மேலும் அறிய

சட்டம் படிக்கும் மாணவர் குடித்த குளிர்பானத்தில் சிறுநீர் கலப்பா? திருச்சியில் கொடூரம்

மாணவர் புகார் தொடர்பாக விசாரணை நடத்திய மூன்று பேர் கொண்ட குழுவினர், வரும் 18ஆம் தேதி அல்லது 19ஆம் தேதி அறிக்கையை சமர்ப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைகழகம் அமைந்துள்ளது. இங்கு, இளங்கலை சட்டப் படிப்பு இறுதியாண்டு படிக்கும் பட்டியலின மாணவரும் அவருடன் பயிலும் 2 மாணவர்களும் தோழர்களாக இருந்து வந்துள்ளனர். கடந்த ஜனவரி 6ஆம் தேதி மாலை முதல், பாதிக்கப்பட்ட பட்டியல் இன மாணவரும் அவருடன் இளநிலை இறுதியாண்டு சட்டப்படிப்பு படிக்கும் வேறு சில மாணவர்களும் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் சந்தித்துள்ளனர்.

குளிர்பானத்தில் சிறுநீர் கலப்பு:

அவர்கள் தங்களின் தேர்வுகள் தொடர்பாக சந்தித்து பேசிக் கொண்டிருந்ததாகப் புகாரில் கூறியுள்ளார். பல்கலைக்கழக நிர்வாகத்தின்படி, வழக்கமான தேர்வுகள் முடிவடைந்தன, ஜனவரி 7ஆம் தேதி முதல் மறுதேர்வுகள் நடந்துள்ளது. மேலும், பாதிக்கபட்ட மாணவருடைய புகாரின்படி, பாதிக்கப்பட்ட பட்டியல் இன மாணவரும், மற்ற மாணவர்களும் இணைந்து தங்களது படிப்பு குறித்து ஆலோசித்துக் கொண்டு இருந்ததாக கூறபடுகிறது. அப்போது, மாணவர்கள் குளிர்பானம் அருந்தியுள்ளனர். அதில், பாதிக்கப்பட்ட பட்டியல் இன மாணவர் குடித்த குளிர்பானத்தில் சிறுநீர் கலந்து கொடுக்கப்பட்டதாகவும், அதைத் தாம் தெரியாமல் குடித்துவிட்டதாகவும் மாணவர் தனது புகாரில் கூறியுள்ளார்.


சட்டம் படிக்கும் மாணவர் குடித்த குளிர்பானத்தில் சிறுநீர் கலப்பா? திருச்சியில் கொடூரம்

மேலும், சம்பவம் ஜனவரி 6ஆம் தேதி இரவு சுமார் 12 மணியளவில் நடந்ததாக மாணவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகிகள் தகவல் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பட்டியல் இன மாணவர் ஜனவரி 10ஆம் தேதி பல்கலைக்கழக பதிவாளர் பாலகிருஷ்ணனிடம் புகார் மனுவைக் கொடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவர், தன்னுடன் படிக்கும் 2 மாணவர்கள் மீது புகார் கொடுத்துள்ளார்.

புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்த பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பாலகிருஷ்ணன் கூறிய தகவல், விதிகளின்படி மாணவர் புகார் வந்தவுடனேயே, அது பல்கலைக்கழக துணை வேந்தருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் அதே நாளில், குற்றம்சாட்டப்பட்ட இரண்டு மாணவர்களையும் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழுவை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். துணை வேந்தர் அமைத்துள்ள 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவில் பல்கலையின் உதவிப் பேராசிரயர்கள் உள்ளனர். அவர்கள், ஜனவரி 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை, பாதிக்கப்பட்ட மாணவர், குற்றம் சாட்டப்பட்ட மாணவர்கள், இருப்பிட விடுதி காப்பாளர் மற்றும் உடன் படிக்கும் மாணவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.


சட்டம் படிக்கும் மாணவர் குடித்த குளிர்பானத்தில் சிறுநீர் கலப்பா? திருச்சியில் கொடூரம்

இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழகம் அமைத்த குழு விசாரணை நடத்திக்கொண்டிருக்கும்போதே பாதிக்கப்பட்ட பட்டியலின மாணவர் புகாரை திரும்பப்பெற முயன்றுள்ளார். ஆனால், ராகிங் தொடர்பான சட்ட விதிகளின்படி மாணவர் புகாரை திரும்பப் பெற முடியாது என்றார் பல்கலைக்கழக பதிவாளர் பாலகிருஷ்ணன் தகவல் தெரிவித்தார்.

மாணவர் புகார் தொடர்பாக விசாரணை நடத்திய 3 பேர் கொண்ட குழுவினர், வரும் 18ஆம் தேதி அல்லது 19ஆம் தேதி அறிக்கையை சமர்ப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சட்டவிதிகளின் படி, அதில் மாணவர் துன்புறுத்தப்பட்டுள்ளது உறுதியாகும்பட்சத்தில், அறிக்கை கிடைத்த 24 மணிநேரத்தில் பல்கலைக்கழக நிர்வாகம் போலீசில் புகார் தெரிவிக்க வேண்டும். மாணவர் புகார் கொடுக்க தாமதித்ததற்கான காரணம் மற்றும் தற்போது புகாரை திரும்பப் பெறுவதற்கான காரணம் குறித்து விசாரணை நடந்துள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தரப்பில் தெரிவித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

எனக்கு தெரியாது; சி.எம்.தான் முடிவெடுக்கனும்! - பொங்கல் பரிசுத் தொகை குறித்து துணை முதலமைச்சர் பதில்! 
எனக்கு தெரியாது; சி.எம்.தான் முடிவெடுக்கனும்! - பொங்கல் பரிசுத் தொகை குறித்து துணை முதலமைச்சர் பதில்! 
TN birth Rate: சரியும் குழந்தை பிறப்பு விகிதம், தமிழக அரசே காரணம்? ஸ்ரீதர் வேம்புவின் தீர்வுகள், உண்மையா? சாத்தியமா?
TN birth Rate: சரியும் குழந்தை பிறப்பு விகிதம், தமிழக அரசே காரணம்? ஸ்ரீதர் வேம்புவின் தீர்வுகள், உண்மையா? சாத்தியமா?
மீண்டும் மீண்டும் அட்டூழியம்! அடங்காத இலங்கை கடற்படை! அடைக்கப்படும் தமிழக மீனவர்கள்! இன்று 10 பேர்!
மீண்டும் மீண்டும் அட்டூழியம்! அடங்காத இலங்கை கடற்படை! அடைக்கப்படும் தமிழக மீனவர்கள்! இன்று 10 பேர்!
Tirupati Stampede: பகவானுக்கு கண்ணில்லையா..! திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல், தமிழக பெண்கள் உட்பட 6 பேர் பலி, காரணம் என்ன?
Tirupati Stampede: பகவானுக்கு கண்ணில்லையா..! திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல், தமிழக பெண்கள் உட்பட 6 பேர் பலி, காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எனக்கு தெரியாது; சி.எம்.தான் முடிவெடுக்கனும்! - பொங்கல் பரிசுத் தொகை குறித்து துணை முதலமைச்சர் பதில்! 
எனக்கு தெரியாது; சி.எம்.தான் முடிவெடுக்கனும்! - பொங்கல் பரிசுத் தொகை குறித்து துணை முதலமைச்சர் பதில்! 
TN birth Rate: சரியும் குழந்தை பிறப்பு விகிதம், தமிழக அரசே காரணம்? ஸ்ரீதர் வேம்புவின் தீர்வுகள், உண்மையா? சாத்தியமா?
TN birth Rate: சரியும் குழந்தை பிறப்பு விகிதம், தமிழக அரசே காரணம்? ஸ்ரீதர் வேம்புவின் தீர்வுகள், உண்மையா? சாத்தியமா?
மீண்டும் மீண்டும் அட்டூழியம்! அடங்காத இலங்கை கடற்படை! அடைக்கப்படும் தமிழக மீனவர்கள்! இன்று 10 பேர்!
மீண்டும் மீண்டும் அட்டூழியம்! அடங்காத இலங்கை கடற்படை! அடைக்கப்படும் தமிழக மீனவர்கள்! இன்று 10 பேர்!
Tirupati Stampede: பகவானுக்கு கண்ணில்லையா..! திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல், தமிழக பெண்கள் உட்பட 6 பேர் பலி, காரணம் என்ன?
Tirupati Stampede: பகவானுக்கு கண்ணில்லையா..! திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல், தமிழக பெண்கள் உட்பட 6 பேர் பலி, காரணம் என்ன?
Pongal Gift 2025: தமிழகமே தயாரா..! இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு, டோக்கன் அவசியம் - முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்...
Pongal Gift 2025: தமிழகமே தயாரா..! இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு, டோக்கன் அவசியம் - முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்...
Today Power Cut: தமிழகத்தில் இன்று ( 09.01.25 ) மின் தடை ஏற்படும் பகுதிகள் லிஸ்ட் !
Today Power Cut: தமிழகத்தில் இன்று ( 09.01.25 ) மின் தடை ஏற்படும் பகுதிகள் லிஸ்ட் !
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
மதுரை வழியாக இன்று ஒன்பது ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம் !
மதுரை வழியாக இன்று ஒன்பது ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம் !
Embed widget