மேலும் அறிய

Corona Updates: ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் இன்று ஜீரோ பாதிப்பு; வேலூரில் 10 பேருக்கு பாசிட்டிவ்

வேலூரில் முதல் தவணை தடுப்பூசியை மாவட்டத்தில் மொத்தம் 8 லட்சம் பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசியை சுமார் 3 லட்சத்தி 81 ஆயிரம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனை வைரஸ் தொற்று  பரவியதிலிருந்து ஆரம்ப காலகட்டத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களில் கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று இரண்டாம் அலையின் தாக்கத்தின் போது பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கியது. மேலும் தற்போது வரை மூன்று மாவட்டங்களில் மிகக் குறைந்த அளவே தொற்று உறுதி செய்வோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. வேலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை இன்று மட்டும் 10 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றை காட்டிலும் குறைவு ஆகும். வேலூர் மாவட்டத்தில் இதுவரை உள் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், வெளியூர் மற்றும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என மொத்தம் 50,096 பேர் கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 

Corona Updates: ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் இன்று ஜீரோ பாதிப்பு; வேலூரில் 10 பேருக்கு பாசிட்டிவ்
 
இதில் 48,850 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 108 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் மற்றும் மருத்துவமனை சிகிச்சையிலும் உள்ளனர். இன்று உயிரிழப்பு எதுவும் இல்லை. இந்நிலையில் இதுவரை 1138 பேர் இறந்துள்ளனர். இன்று மற்றும் 4 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தடுப்பூசியைப் பொறுத்தவரை முதல் தவணை தடுப்பூசியை மாவட்டத்தில் மொத்தம் 8 லட்சம் பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசியை சுமார் 3 லட்சத்தி 81 ஆயிரம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்துவதை  அதிகரிக்க வாரந்தோறும் நடைபெறும் சிறப்பு முகாம்கள் மட்டும் இன்று தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு முகாமும், வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. 

Corona Updates: ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் இன்று ஜீரோ பாதிப்பு; வேலூரில் 10 பேருக்கு பாசிட்டிவ்
 
திருப்பத்தூர் மாவட்டத்தைப் பொறுத்த வரை இன்று இரண்டாவது நாளாக யாருக்கும் தொற்று உறுதியாகாத நிலையில் தொற்று பாதிப்பு பூஜ்ஜிய நிலையில் உள்ளது. இன்று உயிரிழப்புகள் எதுவும் இல்லாதபட்சத்தில் 3 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை உள் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், வெளியூரைச் சேர்ந்தவர்கள் என மொத்தம் 29,367 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 28,725 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 16 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை மொத்தம் 626 பேர் உயிரிழந்துள்ளனர். தடுப்பூசியைப் பொறுத்தவரை இதுவரை மாவட்டத்தில் 72% பேருக்கு முதல் தவணையும், 40% பேருக்கு இரண்டாம் தவணையும் போடப்பட்டுள்ளது.
 
ராணிப்பேட்டை மாவட்டத்தைப் பொறுத்தவரை இன்று யாருக்கும் உறுதியாகவில்லை. இன்று 3 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். உயிரிழப்பு எதுவும் இல்லை. உள் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், வெளியூரைச் சேர்ந்தவர்கள் என மொத்தம் 43,522 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 42,722 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 25 பேர் வீடு மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். மொத்தம் 775 பேர் உயிரிழந்துள்ளனர். 600-க்கும் மேற்பட்ட  படுக்கைகள் காலியாக உள்ளது. தடுப்பூசியைப் பொறுத்தவரை ராணிப்பேட்டை மாவட்டத்தில் தினசரி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். முதல் தவணையை 7 லட்சத்தி 95 ஆயிரம் பேருக்கும், இரண்டாம் தவணையை 5 லட்சத்தி 83 ஆயிரம் பேருக்கும் செலுத்தியுள்ளனர். இரண்டு தவணை தடுப்பூசியையும் சேர்த்து 2 லட்சத்தி 13 ஆயிரம் பேருக்கு செலுத்தியுள்ளனர். நாளையும் மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
 
பொது மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதை அதிகரிக்கவும், அவர்களை ஊக்கப்படுத்தவும் மூன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. சமூக இடைவெளியை கடைபிடிப்போம், முகக்கவசம் அணிவோம், தடுப்பூசியை செலுத்திக்கொள்வோம், கொரோனாவை வெல்வோம் !
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை  அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
Embed widget