மேலும் அறிய

திருமாவளவன் வரும் பாராளுமன்ற தேர்தலில் டெபாசிட் வாங்குவது சிரமம் - அண்ணாமலை

தமிழக டிஜிபி ஓய்வு பெறுவதற்கு இன்னும் இரண்டு மாதம் இருக்கிறது எனவே அவர் தமிழகம் அமைதி பூங்காவாக தான் இருக்கிறது என்று கூறுவார்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது பேசிய அவர், “ஈரோடு இடைத் தேர்தலில் திமுக கூட்டண வெற்றி பெற்றது என்பது 23 மாத திமுக ஆட்சிக்கு மக்கள் கொடுத்த வெகுமதி என்று எடுத்துக் கொள்ள முடியாது. இப்போது இருக்கும் சூழலில் திருமாவளவன் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் டெபாசிட் வாங்குவது சிரமம். 2018 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி தான் ஆட்சியில் நம்பர் ஒன்னாக இருந்தது. ஆனால் அதற்கு பின்னர் அவர்களுக்கு அப்படி சூழல் இல்லை. 1947க்கு பிறகு வடகிழக்கு மாநிலங்களை காங்கிரஸ் தங்கள் பக்கம் வைத்திருந்தது. ஆனால் தற்போது அவை முழுவதுமாக துடைத்தெறியப்பட்டு இருக்கிறது. வட கிழக்கு மாநிலங்களில் பாஜகவை முழுவதுமாக மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பதை பார்க்கமுடிகிறது. பாஜக வெற்றி பெறுவதற்கான காரணம் அடிப்படையில் தொண்டர்கள் உழைக்கிறார்கள். ஆனால் அடிப்படைத் தொண்டர்கள் கட்சியை உருவாக்கக்கூடிய தலைவர்கள், வழிகாட்டக்கூடிய தலைவர்கள் போன்றவர்கள் காங்கிரஸ் கட்சியில் இல்லை” என்றார்.


திருமாவளவன் வரும் பாராளுமன்ற தேர்தலில் டெபாசிட் வாங்குவது சிரமம் - அண்ணாமலை

இதனை தொடர்ந்து பேசிய அவர், “ஈரோடு கிழக்கில் மக்களுடைய தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறோம்.  இடைத்தேர்தல் என்றாலே ஆளும் கட்சி வெற்றி பெறுவது என்பது புதிய விஷயம் அல்ல. ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி குறித்த கேள்விக்கு? கடந்த 23 மாதம் திமுக அரசுக்கு  மக்கள் கொடுத்த வெகுமதி என்று பார்க்கக் கூடாது. திமுக கூட்டணியில் இருந்து வெளியே வர திருமாவளவன் முடிவு செய்து விட்டார். அதனால் அவர் இங்கு சேர்த்துக் கொள்வார்களா அங்கு சேர்த்துக் கொள்வார்களா என்கிற எண்ணத்தில் உள்ளார். ஏதோ ஒரு கார்னரில் அரசியல் செய்து கொண்டு உள்ளார் திருமாவளவன்.  திருமாவளவனை வெளியேற்றுவதற்கு திமுக தயாராகிவிட்டது என்று எண்ணுகிறேன் அதற்கான ஆரம்ப கால அறிகுறிகள் தான் அவர் பேசி வருவது. இப்போது இருக்கும் சூழலில் திருமாவளவன் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் டெபாசிட் வாங்குவது சிரமம்.  கூட்டணிக் கட்சிகளை அரவணைக்க வேண்டியது என்பது எங்களுடைய வேலை இல்லை. அந்தந்த கட்சிகள் அவர்களின் முடிவுகளை எடுப்பார்கள். மற்றொரு கட்சியின் பிரச்னையில் எப்போதும் தமிழக பாரதிய ஜனதா கட்சி உள்ளே நுழையாது.


திருமாவளவன் வரும் பாராளுமன்ற தேர்தலில் டெபாசிட் வாங்குவது சிரமம் - அண்ணாமலை

வரும் 2024 ஆம் ஆண்டில் பலம் வாய்ந்த கட்சியாக பாஜக இருப்பதன் காரணமாக தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் ஒரு நாளைக்கு பத்து முறை பாஜக, பாஜக என்று சொல்லிவிட்டு தான் தூங்குகிறார்கள். தமிழகத்தில் உள்ள பல அரசியல் கட்சித் தலைவர்கள் கும்மிடிப்பூண்டியை தாண்டி வட கிழக்கு மாநிலங்களுக்கு செல்ல வேண்டும். சிறுபான்மையின மக்கள் கிறிஸ்தவர்கள் போன்ற அதிகம் வாழும் மக்கள் பாரத ஜனதா கட்சியை தற்போது ஏற்றுக்கொள்ள துவங்கி விட்டனர். நாடு முழுவதும் பாஜகவை ஏற்றுக்கொள்ளும் இடத்திற்கு மக்கள் வந்துள்ளனர். தமிழக டிஜிபி ஓய்வு பெறுவதற்கு இன்னும் இரண்டு மாதம் இருக்கிறது எனவே அவர் தமிழகம் அமைதி பூங்காவாக தான் இருக்கிறது” என்று கூறுவார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget