மேலும் அறிய

திருவண்ணாமலை கிரிவல பாதையில் 20 கோடி நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி -கோயில் பணியாளர் இடமாற்றம்

கடைநிலை ஊழியர்கள் பணியிடமாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த விவகாரத்தில் உயரதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கிரிவலப்பாதையில் உள்ள வருண லிங்கம் அருகே 20 கோடி மதிப்புள்ள இடத்தை அபகரிக்க முயற்சிகள் தொடர்பாக இதுவரை கோயில் பணியாளர்கள் 2 பேர் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வருண லிங்கம் அருகே உள்ள இடத்தில் வாழ்ந்துவந்த சிவனடியார் ஒருவரின் மறைவுக்கு பிறகு, அண்ணாமலையார் கோயில் கட்டுப்பாட்டுக்குள் அந்த இடம் கொண்டு வரப்பட்டது. இதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டு திருவண்ணாமலை கோயில் நிர்வாகம் மூலம் பூட்டப்பட்டு சாவி கோயில் நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் பூட்டுகளை திறந்து அந்த இடத்தில் கட்டுமான பணிகள் நடந்து வருவதாக கோயில் நிர்வாகத்திற்கு தகவல் வந்த நிலையில் 20 கோடி மதிப்புள்ள நிலத்தை மீண்டும் தனது கட்டுப்பாட்டிற்குள் திருவண்ணாமலை கோயில் நிர்வாகம் கொண்டுவந்துள்ளது. 


திருவண்ணாமலை கிரிவல பாதையில் 20 கோடி நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி -கோயில் பணியாளர் இடமாற்றம்

 

ஆலயத்தின் கட்டுப்பாட்டில் இருந்த நிலத்தில் ஆலயத்தின் அனுமதியின்றி கட்டுமான பணிகள் நடந்தது குறித்து கோயில் நிர்வாக அலுவலர்கள் துணை போனதாக பக்தர்கள் குற்றம்சாட்டி வந்தனர். இச்சம்பவம் தொடர்பாக வருவாய் துறையினர் நடத்திய விசாரணையில், சாவிகளை பாதுகாக்கும் பொறுப்பு வகிக்கும் கோயில் மணியக்காரர் செந்தில் என்கிற கருணாநிதி, கிரிவல பாதையில் உள்ள ஆதி அண்ணாமலையார் கோயிலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். மேலும் அண்ணாமலையார் கோயில் கோசாலையில் பக்தர்களால் தானமாக வழங்கப்பட்ட ஏராளமான பசுக்கள் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், பராமரிப்புக்காக கோயில் நிர்வாகம் ஒதுக்கிய நிதியை சரிவர பயன்படுத்தாமல் முறைகேட்டில் ஈடுபட்டதும் இதனால் கடந்த ஒராண்டில் மட்டும் 7 பசுக்கள் இறந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.  

வீடு வீடா போங்க.. கட்டளையிட்ட ஓபிஎஸ் | OPS | ADMK | MKStalin | DMK | Local Body Election


திருவண்ணாமலை கிரிவல பாதையில் 20 கோடி நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி -கோயில் பணியாளர் இடமாற்றம்

 

இந்த விவகாரம் தொடர்பாக கோசாலையை பராமரிக்கும் பதிவறை எழுத்தர் ராஜாவை சோமாசிபாடி முருகன் கோயிலுக்கு இடமாற்றம் செய்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. அண்ணாமலையார் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு பணிகளில் ஏராளமான முறைகேடுகள் நடைபெறுவதாக பக்தர்கள் குற்றம்சாட்டி வந்த நிலையில் இரண்டு ஊழியர்களை இந்து சமய அறநிலையத்துறை இடமாற்றம் செய்துள்ளது. இந்த முறைகேடு சம்பவங்களில் கோயில் உயரதிகாரிகளின் பங்கு இருப்பதாக விசாரிக்க வேண்டி உள்ளது என பக்தர்கள் கூறி உள்ளனர். 20 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு சட்டவிரோதமாக கட்டுமான பணிகள் நடந்து வந்தநிலையில் இதில் தொடர்புடைய கோயில் பணியாளர்கள் மீது காவல்துறையில் ஏன் புகார் அளிக்கவில்லை என்ற கேள்வியை பக்தர்கள் எழுப்புகின்றனர். இந்த விவகாரத்தில் கோயில் உயரதிகாரிகளின் பங்கு மட்டுமின்றி சில அரசியல் பிரமுகர்களின் பின்புலம் இருப்பதாகவும் பக்தர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். 

இது கேலிகூத்து.. ஆவேசமடைந்த கிருஷ்ணசாமி | Krishnasamy | Local Body Election | Puthiya Tamilagam

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

SC Center: ஆளுநர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய மத்திய அரசு - ”உச்சநீதிமன்றம் தலையிட வேண்டாம்”
SC Center: ஆளுநர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய மத்திய அரசு - ”உச்சநீதிமன்றம் தலையிட வேண்டாம்”
Ukraine War: குடிமியை கேட்கும் புதின் - வாய்ப்பே இல்லை என்ற ஜெலன்ஸ்கி, ட்ரம்பை தாண்டி ஐரோப்பாவின் புது பிளான்
Ukraine War: குடிமியை கேட்கும் புதின் - வாய்ப்பே இல்லை என்ற ஜெலன்ஸ்கி, ட்ரம்பை தாண்டி ஐரோப்பாவின் புது பிளான்
Coolie Box Office: கூலி 3வது நாள் வசூல் சறுக்கியதா? இன்று கல்லா கட்டுமா ரஜினியின் பவர்ஹவுஸ்?
Coolie Box Office: கூலி 3வது நாள் வசூல் சறுக்கியதா? இன்று கல்லா கட்டுமா ரஜினியின் பவர்ஹவுஸ்?
சென்னை மக்களே... அண்ணாசாலை பக்கம் போறீங்களா.. நாளை முதல் மிகப்பெரிய மாற்றம்! நோட் பண்ணிக்கோங்க
சென்னை மக்களே... அண்ணாசாலை பக்கம் போறீங்களா.. நாளை முதல் மிகப்பெரிய மாற்றம்! நோட் பண்ணிக்கோங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP vs OPS | மீண்டும் கூட்டணியில் OPS? நிராகரித்த பி.எல். சந்தோஷ்! தூது போன அண்ணாமலை!
Independence Day 2025: சுதந்திர தின விழா கொண்டாட்டம் ஜொலிக்கும் சென்னை 10,000 போலீசார் குவிப்பு
வகுப்பறைக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு பதற வைக்கும் CCTV காட்சி | Student Died Classroom
முதல் மனைவியுடன் மாதம்பட்டி 2-வது மனைவியின் நிலைமை? | Joy Crizildaa | Madhampatti Rangaraj Marriage
Independence Day Rehearsal : 79-வது சுதந்திர தின விழா காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை தயாராகும்  கோட்டை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC Center: ஆளுநர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய மத்திய அரசு - ”உச்சநீதிமன்றம் தலையிட வேண்டாம்”
SC Center: ஆளுநர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய மத்திய அரசு - ”உச்சநீதிமன்றம் தலையிட வேண்டாம்”
Ukraine War: குடிமியை கேட்கும் புதின் - வாய்ப்பே இல்லை என்ற ஜெலன்ஸ்கி, ட்ரம்பை தாண்டி ஐரோப்பாவின் புது பிளான்
Ukraine War: குடிமியை கேட்கும் புதின் - வாய்ப்பே இல்லை என்ற ஜெலன்ஸ்கி, ட்ரம்பை தாண்டி ஐரோப்பாவின் புது பிளான்
Coolie Box Office: கூலி 3வது நாள் வசூல் சறுக்கியதா? இன்று கல்லா கட்டுமா ரஜினியின் பவர்ஹவுஸ்?
Coolie Box Office: கூலி 3வது நாள் வசூல் சறுக்கியதா? இன்று கல்லா கட்டுமா ரஜினியின் பவர்ஹவுஸ்?
சென்னை மக்களே... அண்ணாசாலை பக்கம் போறீங்களா.. நாளை முதல் மிகப்பெரிய மாற்றம்! நோட் பண்ணிக்கோங்க
சென்னை மக்களே... அண்ணாசாலை பக்கம் போறீங்களா.. நாளை முதல் மிகப்பெரிய மாற்றம்! நோட் பண்ணிக்கோங்க
Minister Periyasamy: திமுகவின் நிதி ஆதாரம்..! யார் இந்த திண்டுக்கல் ஐ. பெரியசாமி - அரசியல் பயணமும், வழக்கும்..
Minister Periyasamy: திமுகவின் நிதி ஆதாரம்..! யார் இந்த திண்டுக்கல் ஐ. பெரியசாமி - அரசியல் பயணமும், வழக்கும்..
ஏஐ தவறான ஆலோசனை: உப்புக்கு பதில் ப்ரோமைட்? அதிர்ச்சியூட்டும் சுய மருத்துவம்! எச்சரிக்கை பதிவு!
ஏஐ தவறான ஆலோசனை: உப்புக்கு பதில் ப்ரோமைட்? அதிர்ச்சியூட்டும் சுய மருத்துவம்! எச்சரிக்கை பதிவு!
பொறியியல் சேர்க்கை: தள்ளிப்போகும் துணை கலந்தாய்வு? 40,000 இடங்களுக்கு என்ன நடக்கும்?
பொறியியல் சேர்க்கை: தள்ளிப்போகும் துணை கலந்தாய்வு? 40,000 இடங்களுக்கு என்ன நடக்கும்?
உளவுத்துறையில் வேலை; 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்- 4987 காலிப் பணியிடங்கள், நாளை கடைசி! விண்ணப்பிப்பது எப்படி?
உளவுத்துறையில் வேலை; 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்- 4987 காலிப் பணியிடங்கள், நாளை கடைசி! விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget