மேலும் அறிய

அரசு மருத்துவமனையில் தூய்மைப்படுத்தாமல் ஒப்பந்ததாரர் அலட்சியம் - எச்சரிக்கை விடுத்த கலெக்டர்

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் மருத்துமனையை தூய்மையாக வைக்கவேண்டும் என அறிவுறுத்தினார்.

திருவண்ணாமலையில் வேலூர் செல்லும் நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், மருந்து கையிருப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது நோயாளிகள் பதிவு செய்யும் இடம், மருந்தகம், புற நோயாளிகள் பிரிவு உள்ளிட்ட இடங்களுக்கு சென்று ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் முருகேஷ், நோயாளிகள் பதிவு செய்யும் பிரிவில் உள்ள கணினியில் நோயாளிகள் விவரம் குறித்து பதிவு செய்யும் பொழுது நீண்ட நேரம் ஆவது குறித்து அங்கிருந்த பணியாளர்களிடம் கேள்வி எழுப்பினார். அப்போது உள்நோயாளிகள் பிரிவில் சென்ற மாவட்ட ஆட்சியர் அப்பொழுது நோயாளி ஒருவர் தரையில் படுத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஆட்சியர் உடனடியாக அவருக்கு இடம் ஒதுக்க மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார்.

 


அரசு மருத்துவமனையில் தூய்மைப்படுத்தாமல் ஒப்பந்ததாரர் அலட்சியம் -  எச்சரிக்கை விடுத்த கலெக்டர்

அதனைத் தொடர்ந்து குழந்தைகள் பிரிவிற்கு சென்ற பொழுது தரையில் தண்ணீர் கொட்டி துடைக்கப்படாமல் இருந்ததை கண்டு ஒப்பந்ததாரரை அழைத்து உடனடியாக இதனை சுத்தம் செய்ய வேண்டும் என்றும் அப்போது மருத்துவமனையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் எனவும் எச்சரித்தார். மேலும் நோயாளி ஒருவர் மருத்துவர் பரிந்துரை சீட்டு இருந்தும் தனக்கு 28 நாட்களுக்கு மாத்திரை வழங்காமல் மருந்தக ஊழியர்கள் அலைக்கழிப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்ததை அடுத்து, மாவட்ட ஆட்சியர் உடனடியாக மருந்தகம் சென்று இது குறித்து விசாரணை மேற்கொண்டார். அப்பொழுது கணினி மூலம் பெறப்பட்ட மருந்து சீட்டுக்கு 28 நாட்களுக்கு மருந்து வாங்குவதாகவும் மருத்துவர்கள் கையொப்பமிட்ட சீட்டுக்கு ஐந்து நாட்களுக்கு மட்டுமே மருந்து வழங்கப்படுவதாகவும் தெரிவித்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ், மருத்துவர்கள் கையொப்பம் இட்ட சீட்டை கொண்டு 28 நாட்களுக்கும் மருந்து வழங்க வேண்டும் எனவும் நிர்வாக குறைபாடு காரணமாக நோயாளிகளை அலைக்கழிக்க கூடாது என்று தெரிவித்தார். 

 


அரசு மருத்துவமனையில் தூய்மைப்படுத்தாமல் ஒப்பந்ததாரர் அலட்சியம் -  எச்சரிக்கை விடுத்த கலெக்டர்

அதனைத்தொடர்ந்து மருத்துவர்களிடம் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் பேசுகையில்; 

நோயாளிகளுக்கு மொத்தமுள்ள படுக்கை வசதிகள் குறித்தும். நோயாளிகளின் மாதாந்திர பதிவு புள்ளி விவரம், கோமா, பக்கவாதம் பாதித்தவர்களின் ஆண்டுக்கணக்கில் உள்ள புள்ளி விவரம் அதுமட்டுமின்றி தீக்காயங்களால் பாதித்தவர்கள் பிரிவு, அவசர கால பிரிவு, தாய் வார்டு, இயல்முறை சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு பிரிவு, பொது மருத்துவம், பெண்கள் நலப்பிரிவு. மாவுக்கட்டு போடும் இடம். செயல்வழி சிகிச்சை பிரிவு, மயக்கவியல் பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு, எக்ஸ்-ரே, டிஜிட்டல் எக்ஸ்-ரே பிரிவிகளில் நோயாளிகளிடம் பெறப்படும் கட்டணம் முறை குறித்தும், நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் பற்றி மருத்துவ அலுவலர்களிடம் நோயாளிகளுக்கு தங்கும் இடம், புறநோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் முறைகள், மருத்துவமனைகளை தூய்மையாக பராமரித்தல் குறித்தும் குடிநீர், மின்சாரம், கழிவறை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை சரியான முறையில் மருந்துவர்கள் பராமரிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவமனைக்கு வருகைத்தரும் நோயாளிகளை அன்பாகவும், ஆதராகவும் தங்களுடைய சிகிச்சைகளை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget