோலையை பயன்படுத்தி தொழிலதிபர் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.42 லட்சம் அபேஸ்! முன்னாள் வங்கி ஊழியர் கைது!

வெற்று காசோலையை பயன்படுத்தி வேலூர் தொழிலதிபர் வங்கிக்கணக்கில் இருந்து ரூபாய் 42 லட்சம் அபேஸ் செய்த முன்னாள் வங்கி ஊழியரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் பிச்சாண்டி (வயது 68). இவர் வேலூர் அடுத்த துத்திப்பட்டில் கல்குவாரி வைத்து நடத்தி வருகிறார். அதைத்தவிர சொந்தமாக ஏராளமான லாரிகள் வைத்து தொழில் செய்து வருகிறார். பிச்சாண்டி வேலூர் அல்லாபுரத்தில் உள்ள தேசிய வங்கியில் கணக்கு வைத்திருக்கும் நிலையில் வங்கிக்கு அடிக்கடி சென்று வந்த சமயத்தில் அங்கு காசாளராக (கேசியர்) பணியாற்றிய வேலூர் கொசப்பேட்டையை சேர்ந்த உமாபதியுடன் வயது (53) பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு பிச்சாண்டி தனக்கு சொந்தமான சுமார் 15 ஆயிரம் சதுர அடி நிலத்தை ரூ.1 கோடியே 32 லட்சத்துக்கு விற்பனை செய்ய உள்ளதாகவும், நிலம் வாங்குவதற்கு யாராவது விருப்பம் தெரிவித்தால் இதுபற்றி சொல்லுங்கள் என்று காசாளர் உமாபதியிடம் தெரிவித்துள்ளார். உமாபதி அந்த நிலத்தை தனது குடும்பத்தினர் பெயரில் வாங்க விரும்புவதாக கூறி முதற்கட்டமாக நிலத்துக்கு ரூ.52 லட்சம் கொடுத்து மீதமுள்ள பணத்தை விரைவில் கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.

 


Crime: காசோலையை பயன்படுத்தி தொழிலதிபர் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.42 லட்சம் அபேஸ்! முன்னாள் வங்கி ஊழியர் கைது!

மேலும் ரூ.52 லட்சம் கொடுத்தற்காக பிச்சாண்டியிடம் இருந்து 3 வெற்று காசோலையை அவரின் கையெழுத்துடன் உமாபதி பெற்றுள்ளார். இதற்கிடையே உமாபதியால் மீதமுள்ள பணத்தை கொடுக்காததால் கடந்த 2019-ம் ஆண்டு பிச்சாண்டி ரூ.52 லட்சத்தை வட்டியுடன் சேர்த்து ரூ.63 லட்சமாக உமாபதியிடம் கொடுத்துள்ளார். ஆனால் அவரிடம் கொடுத்திருந்த வெற்று காசோலைகளை திரும்ப பெறவில்லை. இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு பிச்சாண்டியின் வங்கிக்கணக்கில் இருந்து ரூபாய் 42 லட்சம் திடீரென மாயமானது. அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து வங்கிக்கு சென்று விசாரித்துள்ளார். அப்போது அவர் கையெழுத்து போட்டு கொடுத்திருந்த வெற்று காசோலையை, காசளர் உமாபதி பயன்படுத்தி ரூ.42 லட்சத்தை எடுத்து தெரியவந்தது. 

 


Crime: காசோலையை பயன்படுத்தி தொழிலதிபர் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.42 லட்சம் அபேஸ்! முன்னாள் வங்கி ஊழியர் கைது!

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வங்கி காசாளைர் உமாபதியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 2013-ம் ஆண்டு வங்கியில் பணிபுரிந்த தற்காலிக ஊழியர்களை பணிநிரந்தரம் செய்வதாக கூறி உமாபதி பலரிடம் பல லட்சம் ரூபாய் வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. அதன்பேரில் அவர் 40 மாதங்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் அந்த வழக்கு தொடர்பாக கடந்த மாதம் உமாபதி பணிநீக்கம் செய்யப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Madurai HC: சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது - உயர்நீதிமன்ற கிளை
Madurai HC: சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது - உயர்நீதிமன்ற கிளை
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
"அதிமுகவின் மடியில் உள்ள கனத்தை வேறு ஒருவர் பறிக்க முயற்சி" பேரவையில் போட்டுத்தாக்கிய தங்கம் தென்னரசு...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sivaangi Krishnakumar | சன் டிவியில் இணைந்த சிவாங்கிவிஜய் டிவி உடன் சண்டையா?அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள்Ambur Accident News | ஒரே SPOT... 3 விபத்துகள் சுக்கு நூறாய் போன Tourist Van திகில் CCTV காட்சிகள்Velmurugan | திமுக கூட்டணிக்கு Bye! அன்புமணி ராமதாசுக்கு தூது! வேல்முருகன் ப்ளான் என்ன?Ilayaraja : இளையராஜாவிற்கு பாரத ரத்னா? சிம்பொனி-யால் உயரிய இடம்! ரசிகர்கள் உற்சாகம்! | Bharat Ratna

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Madurai HC: சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது - உயர்நீதிமன்ற கிளை
Madurai HC: சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது - உயர்நீதிமன்ற கிளை
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
"அதிமுகவின் மடியில் உள்ள கனத்தை வேறு ஒருவர் பறிக்க முயற்சி" பேரவையில் போட்டுத்தாக்கிய தங்கம் தென்னரசு...
பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டங்கள் என்னென்ன? தெரிஞ்சுக்கோங்க!
பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டங்கள் என்னென்ன? தெரிஞ்சுக்கோங்க!
TNSTC Job: மிஸ் பண்ணாதீங்க... 3,274 இடங்கள்; அரசு ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி? என்ன தகுதி? விவரம்
TNSTC Job: மிஸ் பண்ணாதீங்க... 3,274 இடங்கள்; அரசு ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி? என்ன தகுதி? விவரம்
ஜவளித்துறையில் 45 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்பு- மத்திய அரசு தெரிவிப்பு
ஜவளித்துறையில் 45 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்பு- மத்திய அரசு தெரிவிப்பு
TN Govt School Admission: 1 லட்சத்தைக் கடந்த அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை; அசத்தும் சிவகங்கை- கடைசி இடத்தில் தேனி- இவ்வளவுதானா?
TN Govt School Admission: 1 லட்சத்தைக் கடந்த அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை; அசத்தும் சிவகங்கை- கடைசி இடத்தில் தேனி- இவ்வளவுதானா?
Embed widget