மேலும் அறிய

மதுப்பழக்கத்திற்கு அடிமையான மகனின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற தாய் கைது

தனது மகன் மது அருந்திவிட்டு ஊரில் சண்டை சச்சரவுகளை இழுத்துவந்துடன் அவனது மனைவியையும் என்னையும் துன்புறுத்தி வந்ததால் அவன் தலையில் கல்லை போட்டு கொன்றேன் - தாய் வாக்குமூலம்

மது போதையில் ஊர் பொதுமக்களிடம் தொடர்ந்து அடிதடியில் ஈடுபட்டு வந்து , குடும்பத்தாரின் மன நிம்மதியையும் சீர்குலைத்து வந்த  எனது மகனின் தலையைக் கருங்கல்லால் நசுக்கி கொலை செய்தேன் , ஆம்பூர் அருகே 57 வயது தாய் வாக்குமூலம் .
 
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த பெரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (36), கட்டிடத் தொழிலாளி , இவர் மீது  ஊர் பொது மக்களிடம் தொடர்ந்து அடிதடியில் ஈடுபடுவது , பொது அமைதியை சீர்குலைப்பது, பொதுச் சொத்திற்குச் சேதம் விளைவிப்பது, உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.

மதுப்பழக்கத்திற்கு அடிமையான மகனின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற தாய் கைது
 
இவருக்குத் திருமணமாகி கௌரி  என்ற மனைவியும், 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.  வியாழன் இரவு  வீட்டின் வெளியிலிருந்த  திண்ணையில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த சிவகுமார், வெள்ளிக்கிழமை காலையில் ரத்தவெள்ளத்தில் உயிர் இழந்த நிலையில் கிடந்துள்ளார். இதை கண்ட அவரது மனைவி கௌரி அதிர்ச்சியில் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டிலிருந்து வெளியே வந்த சிவகுமாரின் தாய் ராஜேஸ்வரி மற்றும் உயிரிழந்த சிவகுமாரின் குழந்தைகள் என அனைவருமே அவரது உடலைப் பார்த்துக் கதறி அழுதனர் .
 

மதுப்பழக்கத்திற்கு அடிமையான மகனின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற தாய் கைது
 
இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து, சிவக்குமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த வழக்கை நேரில் விசாரிக்க சம்பவ இடத்துக்குத் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.பி.சக்கரவர்த்தி, ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன் உள்ளிட்டோரும் நேரில் வந்தனர். பின்னர் கொலை சம்பவம் குறித்து துப்பறிய மோப்ப நாய் ’சிம்பா’ வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. 

மதுப்பழக்கத்திற்கு அடிமையான மகனின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற தாய் கைது
 
சம்பவ இடத்தில் எஸ்பி விசாரணை மேற்கொண்ட பொழுது சிவகுமாரைக் கல்லைக் கொண்டு தலையை நசுக்கி கொலை செய்யப்பட்டிருப்பதை  உறுதி செய்தாலும் கொலை செய்யப் பயன்படுத்திய ஆயுதம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த சிபி சக்கரவர்த்தி, அவரது குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தினார். மேலும் கொலை செய்யப்பட்ட சிவகுமாரின் வீட்டின் அருகே ரத்தக்காயத்துடன்  ஒரு  கருங்கல் இருந்தது அதில் மாட்டுச்சாணமும் ஊற்றப்பட்டிருந்தது  போலீஸ் விசாரணையின்போது சிவக்குமாரின் தாய் ராஜேஸ்வரி (57) கொலைக் குற்றத்தை ஒப்புக்கொண்டார் . 
 

மதுப்பழக்கத்திற்கு அடிமையான மகனின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற தாய் கைது
 
மேலும் அவர் போலீசிடம் அளித்த வாக்குமூலத்தில் எனது மகன் சிவக்குமார் தினமும் மது  குடித்து விட்டு ஊர்மக்களிடம் சண்டை சச்சரவில் ஈடுபட்டுவந்த போலீஸ் நிலையம் வரை எங்கள் குடும்ப மானத்தை  காற்றில் பறக்க செய்தான். மேலும்  வீட்டுக்கு வந்த பின்னரும் என்னை ஒரு தாய் என்றும் பார்க்காமல் மனம் நோகும்படி அருவருக்கத்தக்க வார்த்தைகளால் திட்டி மனம் நோகச் செய்து வந்தான். மேலும் அவனது மனைவியையும் சித்ரவதை செய்து வந்தான் இதனால் நான் மிகுந்த மன உளைச்சலிலிருந்து வந்தேன். அவன் தனியாகத் தூங்கும்போது தலையில் கல்லைப்போட்டுக் கொலை செய்ய நீண்டநாட்களாக திட்டம் தீட்டி இருந்தேன்.
 
அதன்படி நேற்று எனது மகன்  சிவக்குமார் வீட்டுத் திண்ணையில் தனியாகப் படுத்து தூங்கி கொண்டு இருந்தான். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட நான் ஒரு பெரிய பாறாங்கல்லைத் தூக்கி வந்து அவனின் தலையில் போட்டு நசுக்கிக் கொலை செய்தேன். மேலும் காவல்துறையிடம் சிக்கக் கூடாது என்று கொலை செய்யப் பயன்படுத்திய கல்லில் மாட்டுச்சாணம் கரைத்து ஊற்றிவிட்டு , மறுநாள் காலை  ஒன்றும் தெரியாதது போல் இருந்து விட்டேன். போலீசார் என்னை பிடித்து விட்டனர். என்று வாக்குமூலம் அளித்துள்ளார் .
 

மதுப்பழக்கத்திற்கு அடிமையான மகனின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற தாய் கைது
 
நேற்று இரவு கைது செய்ய பட்ட ராஜேஸ்வரிடம் ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது .
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget