மேலும் அறிய

'அவசியம் என்றால் மட்டுமே வெளியில் செல்லவும்!' - உன்னாவ் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதிமன்றம் அறிவுரை!

டெல்லி நீதிமன்றம் உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணை வழக்கு முடியும் வரை, வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

டெல்லி நீதிமன்றம் உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணை வழக்கு முடியும் வரை, வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் ஏற்கனவே மத்திய ரிசர்வ் படை வீரர்களின் பாதுகாப்பில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் தன்னைச் சுதந்திரமாக நடமாட அனுமதிப்பதில்லை என உயர்நீதிமன்றத்தை நாடிய பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு டெல்லி மாவட்ட அமர்வு நீதிபதி தர்மேஷ் ஷர்மா இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர், “உங்கள் பாதுகாப்புக்காக அதிகாரிகள் நியமிக்கப்பட்டிக்கின்றனர். வெளியில் செல்வதாக இருந்தால், அவர்களுக்குத் தகவல் அளித்துவிட்டுச் செல்லுங்கள். ஒவ்வொரு நாளும் வெளியில் செல்வதற்காகத் திட்டங்களை வகுக்காமல், அவசியம் என்னும் போது மட்டும் வெளியில் செல்லுங்கள். வழக்கு முடிவடையும் வரை, வெளியில் செல்வதை அறவே தவிர்த்துவிடுங்கள்” என்றும் அறிவுரை கூறியுள்ளார்.

Court
நீதிமன்றம்



கடந்த 2017ஆம் ஆண்டு, ஜூன் 4 அன்று, உத்தரப் பிரதேச மாநிலத்தின் உன்னாவ் பகுதியில் 17 வயது சிறுமியாகக் கடத்தப்பட்ட இவரை, மூவர் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகாரளித்தார். சுமார் 9 நாட்கள் வரை, கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இந்தப் பெண்ணின் வழக்கில் 2017ஆம் ஆண்டு அக்டோபர் 3 அன்று சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. மிகப்பெரிய அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக இது மாற, நாடு முழுவதும் உன்னாவ் பெண்ணுக்கு நீதி வழங்க வேண்டும் என்ற முழக்கம் எழுந்தது.

உன்னாவ் வழக்கில் முக்கிய குற்றவாளியான பி.ஜே.பி எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி புகார் அளித்ததற்காக, பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையும் சகோதரரும் பொய் வழக்குகள் புனையப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த 2018ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை சிறையில் மரணமடைந்தார்.  

சி.பி.ஐ விசாரணையில், எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்காரும், அவரது இரண்டு கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டனர். குல்தீப் சிங் செங்காரிடம் பாதிக்கப்பட்ட பெண்ணை அழைத்துச் சென்ற மற்றொரு பெண்ணும் இந்த வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் இந்த வழக்கு, உன்னாவ் பகுதியில் இருந்து டெல்லி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

அவசியம் என்றால் மட்டுமே வெளியில் செல்லவும்!' - உன்னாவ் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதிமன்றம் அறிவுரை!
குல்தீப் சிங் செங்கார்

 

கடந்த 2019ஆம் ஆண்டு, உன்னாவிலிருந்து ரே பரேலிக்குக் சென்றுகொண்டிருந்த பாதிக்கப்பட்ட பெண் பயணித்த கார் மீது லாரி மோதியதில், அவரும் அவரது வழக்கறிஞர் மகேந்திரா சிங்கும் பலத்த காயம் அடைந்தனர். இதனால் அவர்களது பாதுகாப்புக்காக மத்திய ரிசர்வ் படை காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உன்னாவ் வழக்கின் முதன்மைக் குற்றவாளியான எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் மீது சிறாரை வன்கொடுமை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்துள்ள அவர், தற்போது தனது தண்டனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
ABP Premium

வீடியோ

Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Smriti Mandhana Wedding Cancelled: ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
Smriti Mandhana: ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து செய்யப்பட்டது ஏன்.? இது தான் காரணமா.?
ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து செய்யப்பட்டது ஏன்.? இது தான் காரணமா.?
Chennai Indigo Flight Issue: என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Embed widget