மேலும் அறிய

விளை நிலங்களை அழித்தால் எதிர்காலத்தில் மனிதர்கள் மாடுகளை போல் தழைகளை உண்ணுவார்கள் - விவசாயிகள்

மின்சாரத்துக்காக விளை நிலங்களை அழித்தால் எதிர்காலத்தில் மனிதர்கள் ஆடு மாடுகளை போல் தழைகளை உண்ணும் நிலை ஏற்படும்.

திருவண்ணாமலை (Tiruvannamalai News): கடலூர் மாவட்டம் நெய்வேலியில் நிலக்கரி எடுப்பதற்காக சுமார் 16 ஆண்டுகளுக்கு முன்பாக சுமார் 18000 ஏக்கர் விளை நிலங்களில் நிலக்கரி எடுப்பதற்காக விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்டது. நெய்வேலியில் இரண்டாவது சுரங்க விரிவாக்கத்திற்கான பணியை என்.எல்.சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக நிலங்களை கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சுமார் 16 ஆண்டு காலமாகியும் என்எல்சி நிர்வாகம் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை நிலக்கரி எடுக்க பயன்படுத்தாமல் காலதாமதம் செய்து வந்த நிலையில், சேத்தியாதோப்பு அருகே கத்தாழை, கரிவட்டி, ஆதனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள விவசாய நிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் பணிகளில் என்.எல்.சி நிறுவனம் கடந்த சில நாட்களாக ஈடுபட்டுள்ளது. அங்கு பயிர் செய்யப்பட்ட வயல்களில் இராட்சத இயந்திரங்களை இறக்கி என்.எல்.சிக்காக நிலங்களை கையகப்படுத்தும் பணிகளில் நடக்கிறது.

 


விளை நிலங்களை அழித்தால் எதிர்காலத்தில் மனிதர்கள்  மாடுகளை போல் தழைகளை உண்ணுவார்கள் - விவசாயிகள்

தற்போது அங்கு நெற்பயிற்கள் அறுவடைக்கு கூட தயார் ஆகாத நிலையில் பச்சை பயிற்களை அழித்து கால்வாய் வெட்டுவதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கு அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனை கண்டிக்கும் விதமாக கட்சி சார்பற்ற விவசாய சங்கத்தின் சார்பாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்பாக விவசாயிகள் ஆடு, மாடுகள் போல் தழைகளை உண்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் நூதனமுறையில் தெரிவிக்கையில், புவி வெப்பமயமாதல் காரணமாக மாற்று எரிசக்தி மின் உற்பத்தியில் காற்றாலை, சூரிய மின்சக்தி, நீர்மின் சக்தி, பையோ கழிவு ஆற்றல் மின் சக்தி, கடல் அலை விசை மூலம் மின்சக்தி உள்ளிட்ட பல வகையில் தற்போது மின்சாரம் தயாரிக்க தீவிர முயற்சியில் உள்ளது.

 

 


விளை நிலங்களை அழித்தால் எதிர்காலத்தில் மனிதர்கள்  மாடுகளை போல் தழைகளை உண்ணுவார்கள் - விவசாயிகள்

 

இந்நிலையில் அனல் மின்சக்தி மூலம் சுமார் இரண்டு சதவீதம் அளவுக்கு மட்டுமே மின் சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்காக மனிதனின் உணவு தேவைக்கு அடிப்படையாக விளங்கும் விவசாய விளை நிலங்களை அழித்து மின் உற்பத்தி மேற்கொள்ள எடுக்கப்படும் நடவடிக்கைகளை என்எல்சி நிர்வாகம் கைவிடவேண்டும். இந்த நிலை நீடித்தால் மனிதன் ஆடு, மாடுகளைப் போல இலைகளை உண்ணும் நிலை ஏற்படும் என்பதை விளக்கும் விதமாகவும், அரசின் சார்பில் ஒரு நிலம் கொடுக்கப்பட்டால் 5 வருடங்களுக்குள் அந்த நிலத்தில் வீடு கட்ட வேண்டும் என்பது பயன்பாட்டில் உள்ள நிலையில் 2006 ஆம் ஆண்டு நிலம் எடுக்கப்பட்டு இதுவரை 16 ஆண்டுகள் பயன்பாடுத்தப்படாமல் உள்ள நிலங்களை நில உரிமையாளர்களிடமே என்எல்சி நிர்வாகம் திரும்பி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து கட்சி சார்பற்ற விவசாய சங்கத்தின் சார்பில் நூதன ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget