Trichy Shutdown: திருச்சியில் நாளை மின்தடை பகுதிகள் (12.03.2025 ): ஏரியாக்கள் லிஸ்ட்.!
Trichy Power Shutdown March 12,2025: திருச்சியில் மின் பராமரிப்பு பணி காரணமாக தில்லை நகர், மலைக்கோட்டை காலனி, உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்தடையானது அறிவிக்கப்பட்டுள்ளது.

Trichy Power Shutdown: திருச்சியில், மார்ச் 12ஆம் தேதி , எந்தெந்த இடங்களில் மின்தடை செய்யப்படும் என்பது குறித்து பார்ப்போம். மின்சாரம் வழங்குவதில், எவ்வித தடையும் இருக்கக் கூடாது என , அவ்வப்போது சில இடங்களில் மின்பராமரிப்பு பணிகளை, மின்வாரியம் மேற்கொள்வது வழக்கம். இதனால், எதிர்காலத்தில் மின்கசிவு உள்ளிட்ட மிகப்பெரிய பிரச்னைகள், ஏற்படாதவாறு முனனரே சரி செய்யப்படும்.
திருச்சியில் நாளை மின்தடை: 12-03-2025
இந்நிலையில், திருச்சியில் பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின் தடையானது செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகும். இந்நிலையில், நாளை பாதாள சாக்கடை பணிகளானது நாளை மேற்கொள்ளப்படுகிறது என கூறப்படுகிறது. இதன் காரணமாக பல பகுதிகளில் மின்தடையானது இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது
இதனால், திருச்சியில் நாளை பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலான கால அளவில் மின்சாரமானது சில பகுதிகளில் இருக்காது என கூறப்படுகிறது.
மின்தடை செய்யப்படும் இடங்கள்: மார்ச்.12 ( புதன் )
தில்லை நகர் சந்திப்பு முதல் மாரிஸ் மேம்பாலம் வரை, தில்லைநகர் முதல் கிராஸ் மேற்கு, இரண்டாவது கிராஸ், விஸ்தரிப்பு, சாஸ்திரி ரோடு, வடக்கு, ஒன்று முதல் ஐந்து கிராஸ் வரை, தேவர் காலனி சாலை,ரோடு கிழக்கு, கரூர் பைபாஸ் ரோடு,அண்ணாமலை நகர் ஒரு பகுதி மற்றும் மலைக்கோட்டை காலனி ஆகிய பகுதிகளில் நாளை மின்தடையானது காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
மின்தடை குறித்தான அறிவிப்பானது அதிகாரப்பூர்வமாக மின்வாரிய வலைதள பக்கத்தில் தெரிவிக்கப்படவில்லை. எனினும், பாதாள சாக்கடை பணிகள் காரணமாக, மின்தடை இருக்கும் என்ற தகவல் உள்ளுர்மட்ட பணியாளர்கள் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Also Read: கோவை, நெல்லை உள்ளிட்ட 4 நகரங்களில் ரிங் ரோடு: திட்டம்போட்ட தமிழ்நாடு அரசு.!
பாதாள சாக்கடை பணிகள்:
தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு மின்சார துறை சார்பில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக ஒருநாள் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை பணிகள் காரணமாக மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
மின் தடை வழங்கப்படும் நாளில், பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். அந்தவகையில், திருச்சியில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 4 மணிவரை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால், பொதுமக்கள், தங்களது முக்கிய பணிகளை இன்றே திட்டமிட்டு முடித்துக் கொள்ளுங்கள்.
Also Read: திருப்பதி கோயிலுக்கு மேலே விமானங்கள் பறக்க கூடாது - தேவஸ்தானத்திற்கு மத்திய அரசு சொன்னது என்ன?

