மேலும் அறிய

Crime: கத்தியால் தன்னை தானே கிழித்து கொண்ட நபர் - திருச்சியில் பரபரப்பு

திருச்சி மாநகரில் அரசு வேலை வாங்கி தருவதாக 9 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

திருச்சி மாநகர், கோட்டை ரெயில் நிலையம் பகுதியை சேர்ந்தவர் ஜெகன்நாதன். எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு உறையூர் கல்நாயக்கன் தெருவை சேர்ந்த தர்மலிங்கம் என்பவர் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு அறிமுகமானார். அப்போது, ஜெகன்நாதனிடம் சுகாதாரத்துறை ஆய்வாளர் பணி வாங்கி தருவதாக கூறி ரூ.9 லட்சம் வாங்கியுள்ளார். ஆனால் தற்போது வரை அவருக்கு வேலை வாங்கி தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். மேலும் என்னிடம் வாங்கிய பணத்தை திரும்பி கொடுக்கும்படி ஜெகன்நாதன் கேட்டு உள்ளார். இந்நிலையில் தர்மலிஙகம் தலைமறைவாக இருந்துள்ளார். 

இதனால் ஜெகன்நாதன் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இந்த நிலையில் நேற்று முந்தினம் இரவு அல்லிமால் தெரு அருகே ஜெகன்நாதன், தர்மலிங்கத்தை பார்த்து உள்ளார். அப்போது அவரை பிடிக்க முயன்ற போது, தர்மலிங்கம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, என்னை பிடிக்க வந்தால் என் உடலை கத்தியால் கிழித்து விடுவேன் என்று கூறியுள்ளார். தொடர்ந்து அவர் பிடிக்க முயன்றபோது, தனது உடலை கத்தியால் கிழித்துக்கொண்டு சிங்காரத்தோப்பு சூப்பர் பஜார் வழியாக இப்ராஹிம் பார்க் வரை ஓடினார்.


Crime: கத்தியால் தன்னை தானே கிழித்து கொண்ட  நபர் - திருச்சியில் பரபரப்பு

இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அவரிடம் இருந்த கத்தியை பிடிங்கினர். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து கோட்டை போலீசார் விசாரணை நடத்தினர். தர்மலிங்கம் தன்னை அமைச்சரின் உதவியாளர் என்று கூறி பலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக ஏமாற்றியது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கத்தியால் கிழித்ததில் காயம் அடைந்த தர்மலிங்கத்தை போலீசார் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாட்டில் கடந்த சில வருடங்களாக அரசு வேலை வாங்கித் தருவதாக பலர் தொடர்ந்து மோசடி சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆகையால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டுமென தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறை சார்பாக தொடர்ந்து அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. அரசு தரப்பில் அறிவிக்கப்படும் தேர்வுகளை முறைப்படி எழுதினால் மட்டுமே அரசு வேலை பெற முடியும். பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கி தரப்படும் என ஆசை வார்த்தை கூறி பணம் பறிக்கும் கும்பல் அதிகரித்துள்ளது. அவ்வாறு ஈடுபடுபவர்கள் மீது சட்ட ரீதியான நடைமுறைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆகையால் பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டுமென காவல்துறை தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget