மேலும் அறிய

திருச்சியில் நாட்டு இன மீன் குஞ்சுகளை ஆறுகளில் இருப்பு செய்தல் திட்டம் தொடக்கம்

திருச்சி மாவட்டம், முக்கொம்பு மேலணை காவிரி ஆற்றில் ரூபாய் 4.50 இலட்சம் மதிப்பீட்டில் நாட்டு இன மீன் குஞ்சுகளை ஆறுகளில் இருப்பு செய்தல் திட்டத்தினை அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் மத்திய அரசின் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தின் நிதியுதவி (100%)யுடன், பிரதான் மந்திரி சம்படா யோஜனா திட்டம் 2022-23 இன் கீழ் ஆறுகளில் நாட்டு இன நன்னீர் மீன்குஞ்சுகள் இருப்பு செய்தல் (River Ranching Programme Under (PMMSY) செயல்படுத்திட ஏதுவாக மொத்தம் ரூ.120 இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டு நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இத்திட்டமானது நாட்டு இன மீன் வகைகளான சேல் கெண்டை, கல்பாசு கெண்டை, இந்திய பெருங்கெண்டை மீன்களான கட்லா, ரோகு மற்றும் மிர்கால் ஆகியவற்றின் சினை மீன்கள் ஆறுகளிலிருந்து சேகரிக்கப்பட்டு மேட்டூர் அணை, பவானிசாகர், தஞ்சாவூர் மற்றும் மணிமுத்தாறு ஆகிய அரசு மீன்குஞ்சு உற்பத்தி பண்ணைகளில் தூண்டுதல் முறையில் மீன்குஞ்சு உற்பத்தி செய்யப்பட்டு, அம்மீன்குஞ்சுகள் விரலிகளாக வளர்க்கப்பட்டு மொத்தம் 40 இலட்சம் மீன் விரலிகள் தமிழ்நாட்டில் காவிரி, பவானி, தாமிரபரணி, வைகை ஆகியவற்றின் கிளை ஆறுகளில் இருப்பு செய்யும் திட்டமே River Ranching ஆகும்.

இத்திட்டத்தின் மூலம் ஆறுகளில் உள்நாட்டு மீன்வளத்தினை பெருக்கிடவும், ஆற்று மீன்பிடிப்பினை நம்பியுள்ள உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்திடவும், அழிந்து வரும் நாட்டு இன மீன் இனங்களை பாதுகாத்திடவும் ஆறுகளில் நிலைத்த வளம் குன்றா மீன்வளத்தை பேணுதல் (Sustainable stock maintenance of native fish species in rivers) போன்றவை இத்திட்டத்தின் நோக்கமாகும்.


திருச்சியில் நாட்டு இன மீன் குஞ்சுகளை ஆறுகளில் இருப்பு செய்தல் திட்டம் தொடக்கம்

அதன்படி காவேரி ஆற்றிலிருந்து சினை மீன்கள் சேகரிக்கப்பட்டு, அரசு மீன் உற்பத்தி நிலையங்களான தஞ்சாவூர் மாவட்டம் கரந்தை மீன்குஞ்சு உற்பத்தி நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தூண்டுதல் முறையில் மீன்குஞ்சு உற்பத்தி செய்யப்பட்டு, அவை விரலிகளாக வளர்க்கப்பட்டு, தற்போது காவேரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் இருப்பு செய்யப்பட உள்ளது. அதன்படி, காவேரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் 1.25 இலட்சம் நாட்டு இன மீன்குஞ்சுகள் இருப்பு செய்யப்பட உள்ளது. எனவே, இத்திட்டத்தின் மூலம் ஆறுகளில் நாட்டு இன கெண்டை மீன்களின் இருப்பு (Stock) அதிகரிக்கப்படும். இதன் மூலம் உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் நிலை நிறுத்தப்படும். இந்நிலையில் தமிழ்நாடு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள்  திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், முக்கொம்பு மேலணை காவிரி ஆற்றில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூபாய் 4.50 இலட்சம் மதிப்பீட்டில் நாட்டு இன மீன் குஞ்சுகளை ஆறுகளில் இருப்பு செய்தல் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

மேலும், இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப் குமார் இ.ஆ.ப.,அவர்கள், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எம்.பழனியாண்டி அ அவர்கள், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.சீ.கதிரவன், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் (திருச்சி மண்டலம்) திருமதி.ஆர்.சர்மிளா, உதவி இயக்குநர், திருமதி.ப.ரம்யாலட்சுமி. ஒன்றியக் குழுத் தலைவர் திரு.துரைராஜ், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"Sadist அரசு" பரிதாபங்கள் வீடியோவை வைத்து மத்திய அரசை சாடிய ஸ்டாலின்!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
"தெரியாத பெண்ணிடம் I like youனு மெசேஜ் பண்ணா.. இனி பிரச்னைதான்" நீதிபதி பரபர கருத்து!
”ஆளுநருக்கு தனி அதிகாரம் இருக்கு” தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு..
”ஆளுநருக்கு தனி அதிகாரம் இருக்கு” தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

NEEK Movie review | விடிய விடிய ஒட்டிய NEEK! தனுஷ் செய்த பெரிய தப்பு? காவியமா..? கிரிஞ்சா..?Annamalai | சால்வை போட வந்த நிர்வாகி தள்ளி விட்ட கே.பி ராமலிங்கம் அ.மலை நிகழ்ச்சியில் அதிர்ச்சி! | BJPMarina Police vs Lady : ’’இருட்டுல என்ன பண்றீங்க?’’அநாகரிகமாக விசாரித்த போலீஸ் மெரினாவில் பெண் ஆவேசம்!Delhi New CM | டெல்லியின் புதிய முதல்வர்! பெண் MLA விற்கு அடித்த ஜாக்பாட்! யார் இந்த ரேகா குப்தா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"Sadist அரசு" பரிதாபங்கள் வீடியோவை வைத்து மத்திய அரசை சாடிய ஸ்டாலின்!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
"தெரியாத பெண்ணிடம் I like youனு மெசேஜ் பண்ணா.. இனி பிரச்னைதான்" நீதிபதி பரபர கருத்து!
”ஆளுநருக்கு தனி அதிகாரம் இருக்கு” தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு..
”ஆளுநருக்கு தனி அதிகாரம் இருக்கு” தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு..
Annamalai Tweet: தமிழக அரசு உதவ வேண்டும்... என்ன கேட்கிறார் அண்ணாமலை.?
தமிழக அரசு உதவ வேண்டும்... என்ன கேட்கிறார் அண்ணாமலை.?
“டெபாசிட் போய்டும் உதயகுமார்! ஓபிஎஸ் நல்லவர்; ஆனால்...” – பொளந்துகட்டிய புகழேந்தி
“டெபாசிட் போய்டும் உதயகுமார்! ஓபிஎஸ் நல்லவர்; ஆனால்...” – பொளந்துகட்டிய புகழேந்தி
யார் அரசியல் பண்றாங்க? இதில் என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு? – தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி பதிலடி
யார் அரசியல் பண்றாங்க? இதில் என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு? – தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி பதிலடி
"பெங்களூரு டிராபிக்.. கடவுளே வந்தாலும் பிரச்னையை தீர்க்க முடியாது" டி.கே. சிவகுமார் தடாலடி!
Embed widget