மேலும் அறிய

திருச்சி முக்கொம்பு பழைய தடுப்பணையை இடிக்கும் பணி தொடங்கியது

முக்கொம்பு காவிரி தடுப்பணை கதவணைகள் புனரமைக்கும் பணி மற்றும் கொள்ளிடம் மேலணையில் உள்ள தற்காலிக தடுப்பணையை இடிக்கும் பணி தொடங்கியது.

கொள்ளிடம் தடுப்பணை 1836ம் ஆண்டு வெள்ளையர்களால் கட்டப்பட்டது. 45 மதகுகள் ஒரு பிரிவாகவும், 10 மதகுகள் இன்னொரு பிரிவாகவும் மொத்தம் 55 மதகுகளுடன் இது உருவாக்கப்பட்டது. காவிரியில் மழை காலங்களில் மிக அதிக வெள்ளம் வரும்போது கொள்ளிடத்தின் வழியாக உபரிநீரை வெளியேற்றவும், மற்ற காலங்களில் பாசனம் மற்றும் குடிநீருக்காவும் இந்த திட்டத்தை உருவாக்கினார்கள். கடந்த 2018 ஆம் ஆண்டு கர்நாடகத்திலும், கேரளத்திலும் வரலாறு காணாத மழை பெய்தது. இதனால் அங்குள்ள அணைகள் நிரம்பி வழிந்ததால் உபரிநீர் முழுவதும் மேட்டூர் அணைக்கு விடப்பட்டது. மேட்டூர் அணை கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ம் தேதி நிரம்பியது. அதன் பிறகும் வினாடிக்கு 2 லட்சம் கனஅடிக்கு மேல் கர்நாடகத்தில் இருந்து தண்ணீர் வந்தது. அதை அப்படியே மேட்டூர் அணையில் இருந்து திறந்து விட்டனர். இந்நிலையில் பவானி, அமராவதி அணைகளில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டதால் காவிரியில்வினாடிக்கு 2.4 லட்சம் கனஅடி சென்றது. இந்த வெள்ளத்தை காவிரி தாங்காது என்பதால் காவிரியில் வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடியை மட்டும் வெளியேற்றிவிட்டு 2.1 லட்சம் கனஅடி தண்ணீரை கொள்ளிடம் வழியாக வெளியேற்றினர்.

தொடர்ந்து ஒருவாரத்திற்கு மேல் 1 லட்சம் கனஅடிக்கு மேல் கொள்ளிடம் வழியாக வெளியேற்றப்பட்டதால் கடந்த ஆண்டு இதே நாளில்(22.8.2018) இரவு 8 மணி அளவில் கொள்ளிடம் தடுப்பணை உடைந்து போனது. ஆனால் உடைப்பு ஏற்பட்டபோது கொள்ளிடம் வழியாக வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி மட்டுமே தண்ணீர் சென்றது. 45 மதகுகள் கொண்ட தடுப்பணையில் 5 முதல் 13 வரை உள்ள மதகுகள் வெள்ளத்தில் அடைத்து செல்லப்பட்டது. இதனால் விவசாயிகள் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காதோ என்ற  அச்சமான சூழ்நிலையில் இருந்தார்கள்.


திருச்சி முக்கொம்பு பழைய தடுப்பணையை இடிக்கும் பணி தொடங்கியது

இதனை தொடர்ந்து பழைய அணையை பலப்படுத்தி பாதுகாப்பாக வைத்திருந்தாலும், புதிய கதவணையும் ரூ.387.60 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டது. இந்தச்சூழலில், கர்நாடகத்தில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது பெய்துவரும் மழையால் கிடைக்கும் உபரிநீர் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடும் தருணங்களில் கொள்ளிடத்தில் பிரித்து அனுப்புவதில் தற்காலிக காப்பணை இடையூறாக உள்ளது. புதிய கதவணை இல்லாத தருணங்களில் பாதுகாப்பு அரணாக இருந்த தற்காலிக காப்பணையானது, புதிய கதவணை கட்டப்பட்ட பிறகு இடிக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. ஏனெனில், சேதமடைந்த கதவணையில் ஷட்டர்கள் வழியாக தண்ணீரை வெளியேற்றலாம். ஆனால், சேதமடைந்த பகுதியில் மதகு எண் 4 முதல் 16 வரையில் கட்டப்பட்டுள்ள தாற்காலிக காப்பணையில் ஷட்டர்கள் கிடையாது. முழுவதும் கான்கீரீட் கட்டமைப்புதான். எனவே, வெள்ள நீரை தேக்கி வைத்து தேவையான தருணங்களில் வெளியேற்ற முடியாது. வெள்ளக் காலங்களில் காப்பணை இடையூறாவே உள்ளது. எனவே, இதனை அகற்றும் பணியை பொதுப்பணித்துறை அலுவலர்கள் திட்டமிட்டு அரசுக்கு பரிந்துரை செய்தனர். அரசின் ஒப்புதல் பெற்று, காப்பணை அகற்றும் பணி நேற்று தொடங்கியது.


திருச்சி முக்கொம்பு பழைய தடுப்பணையை இடிக்கும் பணி தொடங்கியது

இந்தாண்டு மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுவதற்கு முன்பாக காவிரி கதவணையில் உள்ள மதகுகளில் பொருத்தப்பட்டுள்ள ஷட்டர்களையும் புனரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கதவணையில் உள்ள 41 கதவணைகளையும் புனரமைக்கும் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன. முக்கொம்பு மேலணையில் நேற்று நடைபெற்ற நிகழ்வில், நீர்வளத் துறையின் திருச்சி ஆற்றுப் பாதுகாப்பு கோட்ட செயற்பொறியாளர் தமிழ்ச் செல்வன், ஆற்றுப்பாதுகாப்பு கோட்ட உதவி செயற்பொறியாளர் பி. முருகானந்தம், மேலணை உதவி பொறியாளர் பி. ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
கொந்தளித்த விவசாயிகள்.. பரபரப்பில் மயிலாடுதுறை..
கொந்தளித்த விவசாயிகள்.. பரபரப்பில் மயிலாடுதுறை..
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
எஸ்பிபி-க்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உதயமான ஜாம்பவான் பாடகர் - யாரு தெரியுமா? எப்படி?
எஸ்பிபி-க்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உதயமான ஜாம்பவான் பாடகர் - யாரு தெரியுமா? எப்படி?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
Embed widget