மேலும் அறிய

திருச்சி மத்திய மண்டலத்தில் 1,383 பிடிவாரண்ட் நிறைவேற்றம் - ஐஜி கார்த்திக்கேயன்

திருச்சி மத்திய மண்டலத்தில் ஒரே வாரத்தில் 1,383 பிடிவாரண்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. 28 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி மத்திய மண்டலத்தில் கடந்த ஓராண்டாக திருட்டு, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து அதிக அளவில் நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்தது. இவற்றை தடுக்க காவல்துறையின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவந்தனர். மேலும் தொடர் குற்றசம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில், குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜர் ஆகாமல் ஏராளமான ரவுடிகள், குற்றவாளிகள் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்தனர். இவர்களை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்து இருந்தது. இதைத்தொடர்ந்து அவர்களை பிடிக்க கடந்த 1-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை ஒரு வாரம் சிறப்பு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதில், மத்திய மண்டலம் முழுவதுமாக மொத்தம் 1,383 பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட ரவுடிகள் மற்றும் குற்றவாளிகள் பிடிக்கப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதில் திருச்சியில் 77 பிடிவாரண்டு, புதுக்கோட்டையில் 122, கரூரில் 48, பெரம்பலூரில் 50, அரியலூரில் 266 பிடிவாரண்டும், தஞ்சாவூரில் 308, திருவாரூரில் 303, நாகப்பட்டினத்தில் 37, மயிலாடுதுறையில் 102-ம் அடங்கும். 

 

 

குறிப்பாக செக் மோசடி வழக்குகளில் 102 பிடிவாரண்டு, ஜாமீனில் விடுவிக்கக்கூடிய வழக்குகளில் 10 பிடிவாரண்டு நிறைவேற்றப்பட்டுள்ளன. அத்துடன் 40 ரவுடிகள் மீது இருந்த பிடிவாரண்டு நிறைவேற்றப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் கொலை, போக்சோ வழக்குகள் மற்றும் போதை பொருள் கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய 28 குற்றவாளிகள் கடந்த 7 நாட்களில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் மத்திய மண்டலத்தில் ரவுடிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கையில், 114 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 149 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ரவுடிகளின் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, கட்ட பஞ்சாயத்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களின் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

BSP Armstrong: ஆர்ம்ஸ்ட்ராங்கின் உடலை மயானத்தில் தான் அடக்கம் செய்ய முடியும் - சென்னை உயர்நீதிமன்றம்
BSP Armstrong: ஆர்ம்ஸ்ட்ராங்கின் உடலை மயானத்தில் தான் அடக்கம் செய்ய முடியும் - சென்னை உயர்நீதிமன்றம்
BSP Armstrong Murder: ஆர்ம்ஸ்ட்ராங் உடல் இன்று நல்லடக்கம் - உயர்நீதிமன்ற தீர்ப்பு என்ன?
BSP Armstrong Murder: ஆர்ம்ஸ்ட்ராங் உடல் இன்று நல்லடக்கம் - உயர்நீதிமன்ற தீர்ப்பு என்ன?
MS Dhoni Birthday: கேப்டன் கூல், தல தோனிக்கு இன்று பிறந்தநாள் - 43 சுவாரஸ்யமான தகவல்கள் இதோ..!
MS Dhoni Birthday: கேப்டன் கூல், தல தோனிக்கு இன்று பிறந்தநாள் - 43 சுவாரஸ்யமான தகவல்கள் இதோ..!
Breaking News LIVE, July 7 : ஆர்ம்ஸ்ட்ராங்கின் உடலை மயானத்தில்தான் அடக்கம் செய்ய முடியும் - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE, July 7 : ஆர்ம்ஸ்ட்ராங்கின் உடலை மயானத்தில்தான் அடக்கம் செய்ய முடியும் - சென்னை உயர்நீதிமன்றம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?BSP Armstrong death | ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலைBSP Armstrong death | ஆம்ஸ்ட்ராங் படுகொலை ஆற்காடு பாலு  கும்பல் சரண்! பின்னணியை துருவும் போலீஸ்Athulya Ravi News | நடிகை அதுல்யா ரவி வீட்டில் நடந்த சம்பவம்!  CCTV-ல் பதிவான பகீர் காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BSP Armstrong: ஆர்ம்ஸ்ட்ராங்கின் உடலை மயானத்தில் தான் அடக்கம் செய்ய முடியும் - சென்னை உயர்நீதிமன்றம்
BSP Armstrong: ஆர்ம்ஸ்ட்ராங்கின் உடலை மயானத்தில் தான் அடக்கம் செய்ய முடியும் - சென்னை உயர்நீதிமன்றம்
BSP Armstrong Murder: ஆர்ம்ஸ்ட்ராங் உடல் இன்று நல்லடக்கம் - உயர்நீதிமன்ற தீர்ப்பு என்ன?
BSP Armstrong Murder: ஆர்ம்ஸ்ட்ராங் உடல் இன்று நல்லடக்கம் - உயர்நீதிமன்ற தீர்ப்பு என்ன?
MS Dhoni Birthday: கேப்டன் கூல், தல தோனிக்கு இன்று பிறந்தநாள் - 43 சுவாரஸ்யமான தகவல்கள் இதோ..!
MS Dhoni Birthday: கேப்டன் கூல், தல தோனிக்கு இன்று பிறந்தநாள் - 43 சுவாரஸ்யமான தகவல்கள் இதோ..!
Breaking News LIVE, July 7 : ஆர்ம்ஸ்ட்ராங்கின் உடலை மயானத்தில்தான் அடக்கம் செய்ய முடியும் - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE, July 7 : ஆர்ம்ஸ்ட்ராங்கின் உடலை மயானத்தில்தான் அடக்கம் செய்ய முடியும் - சென்னை உயர்நீதிமன்றம்
HBD MS Dhoni: முடி வெட்டாதீங்க! முன்னாள் அதிபரின் மனம் கவர்ந்த தோனியின் ஹேர்ஸ்டைல்! தோனிக்கு விசில் அடிங்க..
முடி வெட்டாதீங்க! முன்னாள் அதிபரின் மனம் கவர்ந்த தோனியின் ஹேர்ஸ்டைல்!
Kidney Cancer: சிறுநீரக புற்றுநோயைத் தடுப்பது எப்படி- உங்களுக்கான சரியான ஆலோசனைகள் இதோ..!
சிறுநீரக புற்றுநோயைத் தடுப்பது எப்படி- உங்களுக்கான சரியான ஆலோசனைகள் இதோ..!
Rasipalan: மிதுனத்துக்கு உற்சாகம், கடகத்துக்கு பொறுப்பு-  உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
Rasipalan: மிதுனத்துக்கு உற்சாகம், கடகத்துக்கு பொறுப்பு- உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
ZIM vs IND T20I: மீண்டு வருமா கில்லின் இளம்படை? 2வது டி20 போட்டியில் இந்தியா - ஜிம்பாப்வே இன்று மோதல்
மீண்டு வருமா கில்லின் இளம்படை? 2வது டி20 போட்டியில் இந்தியா - ஜிம்பாப்வே இன்று மோதல்
Embed widget