மேலும் அறிய
அக்னிபாத் திட்டத்தின் கீழ் இராணுவத்தில் சேர ஒரு சூப்பர் வாய்ப்பு.. ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியீடு- உடனே விண்ணப்பியுங்கள்!
அக்னிபாத் திட்டத்தின் கீழ் 2027 ஆம் ஆண்டுக்கான அக்னிவீர் இராணுவ பணிக்கான திருச்சிராப்பள்ளி இராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகத்தின் தேர்வு அறிவிப்பு.

அக்னி பாத்
Source : whatsapp
திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி & மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அக்னிவீர் திட்டம்
இந்திய இராணுவத்தில் அக்னிவீர் இராணுவ பணிக்கான திருமணமாகாத ஆண்கள் தேர்வு செய்வதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில்13 பிப்ரவரி 2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது. அக்னிவீர் பொதுப் பணி (General Duty), அக்னிவீர் தொழில்நுட்பம் (Technical), அக்னிவீர் எழுத்தர்/ ஸ்டோர் கீப்பர் தொழில்நுட்பம் (Clerk/ Store Keeper Technical), அக்னிவீர் டிரேட்ஸ்மேன் ஆகிய பிரிவுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் பதிவு தேதிகள்: 01 ஏப்ரல் 2026 வரை
ஆன்லைன் தேர்வு தேதிகள்: 01 ஜூன் முதல் 15 ஜூன் 2026 வரை (தற்காலிகமானது)
1.அக்னிவீர் பொதுப் பணி (General Duty), கல்வித் தகுதி 10 ஆம் வகுப்பு - 17 1/2 வயது முதல் 21 வயது வரை
2. அக்னிவீர் தொழில்நுட்பம் (Technical), கல்வித் தகுதி 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் குறைந்தபட்சம் ஒரு வருடம் ITI தேர்ச்சி மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ITI இல் 2 வருடம் பயிற்சி அல்லது 2 வருடம் அல்லது பாலிடெக்னிக் 3 வருடம் படித்திருத்தல் வேண்டும். - 17 1/2 வயது முதல் 21 வயது வரை
3.அக்னிவீர் எழுத்தர் / ஸ்டோர் கீப்பர் தொழில்நுட்பம் (Clerk/ Store Keeper Technical), 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் - 17 1/2 வயது முதல் 21 வயது வரை
4. அக்னிவீர் டிரேட்ஸ்மேன் (Trademan All Arms) கல்வித் தகுதி 10 ஆம் (ம) 8 ஆம் வகுப்பு, 17 1/2 வயது முதல் 21 வயது வரை.
கூடுதல் தகவல்களுக்கு www.joinindianarmy.nic.in -என்ற இணையதளத்தினை பார்க்கவும்
திருச்சிராப்பள்ளி இராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகத்தின் கீழ் தமிழ்நாட்டின் உள்ள திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி & மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் ஹால் டிக்கெட்டுகளுக்கு www.joinindianarmy.nic.in இணையதளத்தையும் தங்களது பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளையும் தொடர்ந்து சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏதேனும் உதவிக்கு, திருச்சிராப்பள்ளி இராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் அல்லது 0431-2412254 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இந்த ஆள்சேர்ப்பு செயல்முறை முற்றிலும் தானியங்கி முறையில், நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நடைபெறுகிறது. தேர்ச்சி பெறவோ அல்லது பணியில் சேரவோ உதவுவதாகக் கூறும் இடைத்தரகர்கள், மோசடி செய்பவர்களிடம் விண்ணப்பதாரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இடைத்தரகர்களுக்கு இதில் எந்தப் பங்கும் இல்லை, மேலும் அத்தகைய நபர்களை நம்பி விண்ணப்பதாரர்கள் ஏமாற வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விருப்பமுள்ள சிவகங்கை மாவட்ட இளைஞர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் சென்று முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். ஆன்லைன் பதிவு தேதிகள் (ம) தேர்வுத் தேதிகளில் ஏதேனும் மாற்றம் இருப்பின் பதிவுசெய்யப்பட்ட மின்னஞ்சல், மொபைல் எண்ணிலும், www.joinindianarmy.nic.in-என்ற இணைய போர்ட்டலில் தெரிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பு
ட்ரெண்டிங் செய்திகள்

வினய் லால்Columnist
Opinion




















