மேலும் அறிய

திருச்சி: பள்ளிக்கு கட்டிடம் கட்டித் தர கோரி பெற்றோருடன் மாணவர்கள் சாலையில் போராட்டம்

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூரில் பள்ளிக்கு கட்டிடம் கட்டித் தர கோரி மாணவர்கள் பெற்றோருடன் மறியல் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு

திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா காட்டுப்புத்தூர் பேரூராட்சி 8-வது வார்டு மேலமஞ்சமேடு கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 25 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். ஒரு தலைமையாசிரியரும், ஒரு உதவி ஆசிரியரும் பணியாற்றுகின்றனர். இந்த பள்ளி கட்டிடம் பழுது அடைந்து இருந்ததால் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தனியார் வீட்டை வாடகைக்கு எடுத்து அந்த கட்டிடத்தில் பள்ளி செயல்பட்டு வந்தது. மேலும் அந்த வீட்டுக்கு 25 மாணவ-மாணவிகளிடமும் மாதத்திற்கு தலா ரூ.200 வசூலித்து வாடகை கொடுக்கப்பட்டது. சுமார் 8 மாதங்களாக வாடகை செலுத்தினர். எனவே பள்ளிக்கு விரைவில் கட்டிடம் கட்டித்தர வலியுறுத்தி காட்டுப்புத்தூர் பஸ் நிலையம் முன்பு மாணவ-மாணவிகளும், அவர்களது பெற்றோர்களும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 

திருச்சி: பள்ளிக்கு கட்டிடம் கட்டித் தர கோரி பெற்றோருடன் மாணவர்கள் சாலையில் போராட்டம்
 
மேலும் இதுகுறித்து மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் கூறும்போது, “நாங்கள் கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தி வருகிறோம். பள்ளிக்கு கட்டிடம் இல்லாததால் தனியார் கட்டிடத்தில் பள்ளி இயங்குகிறது. இதற்கான கட்டணத்தை நாங்கள் செலுத்தி வருகிறோம். கூலி வேலை செய்து வரும் எங்களுக்கு வருமானம் இல்லாததால் வாடகை செலுத்த முடியவில்லை. எனவே அரசு உடனடியாக பள்ளி கட்டிடம் கட்டித்தர வேண்டும். இல்லையென்றால் எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம்” என்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த காட்டுப்புத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இன்னும், ஒரு மாத காலத்திற்குள் பள்ளிக்கு நிரந்தர கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதனையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பெற்றோர்கள் கூறியது.. நாங்கள் சரியாக படிக்கவில்லை, ஆகையால் தான் தின கூலி வேலைக்கு செல்கிறோம். அதனால் எங்கள் குழந்தைகள் பள்ளிக்கு சென்று நன்கு படித்தால் வாழ்கையில் முனேற்றமும், நல்ல வேலைக்கு செல்வார்கள் என நினைத்து தான் படிக்கவைக்கிறோம். மேலும் எங்களுக்கு வசதிகள் இருந்தால் தனியார் பள்ளியில் படிக்க வைத்து இருப்போம், ஆனால் ஏழையாக உள்ள எங்களால் அரசு பள்ளியில் தான் படிக்கவைக்க முடியும். ஆனால் அரசு பள்ளியில் குழந்தைகள் படிக்க கட்டிடம் இல்லதால் என்ன செய்வது என்று தெரியாமல் கலங்கிநிற்கிறோம் என்றனர். 
 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
மத ஒற்றுமையை வெளிப்படுத்திய பிரார்த்தனை: மழை வேண்டி கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்
மத ஒற்றுமையை வெளிப்படுத்திய பிரார்த்தனை: மழை வேண்டி கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்
பராமரிப்பில்லாத சாலையால் வேதனை... இருள் சூழ்ந்த கிரிவலப்பாதையால் பக்தர்கள் அச்சம்? எங்கு தெரியுங்களா? 
பராமரிப்பில்லாத சாலையால் வேதனை... இருள் சூழ்ந்த கிரிவலப்பாதையால் பக்தர்கள் அச்சம்? எங்கு தெரியுங்களா? 

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Embed widget