Trichy Power Shutdown: திருச்சியில் நாளை(07.08.25) கரண்ட் இருக்காது.. லிஸ்ட்ல உங்கள் ஏரியா இருக்கா?
Trichy Power shutdown ; திருச்சி மாவட்டத்தில் முக்கிய இடங்களில் நாளை(07.08.2025) மின் தடை ஏற்ப்பட இருக்கிறது. இதனால் குறிப்பிட்ட பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை செய்யப்படும்

Trichy Power Cut Tomorrow: திருச்சி மாவட்டத்தில் நாளை ஆகஸ்ட் 07 ஆம் தேதி) பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யப்படுகிறது. அதனால மக்களே நீங்கள் முன்கூட்டியே குடிநீர் பிடித்தல், தண்ணீர் நிரப்பிக் கொள்ளுதல் போன்ற முக்கியமான அத்தியாவசிய தேவைகளை செய்துக்கோங்க. அப்படியே உங்க ஏரியாவும் லிஸ்ட்ல இருக்கான்னு செக் செய்து கொள்ளுங்க.
திருச்சி மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட் 07 ) இந்த பகுதியில் எல்லாம் மின்சார விநியோகம் இருக்காதுங்க. மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி மாவட்டத்தில் சில முக்கிய இடங்களில் நாளை (ஆகஸ்ட் 7 - வியாழக்கிழமை மின் தடை மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதனால் குறிப்பிட்ட பகுதிகளில் அன்றைய தினம் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் மின்வாரிய தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்த பராமரிப்பு பணிகளின் போது சம்பந்தப்பட்ட மின் பாதைகளை சேர்ந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படும். இதுதொடர்பாக அப்பகுதி மக்களுக்கு முன்னறிவிப்பு மூலம் தகவல் தரப்படுவது வழக்கம்.
நாளைய மின் தடை எங்கெல்லாம்?
கொப்பம்பட்டி
வைரசீட்டிபாளையம், நாகநல்லூர், உப்பிலியபுரம், மரடி, சோபனாபுரம், ப.மேட்டூர், கொப்பம்பட்டி, கோட்டைப்பாளையம், சண்புதூர், பச்சைபுரம், வெங்கடாச்சலபுரம், காலனி.
துவரங்குறிச்சி
பஞ்சாயத்து, செவந்தம்பட்டி, சடவேலம்பட்டி, அதிகாரம், ஆலம்பட்டி, தேத்தூர், உசிலம்பட்டி, அழகாபுரி, அக்கியம் பட்டி, ராமயபுரி, பிடாரிப்பட்டி, இக்கியாகுறிச்சி வலம்பட்டி, குறிச்சி, கரடிப்பட்டி
டி.ரெங்கநாதபுரம்
குடிநீர், நாரசிங்கபுரம், பச்சைமலை, செங்கட்டுப்பட்டி, செல்லிபாளையம், மாணிக்கபுரம், அம்மாபாளையம், தண்ணீர்பாளையம், ஒட்டம்பட்டி, பெருமாள்பாளையம், மருவத்தூர்சின்னபால்மலை.
டி.முருங்கப்பட்டி
முருங்கப்பட்டி, வெள்ளாளபட்டி, மங்கப்பட்டி, பத்தர்பேட்டை
முன்னெச்சரிக்கை:
இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் அதற்கேற்ப திட்டமிட்டு அன்றாட பணிகளை நடவடிக்கைகளை எடுக்குமாறு மின்சார வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






















