மேலும் அறிய

திருச்சி மத்திய மண்டலத்தில் 1,383 பிடிவாரண்ட் நிறைவேற்றம் - ஐஜி கார்த்திக்கேயன்

திருச்சி மத்திய மண்டலத்தில் ஒரே வாரத்தில் 1,383 பிடிவாரண்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. 28 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி மத்திய மண்டலத்தில் கடந்த ஓராண்டாக திருட்டு, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து அதிக அளவில் நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்தது. இவற்றை தடுக்க காவல்துறையின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவந்தனர். மேலும் தொடர் குற்றசம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில், குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜர் ஆகாமல் ஏராளமான ரவுடிகள், குற்றவாளிகள் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்தனர். இவர்களை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்து இருந்தது. இதைத்தொடர்ந்து அவர்களை பிடிக்க கடந்த 1-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை ஒரு வாரம் சிறப்பு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதில், மத்திய மண்டலம் முழுவதுமாக மொத்தம் 1,383 பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட ரவுடிகள் மற்றும் குற்றவாளிகள் பிடிக்கப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதில் திருச்சியில் 77 பிடிவாரண்டு, புதுக்கோட்டையில் 122, கரூரில் 48, பெரம்பலூரில் 50, அரியலூரில் 266 பிடிவாரண்டும், தஞ்சாவூரில் 308, திருவாரூரில் 303, நாகப்பட்டினத்தில் 37, மயிலாடுதுறையில் 102-ம் அடங்கும். 

 

 

குறிப்பாக செக் மோசடி வழக்குகளில் 102 பிடிவாரண்டு, ஜாமீனில் விடுவிக்கக்கூடிய வழக்குகளில் 10 பிடிவாரண்டு நிறைவேற்றப்பட்டுள்ளன. அத்துடன் 40 ரவுடிகள் மீது இருந்த பிடிவாரண்டு நிறைவேற்றப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் கொலை, போக்சோ வழக்குகள் மற்றும் போதை பொருள் கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய 28 குற்றவாளிகள் கடந்த 7 நாட்களில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் மத்திய மண்டலத்தில் ரவுடிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கையில், 114 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 149 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ரவுடிகளின் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, கட்ட பஞ்சாயத்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களின் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget