மேலும் அறிய

தொப்பூர் கணவாய் அருகே உருக்குலைந்த லாரி - சங்கிலி தொடர் விபத்துக்களால் போக்குவரத்து தேக்கம்

தொப்பூர் கணவாய் அருகே ஓட்டுநரின் கவனக் குறைவால் ஏற்பட்ட விபத்தில் உருக்குலைந்த லாரி-சங்கிலி தொடர் விபத்துக்களால் போக்குவரத்து தேக்கம்.

தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதி அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவில் பகுதி வளைவில் இன்று காலை சங்கிலித் தொடர் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் இருந்து சேலத்தை நோக்கி நெல் மூட்டைகளை ஏற்றி கொண்டு லாரி வந்து கொண்டிருந்தது. லாரியானது தொப்பூர் கட்டமேடு அடுத்த வளைவை கடக்கும் பொழுது முன்னாள் சென்ற இரண்டு கார்கள் மற்றும் விறகு பாரம் ஏற்றிச் சென்ற ஒரு லாரி உள்ளிட்டவற்றின் மீது மோதியுள்ளது. லாரி மோதி விபத்தை ஏற்படுத்தியதில், விறகு ஏற்றிய லாரி அப்பகுதியிலேயே கவிழ்ந்துள்ளது. ஆனால் விபத்து ஏற்படுத்திய நெல் பாரம் ஏற்றி வந்த லாரியின் ஓட்டுனர் லாரியை நிறுத்தாமல் அதி வேகத்தில் இயக்கியுள்ளார். இதனால் ஆஞ்சநேயர் கோவில் வளைவு வரை சென்று சாலையின் சென்டர் மீடினில் மோதி நெல் மூட்டைகள் அனைத்தும் சாலையின் மறு மார்கமான சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சரிந்தது.

தொப்பூர் கணவாய் அருகே உருக்குலைந்த லாரி - சங்கிலி தொடர் விபத்துக்களால் போக்குவரத்து தேக்கம்
 
இதனால் ஒருபுறம் தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் விறகு லாரிகள், கார்களும்,  மறுபுறம் சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நெல் மூட்டை ஏற்றி சென்ற லாரி சாலையிலேயே கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தொப்பூர் காவல் துறையினர் மற்றும் சாலை பராமரிப்பு குழுவினர் உடனடியாக  விபத்துக்குள்ளான வாகனங்களை  அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர் செய்தனர். ஆனாலும் சாலையில் சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவு வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றது. ஆனால் முழு போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வண்ணம் சீரமைப்பு பணிகளை துரிதமாக செய்தனர்.

தொப்பூர் கணவாய் அருகே உருக்குலைந்த லாரி - சங்கிலி தொடர் விபத்துக்களால் போக்குவரத்து தேக்கம்
 
மேலும் காலை நேரத்திலேயே நடைபெற்ற இந்த சங்கிலித் தொடர் விபத்தில் ஓட்டுநர்கள் மற்றும் கார்களில் பயணித்தவர்களுக்கு உயிர்சேதம் மற்றும் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாமல் சிறு காயங்களுடன் நல்வாய்ப்பாக அனைவரும் உயிர்த் தப்பினர். தொப்பூர் கணவாய் பகுதியில் காவல் துறை மற்றும் போக்குவரத்து துறையினர் விபத்துகளை தடுப்பதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தாலும், அதிகாலைகளில் நடைபெறும் விபத்துகளால் இதுபோன்று வாகனங்கள் தொடர்ச்சியாக விபத்துக்குள்ளாகி வருவது தொடர்ந்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே இடத்தில் 12 வாகனங்கள் தொடர்ச்சியாக விபத்துக்குள்ளானதில், நான்கு பேர் பத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதனை தடுப்பதற்கு புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி போக்குவரத்து மற்றும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எடுத்துள்ளனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
NIA Raid: தமிழ்நாட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை.. சர்ச்சைக்குரிய புத்தகங்கள் பறிமுதல்!
NIA Raid: தமிழ்நாட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை.. சர்ச்சைக்குரிய புத்தகங்கள் பறிமுதல்!
Virat, Rohit, Jadeja: இரண்டு நாளில் மூன்று ஜாம்பவான்கள் ஓய்வு - கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்!
Virat, Rohit, Jadeja: இரண்டு நாளில் மூன்று ஜாம்பவான்கள் ஓய்வு - கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்!
PM Modi: மனதின் குரல்! தாய், சுதந்திர போர், சமஸ்கிருதம் குறித்து பிரதமர் பேசியது என்ன?
PM Modi: மனதின் குரல்! தாய், சுதந்திர போர், சமஸ்கிருதம் குறித்து பிரதமர் பேசியது என்ன?
Embed widget