மேலும் அறிய

திருச்சி : கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் வைக்கும் கோரிக்கை..

தமிழகத்தில் பார்வை மாற்றுத்திறனாளிகளால் இயக்கப்படும் ஒரே தொழிற்சாலை.. அதன் தற்போதைய நிலையை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு..

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் பார்வை இழந்தவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக சில நல்ல உள்ளங்களால் உருவாக்கப்பட்டதுதான் ஆர்பிட் தொழிற்சாலை ஆகும். கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக 1972 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது இந்த தொழிற்சாலையில்  முதன் முதலில்  5 கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை கொண்டு இயக்கப்பட்டது. பின்பு காலப்போக்கில் 150-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பணிபுரிந்து வருந்தனர்.

ஆரம்ப காலகட்டத்தில் சிறிய அளவில் சோப்பு, பென்சில், சாக்பீஸ் போன்ற பொருட்களை உற்பத்தி செய்து வந்தனர். பின்பு  சில நிறுவனங்களுடன் கைகோர்த்து பல உதிரி பாகங்களை தயாரித்து அனுப்பியது. குறிப்பாக பெல் நிறுவனத்திற்கு தேவையான உதிரி பாகங்களை கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் இணைந்து ஆண்டுதோறும் உருவாக்கி அனுப்பி வைத்து வருகிறார்கள். தமிழகத்தில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் ஆங்காங்கே ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள் சாலையோரங்களில் யாசகம் பெற்று வாழ்ந்துவரும் நிலையில், தங்களது வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக இந்த தொழிற்சாலை உருவாக்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், எங்கள் வாழ்வில் மாற்றத்திற்கும் மிக உதவியாக இருந்ததாக தெரிவித்தனர் .


திருச்சி : கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் வைக்கும் கோரிக்கை..

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெரும் தொற்றால் எந்தவிதமான டெண்டர்களும் சரியாக வராததால் ஊழியர்களுக்கு முறையாக சம்பளம் வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஆகையால்  காலப்போக்கில் 100க்கும் மேற்பட்ட  மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய வேலையில் இருந்து விலகி சென்றனர். இதற்கு முக்கிய காரணம்  ஆண்டுதோறும்  சில நிறுவனங்களில் இருந்து கிடைக்கும் டெண்டர்கள் முறையாக இத்தொழிற்சாலைக்கு வழங்கப்படவில்லை அதனால் வருமானமும் இல்லை என மன வருத்தத்துடன் தெரிவித்தனர். மேலும் கொரோனா தொற்று காரணத்தினால் எந்த விதமான டெண்டரும் கிடைக்காததால் எங்களுடைய வாழ்க்கை மிகவும் கேள்விக்குறியாகவே உள்ளது என கூறினர். இதுகுறித்து ஊழியர் ஒருவரிடம் கேட்டபோது இரு கண்களையும் இழந்து வாழ்க்கையில் அடுத்து என்ன செய்வது என்று திகைத்து நின்றபோது இந்த தொழிற்சாலை தான் எனக்கு  ஒளிவிளக்காய் இருந்தது.

முதலில் இங்கு வரும்போது எனக்கு எந்த ஒரு வேலையும் தெரியாது. தொடக்கத்தில் ஒரு வருடம் பயிற்சி வழங்கினார்கள்.  அதன்பின்பு இங்கேயே எனக்கு வேலை போட்டுக்கொடுத்தார்கள். இதனால் என் பிள்ளைகளை படிக்க வைப்பதும், உணவு, இருப்பிடம் என்று அனைத்தையும் என்னால் பூர்த்தி செய்ய முடிந்தது. எங்களால் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை உருவாக்கிய இடம் இதுதான் என்றனர்.


திருச்சி : கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் வைக்கும் கோரிக்கை..

ஆனால் தற்போது நிச்சயமில்லாத சூழல் உள்ளதால் மீண்டும் நாங்கள் பழைய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம், என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போய் நிற்கிறோம் எங்களுக்கு இந்த அரசாங்கம் உதவி செய்யுமாறு கையெடுத்து கேட்டுக்கொள்கிறோம் என்றனர் . மாற்றுத்திறனாளியாக நாங்கள் இருந்தாலும் உழைத்து வாழ வேண்டும்,  எங்களுடைய சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம் ஆகும் என்றனர். மேலும் எங்களுக்கு சலுகைகள், நிவாரணம் வேண்டாம் இந்த தொழிற்சாலைக்கு அரசாங்கத்தால் முடிந்த சிறிய அளவிலான டெண்டர்கள் கொடுத்து கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளிக்கான வாழ்க்கையில் ஒளியேற்றி வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!A Raja Speaker chair : ”என்னைய பார்த்து பேசுங்க” சபாநாயகர் CHAIR-ல் ஆ.ராசா! அவையை வழிநடத்திய MPDMK Vs PMK | மக்களை அடைத்து வைத்ததா திமுக?போராட்டத்தில் குதித்த பாமக! விக்கிரவாண்டியில் பரபர!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget