மேலும் அறிய

திருச்சியில் நாட்டு இன மீன் குஞ்சுகளை ஆறுகளில் இருப்பு செய்தல் திட்டம் தொடக்கம்

திருச்சி மாவட்டம், முக்கொம்பு மேலணை காவிரி ஆற்றில் ரூபாய் 4.50 இலட்சம் மதிப்பீட்டில் நாட்டு இன மீன் குஞ்சுகளை ஆறுகளில் இருப்பு செய்தல் திட்டத்தினை அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் மத்திய அரசின் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தின் நிதியுதவி (100%)யுடன், பிரதான் மந்திரி சம்படா யோஜனா திட்டம் 2022-23 இன் கீழ் ஆறுகளில் நாட்டு இன நன்னீர் மீன்குஞ்சுகள் இருப்பு செய்தல் (River Ranching Programme Under (PMMSY) செயல்படுத்திட ஏதுவாக மொத்தம் ரூ.120 இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டு நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இத்திட்டமானது நாட்டு இன மீன் வகைகளான சேல் கெண்டை, கல்பாசு கெண்டை, இந்திய பெருங்கெண்டை மீன்களான கட்லா, ரோகு மற்றும் மிர்கால் ஆகியவற்றின் சினை மீன்கள் ஆறுகளிலிருந்து சேகரிக்கப்பட்டு மேட்டூர் அணை, பவானிசாகர், தஞ்சாவூர் மற்றும் மணிமுத்தாறு ஆகிய அரசு மீன்குஞ்சு உற்பத்தி பண்ணைகளில் தூண்டுதல் முறையில் மீன்குஞ்சு உற்பத்தி செய்யப்பட்டு, அம்மீன்குஞ்சுகள் விரலிகளாக வளர்க்கப்பட்டு மொத்தம் 40 இலட்சம் மீன் விரலிகள் தமிழ்நாட்டில் காவிரி, பவானி, தாமிரபரணி, வைகை ஆகியவற்றின் கிளை ஆறுகளில் இருப்பு செய்யும் திட்டமே River Ranching ஆகும்.

இத்திட்டத்தின் மூலம் ஆறுகளில் உள்நாட்டு மீன்வளத்தினை பெருக்கிடவும், ஆற்று மீன்பிடிப்பினை நம்பியுள்ள உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்திடவும், அழிந்து வரும் நாட்டு இன மீன் இனங்களை பாதுகாத்திடவும் ஆறுகளில் நிலைத்த வளம் குன்றா மீன்வளத்தை பேணுதல் (Sustainable stock maintenance of native fish species in rivers) போன்றவை இத்திட்டத்தின் நோக்கமாகும்.


திருச்சியில் நாட்டு இன மீன் குஞ்சுகளை ஆறுகளில் இருப்பு செய்தல் திட்டம் தொடக்கம்

அதன்படி காவேரி ஆற்றிலிருந்து சினை மீன்கள் சேகரிக்கப்பட்டு, அரசு மீன் உற்பத்தி நிலையங்களான தஞ்சாவூர் மாவட்டம் கரந்தை மீன்குஞ்சு உற்பத்தி நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தூண்டுதல் முறையில் மீன்குஞ்சு உற்பத்தி செய்யப்பட்டு, அவை விரலிகளாக வளர்க்கப்பட்டு, தற்போது காவேரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் இருப்பு செய்யப்பட உள்ளது. அதன்படி, காவேரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் 1.25 இலட்சம் நாட்டு இன மீன்குஞ்சுகள் இருப்பு செய்யப்பட உள்ளது. எனவே, இத்திட்டத்தின் மூலம் ஆறுகளில் நாட்டு இன கெண்டை மீன்களின் இருப்பு (Stock) அதிகரிக்கப்படும். இதன் மூலம் உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் நிலை நிறுத்தப்படும். இந்நிலையில் தமிழ்நாடு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள்  திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், முக்கொம்பு மேலணை காவிரி ஆற்றில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூபாய் 4.50 இலட்சம் மதிப்பீட்டில் நாட்டு இன மீன் குஞ்சுகளை ஆறுகளில் இருப்பு செய்தல் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

மேலும், இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப் குமார் இ.ஆ.ப.,அவர்கள், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எம்.பழனியாண்டி அ அவர்கள், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.சீ.கதிரவன், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் (திருச்சி மண்டலம்) திருமதி.ஆர்.சர்மிளா, உதவி இயக்குநர், திருமதி.ப.ரம்யாலட்சுமி. ஒன்றியக் குழுத் தலைவர் திரு.துரைராஜ், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Iranian President Raisi: ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. ஈரான் ஊடகங்கள் தகவல்
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. ஈரான் ஊடகங்கள் தகவல்
Breaking News Tamil LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 9 மணி நிலவரம் - 10.28% ஆக பதிவானது
Breaking News Tamil LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 9 மணி நிலவரம் - 10.28% ஆக பதிவானது
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Iranian President Raisi: யார் இந்த இப்ராஹிம் ரைசி? ஈரானின் கொடுங்கோல் அதிபரா? அமெரிக்காவின் எதிரியானது எப்படி?
Iranian President Raisi: யார் இந்த இப்ராஹிம் ரைசி? ஈரானின் கொடுங்கோல் அதிபரா? அமெரிக்காவின் எதிரியானது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iranian President Raisi: ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. ஈரான் ஊடகங்கள் தகவல்
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. ஈரான் ஊடகங்கள் தகவல்
Breaking News Tamil LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 9 மணி நிலவரம் - 10.28% ஆக பதிவானது
Breaking News Tamil LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 9 மணி நிலவரம் - 10.28% ஆக பதிவானது
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Iranian President Raisi: யார் இந்த இப்ராஹிம் ரைசி? ஈரானின் கொடுங்கோல் அதிபரா? அமெரிக்காவின் எதிரியானது எப்படி?
Iranian President Raisi: யார் இந்த இப்ராஹிம் ரைசி? ஈரானின் கொடுங்கோல் அதிபரா? அமெரிக்காவின் எதிரியானது எப்படி?
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Embed widget