மேலும் அறிய

ABP நாடு IMPACT : சென்னையில் செயல்பட்டு வரும் தனியார் தொண்டு நிறுவனம்  'கலை இளமணி' ராஜேஸ்வரிக்கு உதவிக்கரம்..!

ராஜேஸ்வரிக்கு சென்னை அல்லது , கோயம்புத்தூரில் அவர் விரும்பும் கல்லூரியில் , அவர் விரும்பும் பாடப்பிரிவினில்  படிப்பதற்கு , அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதாக உறுதி அளித்துள்ளோம் என்று தெரிவித்தார்

ABP நாடு செய்தி எதிரொலி காரணமாக , ஏழ்மையால் உயர்கல்வி பயிலமுடியாமல் தவித்துவந்த 19 வயது ராஜேஸ்வரிக்கு, சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் 'மாற்றம் அறக்கட்டளை' என்ற தனியார் தொண்டு நிறுவனம் ராஜேஸ்வரியின் முழு கல்விச் செலவையும் ஏற்றுக்கொள்ள முன் வந்துள்ளது . 

ABP நாடு செய்தி குழுமம் தனது இணையத்தளத்தில் "வறுமையில் சிக்கித்தவிக்கும் 'கலை இளமணியின்' சோக பின்னணி" என்ற தலைப்பில் மாணவி  ராஜேஸ்வரி குறித்த செய்தியை இன்று காலை வெளியிட்டு இருந்தது , இந்த செய்தியைத் தனது டிவிட்டர் பக்கத்திலும் பதிவு செய்திருந்தது  .
 

 
இந்த செய்தியைப் படித்த , 'மாற்றம் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனருமான சுஜித்குமார் , ABP நாடு செய்தி குழுமத்தைத் தொடர்புகொண்டு , அதன் மூலமாக ராஜேஸ்வரியிடம் தொலைபேசியில் உரையாடி , மாணவி ராஜேஸ்வரியின் மேற்படிப்புக்குத் தேவையான அணைத்து உதவியையும் செய்வதாக உறுதி அளித்துள்ளனர் .
 

ABP நாடு IMPACT : சென்னையில் செயல்பட்டு வரும்  தனியார் தொண்டு நிறுவனம்  'கலை இளமணி' ராஜேஸ்வரிக்கு  உதவிக்கரம்..!
இது தொடர்பாக மாற்றம் அறக்கட்டளையின் , சுஜித்குமார் நம்மிடம் பேசியபோது " மாற்றம் அறக்கட்டளை" தகவல் தொழில்நுட்பம் , சிவில் சர்வீஸ் , மற்றும் பல பன்னாட்டு நிறுவனங்களில் முழுநேர  பணிபுரியும் , வல்லுநர்களை , உறுப்பினர்களாகக் கொண்டு லாப நோக்கில்லாமல், ஆதரவற்ற மாணவர்களுக்கு , கல்வி வாய்ப்பு ஏற்படுத்தி தருவதற்காக  செயல்படும் ஒரு தொண்டு நிறுவனம் . சொல்ல வேண்டுமானால் , நானே ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் , மனித வள (Ruman Resource) துறையில் , முழு நேர வேலை செய்து வருகிறேன் . 
 

ABP நாடு IMPACT : சென்னையில் செயல்பட்டு வரும்  தனியார் தொண்டு நிறுவனம்  'கலை இளமணி' ராஜேஸ்வரிக்கு  உதவிக்கரம்..!
 
தேவைப்படுவோருக்கு உதவி செய்வதற்கு , வேலை ஒரு தடை இல்லை என்பதை நிரூபிப்பதற்கே , என்னைப் போன்றே முழு நேர பணியில் இருந்துகொண்டே, கஷ்டப்படும் மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் படைத்த துடிப்பு மிக்க இளைஞர்களைக் கொண்டு இந்த அமைப்பை உருவாக்கி உள்ளேன் என்று தெரிவித்த சுஜித் , மேலும் அவரது மாற்றம் அறக்கட்டளையைப் பற்றிக் கூறும்போது, “கடந்த 2013 ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளை , இதுவரையிலும் 1300-க்கும் மேற்பட்ட , அநாதை குழந்தைகள் , வறுமையின் விளிம்பில் வாடும் மாணவர்கள் , ஏழை குழந்தைகள் உள்ளிட்டோருக்குக்  கல்வியுடன் சேர்த்து திறன் மேம்பாடு (Skill  development ) பயிற்சிகளையும் கொடுத்து , அவர்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்கி  கொடுத்துள்ளோம் .

ABP நாடு IMPACT : சென்னையில் செயல்பட்டு வரும்  தனியார் தொண்டு நிறுவனம்  'கலை இளமணி' ராஜேஸ்வரிக்கு  உதவிக்கரம்..!
 
கல்வி மற்றும் வேலைவாய்ப்பால் மட்டுமே  ஒரு நாட்டின் வறுமையை முற்றிலும் போக்க முடியும் என்பதை  மாற்றம் அறக்கட்டளை உறுதியாக நம்புவதால், கல்வி கனியை எட்டமுடியாத ஏழ்மையான மற்றும் ஆதரவற்ற மாணவர்களை அடையாளம் கண்டு பிடித்து அவர்களுக்குக் கல்வி பயில வாய்ப்பளிப்பதோடு , அவர்களது திறன் மேம்பாட்டிலும் தனிக் கவனம் செலுத்தி வருகிறோம் .
 
வேலூரைச் சார்ந்த ராஜேஸ்வரியை இன்று தொடர்பு கொண்டு பேசினோம் , ராஜேஸ்வரிக்கு சென்னை அல்லது , கோய்ம்பத்தூரில் அவர் விரும்பும் கல்லூரியில் , அவர் விரும்பும் பாடப்பிரிவினில்  படிப்பதற்கு , அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதாக உறுதி அளித்துள்ளோம். அவர் வெளியூர் சென்று படிப்பதற்கு தனது பெற்றோர் மற்றும் ஓவிய ஆசிரியருடன் ஆலோசனை செய்ய வேண்டியிருப்பதால் , அவர்களிடம்  கல்லூரி மற்றும் பாடப்பிரிவு உள்ளிட்டவற்றைக் கலந்து ஆலோசனை செய்துவிட்டு , மீண்டும்  தொடர்பு கொள்வதாகத் தெரிவித்துள்ளார்” என்று கூறினார் .  
 

ABP நாடு IMPACT : சென்னையில் செயல்பட்டு வரும்  தனியார் தொண்டு நிறுவனம்  'கலை இளமணி' ராஜேஸ்வரிக்கு  உதவிக்கரம்..!
 
மேலும் ராஜேஸ்வரியை அடையாளம் கண்டுபிடிக்க உதவிய ABP நாடு செய்தி குழுமத்திற்கு தங்களது , மாற்றம் அறக்கட்டளை சார்பாக நன்றியை தெரிவித்துக்கொண்டார் .
 
யார் இந்த 'கலை இளமணி'- ராஜேஸ்வரி முழு விபரம் தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்க : வறுமையில் சிக்கித் தவிக்கும் 'கலை இளமணியின்' சோக பின்னணி!
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget