பயணிகளின் கனிவான கவனத்திற்கு... 6 ரயில்கள் ரத்துங்க: முழு விவரம் உள்ளே
பொறியியல் பணிகள் காரணமாக, நாளை 13-ந்தேதி இந்த வழித்தடம் வழியாக செல்லும் ரெயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி ரெயில்வே கோட்டத்தின் கோட்டை - முத்தரசநல்லூர் பிரிவுக்கு இடையே பொறியியல் பணிகள் காரணமாக நாளை 13-ந்தேதி திருச்சி வழியாக செல்லும் 6 பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
திருச்சி ரெயில்வே கோட்டத்தின் கோட்டை - முத்தரசநல்லூர் பிரிவுக்கு இடையேயான தற்போதைய சாலை, மேம்பாலம் அகற்றுதல் மற்றும் பொறியியல் பணிகள் காரணமாக, நாளை 13-ந்தேதி இந்த வழித்தடம் வழியாக செல்லும் ரெயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி கரூர் - திருச்சி பயணிகள் ரெயில் (வண்டி எண்: 76810), திருச்சி - கரூர் பயணிகள் ரெயில் (வண்டி எண்- 76809), திருச்சி - ஈரோடு பயணிகள் ரெயில் (வண்டி எண்- 56105), மயிலாடுதுறை - சேலம் பயணிகள் ரெயில் (வண்டி எண்- 16811), சேலம் - மயிலாடுதுறை பயணிகள் ரெயில் (வண்டி எண்- 16812), ஈரோடு - திருச்சி பயணிகள் ரெயில் (வண்டி எண்- 56810) உள்ளிட்ட ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
அதனால இந்த ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் உங்கள் பயணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். இதேபோல் ஈரோடு - திருச்சி பயணிகள் ரெயில் (வண்டி எண்- 56106) ஈரோட்டில் இருந்து காலை 8.10 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் கரூர் வரை மட்டுேம இயங்கும். பாலக்காடு - திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்- 16844) கரூர் வரை மட்டும் இயங்கும். மேலும் திருச்சியில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்படும் திருச்சி - பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்- 16843) திருச்சி - கரூர் இடையே ரத்து செய்யப்பட்டு கரூரில் இருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
காரைக்கால் - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்- 16187) காரைக்காலில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு திருச்சி, திண்டுக்கல், கரூர் வழியாக மாற்றுப்பாதையில் எர்ணாகுளத்திற்கு செல்லும். கடலூர் - மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்- 16231) கடலூரில் இருந்து மாலை 3.40 மணிக்கு புறப்பட்டு திண்டுக்கல், கரூர் வழியாக மாற்றுப்பாதையில் மைசூருக்கு சென்றடையும்.
இந்த ரெயில்கள் கோட்டை மற்றும் குளித்தலை ரெயில் நிலையங்களுக்கு செல்லாது. இந்த தகவல் திருச்சி ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மங்களூரூ - தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்- 16160) மங்களூரூவில் இருந்து காலை 6.45 மணிக்கு புறப்பட்டு 2 மணி நேரம் தாமதமாக தாம்பரத்திற்கு சென்றடையும். மன்னார்குடி - கோவை செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்- 16615) மன்னார்குடியில் இருந்து இரவு 8.25 மணிக்கு புறப்பட்டு 40 நிமிடம் தாமதமாக கோவைக்கு சென்றடையும். எனவே இந்த வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் இதை மறந்துடாதீங்க. அப்புறம் வருத்தப்படுவீங்க. கவனம் தேவைங்க.
தற்போது ரயில் பயணத்தையே அதிகம் பேர் விரும்புகின்றனர். மேலும் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் மக்கள் குடும்பத்துடன் ரயிலில் பிற மாவட்ட சுற்றுலாத்தலங்களுக்கு பயணம் செய்கின்றனர். இந்நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. எனவே குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்கள் பயணத்தை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள்.





















