மேலும் அறிய

திருச்சி ஜி.கார்னர் மேம்பாலம் சீரமைக்கும் பணி நிறைவு - விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஜி-கார்னர் பகுதியில் பழுதடைந்த மேம்பாலத்தில் ஏற்பட்ட பழுதை சீரமைக்கும் பணி நிறைவடைந்தது, பாலத்தின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு தொடக்கம்.

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஜி-கார்னர் அருகே மேம்பாலத்தின்கீழ் பகுதி அதிக போக்குவரத்து காரணமாக பழுதடைந்திருப்பது கடந்த ஜன.11ம் தேதி கண்டறியப்பட்டது. இதனால் உடனடியாக அப்பகுதியின் மற்றொரு சாலை இருவழி பாதையாக மாற்றப்பட்டு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. இச்சாலை பல்வேறு சென்னை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூர், சேலம் போன்ற ஊர்களுக்கும் சென்றுவர ‘முக்கிய சாலை என்பதல் மாவட்ட நிர்வாகம் தனிக்கவனம் எடுத்துக்கொண்டது. அமைச்சர்கள் கே.என்.நேரு, மகேஷ் பொய்யாமொழி, திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் உட்பட தேசிய நெடுங்சாலைத்துறை பொறியாளர்கள், ரயில்வே நிர்வாக உயர் அதிகாரிகள் என அனைவரும் நேரில் பாலத்தை ஆய்வு செய்தனர்.


திருச்சி ஜி.கார்னர் மேம்பாலம் சீரமைக்கும் பணி நிறைவு - விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு

திருச்சி என்ஐடி பேராசிரியர்கள் மற்றும் சென்னை ஐஐடி பேராசிரியர் குழுவினர் ஆகியோரும் பாலத்தை ஆய்வு செய்தனர். ஐஐடி பேராசிரியர் குழுவினர் வகுத்து அளித்த திட்டத்தின்படி துரித கதியில் பாலத்தை சீரமைக்கும் பணி கடந்த ஜன.19ம் தேதி பூஜையுடன் துவங்கியது. இதன்படி பாலத்தின் மையப்பகுதியில் நவீன கருவிகளின் உதவியுடன் பக்கவாட்டு சுவர் டிரில் செய்யப்பட்டு 100க்கும் மேற்பட்ட ராட்சச இரும்பு கம்பிகள் (ராடுகள்) செருகப்பட்டு, போல்ட் நெட்டுகள் வாயிலாக முறுக்கப்பட்டன. இந்த சாலை முக்கியம் வாய்ந்த தேசிய நெடுஞ்சாலை என்பதாலும், நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் இந்த பாலத்தை கடந்து செல்வதாலும், தற்போது பணிகள் நிறைவுற்ற நிலையில் பாலத்தின் உறுதித்தன்மையை சோதனை செய்ய ஐஐடி வல்லுனர் குழு முடிவு செய்தது. அதன்படி நேற்று பாலத்தின் கீழ்பகுதியில் சென்சார்களை ஐஐடி குழுவினர் பொருத்தினர்.


திருச்சி ஜி.கார்னர் மேம்பாலம் சீரமைக்கும் பணி நிறைவு - விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு

இதையடுத்து இரவு பாலத்தின் பழுதடைந்த பகுதியில் 30 டன் எடை கொண்ட லாரியை நிறுத்தி பாலத்தின் உறுதித்தன்மை சோதனை செய்யப்பட உள்ளது. இவ்வாறு அதிக எடையிலான லாரியை நிறுத்தும்போது சென்சார் ஒரு மில்லி மைக்ரான் மீட்டர் அளவில் கூட அசைவோ, நகர்தலோ இல்லாமல் இருந்தால், பாலம் உறுதியுடன் இருப்பதாக முடிவு செய்யப்பட்டு, போக்குவரத்துக்கு திறந்து விடப்படும். சென்சாரில் மாற்றம் ஏதாவது தெரிய வந்தால் மீண்டும் பாலத்தை சீரமைக்கும் பணி தொடரும் எனக்கூறப்படுகிறது. பாலம் பழுது காரணமாக சாலையில் செய்யப்பட்டிருக்கும் போக்குரத்து மாற்றத்தால் இப்பகுதியில் தற்போது வரை வாகனங்கள் செல்வதில் மிகவும் சிரமம் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பெரும் சிக்கலை சந்தித்து வருகின்றனர். இதனால் இப்பகுதியில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவதற்காக 20க்கும் மேற்பட்ட போலீசார் இரவும், பகலும் ‘ஷிப்ட்’ முறையில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் சோதனை வெற்றி பெற்றால் வாகன ஓட்டிகள் மட்டுமல்லாது போலீசாரின் பிரச்னையும் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Andhra Assembly Election 2024: ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பரபரப்பு - பூஜ் ஏஜெண்டுகள் 15 பேர் கடத்தல், தெலுங்கு தேசம் ஷாக்
Andhra Assembly Election 2024: ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பரபரப்பு - பூஜ் ஏஜெண்டுகள் 15 பேர் கடத்தல், தெலுங்கு தேசம் ஷாக்
Selvaraj MP: காலையிலேயே அதிர்ச்சி .. உடல்நலக்குறைவால் நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்
காலையிலேயே அதிர்ச்சி .. உடல்நலக்குறைவால் நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்
Lok Sabha Election Phase 4 Polling: மக்களவை தேர்தல்! 4ம் கட்டமாக 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு - எங்கெங்கு தெரியுமா?
Lok Sabha Election Phase 4 Polling: மக்களவை தேர்தல்! 4ம் கட்டமாக 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு - எங்கெங்கு தெரியுமா?
GT Vs KKR, IPL 2024:  பிளே-ஆஃப் வாய்ப்பில் நீடிக்குமா குஜராத்? அகமதாபாத்தில் கொல்கத்தா வீழ்த்துமா?
GT Vs KKR, IPL 2024: பிளே-ஆஃப் வாய்ப்பில் நீடிக்குமா குஜராத்? அகமதாபாத்தில் கொல்கத்தா வீழ்த்துமா?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Vetrimaaran on Ilayaraja Vairamuthu : இளையராஜா VS வைரமுத்து “பாடல் யாருக்கு சொந்தம்?”- வெற்றிமாறன்Priyanka Gandhi on Amit shah : ”என்ன பண்ணீங்க அமித்ஷா? லிஸ்ட் சொல்லுங்க பார்ப்போம்” பிரியங்கா சவால்Vetrimaaran Pressmeet : ”சாதி ஏற்றத்தாழ்வு இல்லையா? நீங்கலாம் எங்க வாழ்றீங்க?” வெற்றிமாறன் பதிலடிNellai Jayakumar : மர்மம் விலக்குமா டார்ச் லைட்? ஜெயக்குமார் மரணத்தில் திருப்பம்! வலுக்கும் சந்தேகம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Andhra Assembly Election 2024: ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பரபரப்பு - பூஜ் ஏஜெண்டுகள் 15 பேர் கடத்தல், தெலுங்கு தேசம் ஷாக்
Andhra Assembly Election 2024: ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பரபரப்பு - பூஜ் ஏஜெண்டுகள் 15 பேர் கடத்தல், தெலுங்கு தேசம் ஷாக்
Selvaraj MP: காலையிலேயே அதிர்ச்சி .. உடல்நலக்குறைவால் நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்
காலையிலேயே அதிர்ச்சி .. உடல்நலக்குறைவால் நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்
Lok Sabha Election Phase 4 Polling: மக்களவை தேர்தல்! 4ம் கட்டமாக 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு - எங்கெங்கு தெரியுமா?
Lok Sabha Election Phase 4 Polling: மக்களவை தேர்தல்! 4ம் கட்டமாக 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு - எங்கெங்கு தெரியுமா?
GT Vs KKR, IPL 2024:  பிளே-ஆஃப் வாய்ப்பில் நீடிக்குமா குஜராத்? அகமதாபாத்தில் கொல்கத்தா வீழ்த்துமா?
GT Vs KKR, IPL 2024: பிளே-ஆஃப் வாய்ப்பில் நீடிக்குமா குஜராத்? அகமதாபாத்தில் கொல்கத்தா வீழ்த்துமா?
Lok Sabha Election 2024 LIVE: ஹைதரபாத்தில் ஓட்டுப் போட்டார் வெங்கையா நாயுடு
Lok Sabha Election 2024 LIVE: ஹைதரபாத்தில் ஓட்டுப் போட்டார் வெங்கையா நாயுடு
KPY Bala: தந்தை இறந்த துக்கத்திலும் தேர்வெழுதி வென்ற 12 ஆம் வகுப்பு மாணவி - ரூ.1 லட்சம் வழங்கிய KPY பாலா!
தந்தை இறந்த துக்கத்திலும் தேர்வெழுதி வென்ற 12 ஆம் வகுப்பு மாணவி - ரூ.1 லட்சம் வழங்கிய KPY பாலா!
Andhra Assembly Election 2024: ஆந்திராவில் தொடங்கியது சட்டமன்ற தேர்தல்! ஆட்சி யாருக்கு? ஜெகன் Vs சந்திரபாபு?
Andhra Assembly Election 2024: ஆந்திராவில் தொடங்கியது சட்டமன்ற தேர்தல்! ஆட்சி யாருக்கு? ஜெகன் Vs சந்திரபாபு?
Sundar C: சுந்தர் சி சொன்ன அந்த வார்த்தை! தனக்கென தனியிடம் பிடித்த சந்தானம் - என்ன நடந்தது?
சுந்தர் சி சொன்ன அந்த வார்த்தை! தனக்கென தனியிடம் பிடித்த சந்தானம் - என்ன நடந்தது?
Embed widget