மேலும் அறிய

திருச்சியில் 100 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

திருச்சியில் உரிய அனுமதியின்றி கட்டப்பட்ட 100 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது.

திருச்சியில் உரிய அனுமதியின்றி கட்டப்பட்ட 100 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. திருச்சி உய்யக்கொண்டான் திருமலையைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரையை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், திருச்சி உய்யக்கொண்டான் திருமலை பகுதியில் விதிமுறைகளை மீறி 100 வீடுகள் கொண்ட குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பல்வேறு விதிமுறை மீறல்கள் உள்ளது. உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற உத்தரவுகள்படியும், தமிழக அரசு விதித்துள்ள உள்ளாட்சி துறைகளின் விதிகளை மீறியும் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. 54 சதவீதம் விதிகளை மீறி கட்டிடம் கட்டப்பட்டிருக்கிறது. கட்டிட விதிமீறல் தொடர்பாக திருச்சி மாநகராட்சி, மாவட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடங்களை இடிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த மனு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயணபிரசாத் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உரிய அனுமதியின்றி கட்டப்பட்ட 100 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க உத்தரவிடப்பட்டது.


திருச்சியில்  100 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க  உயர்நீதிமன்றம் உத்தரவு

மேலும் அனுமதியின்றி கட்டப்படும் கட்டிடத்திற்கு துணைபோன அனைத்து அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து அறிக்கை தரவும் ஆணையிடப்பட்டது. இனி இவ்வாறு செயல்படும் அதிகாரிகள், முக்கியத்துவம் இல்லாத பதவிகளுக்கு மாற்ற வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். தவறு செய்த அதிகாரிகள் மீது 6 வாரத்தில் நடவடிக்கை எடுக்க தவறினால் வருவாய் துறை செயலர் நேரில் ஆஜராக நேரிடும் என எச்சரித்த நீதிபதிகள், அனுமதியின்றி கட்டிய கட்டிடத்தில் வீடு வாங்கி பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உரிமையாளர் உரிய நிவாரணம் தர ஆணையிட்டனர். இதனை தொடர்ந்து திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பாக அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆலோசனை நடத்தினார். பின்பு அனுமதியின்றி கட்டபட்டுள்ள கட்டிடத்தை இடிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget