மேலும் அறிய

குப்பை வண்டியில் பொருட்கள்...அம்மா உணவகத்தின் அவலநிலை - கண்டுகொள்ளாத திருச்சி மாவட்ட நிர்வாகம்

திருச்சி மாவட்டத்தில் குப்பையை ஏற்றி சென்று கொட்டி விட்டு உணவு பொருட்களை எடுத்து வந்த அவலம். நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டு இயங்கி வருகிறது. தற்போது தி.மு.க. ஆட்சிப்பொறுப்பேற்ற போதிலும் அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. எக்காரணத்தை கொண்டும் அம்மா உணவகங்கள் மூடப்படாது என்று அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையத்தில் அம்மா உணவகம் அமைந்துள்ளது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 300-க்கும் மேற்பட்டோர் உணவருந்தி பசியாறி வருகிறார்கள். இந்த அம்மா உணவகத்திற்கு தேவையான அரிசி, பருப்பு, மளிகை மற்றும் காய்கறி உள்ளிட்டவை அங்குள்ள மார்க்கெட்டில் இருந்து கொண்டு வரப்படுகிறது.இந்த நிலையில் நேற்று நகராட்சி குப்பை அள்ளும் வாகனத்தில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் எடுத்து சென்றனர். பின்னர் அதனை குப்பை கிடங்கில் கொட்டிவிட்டு மீண்டும் வரும் வழியில் அம்மா உணவகத்திற்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களை அதே குப்பை சேகரிக்கும் வாகனத்தில் எடுத்து வந்தனர்.
 

 
 
மேலும் அம்மா உணவகத்தில் அதே துப்புரவு பணியாளர்கள் இறக்கி வைத்துள்ளனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.அம்மா உணவகத்திற்கு கொண்டு வரப்பட்ட பொருட்கள் சற்றும் சுகாதாரமற்ற முறையில் எடுத்து வரப்பட்டது அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கி இருக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த  கரடி..! மரத்தின் மீது தஞ்சமடைந்ததால் பொதுமக்கள் பீதி..!
நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த கரடி..! மரத்தின் மீது தஞ்சமடைந்ததால் பொதுமக்கள் பீதி..!
பற்றி எரியும் EVM விவகாரம்.. OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் விளக்கம்!
பற்றி எரியும் EVM விவகாரம்.. OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் விளக்கம்!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

G.O.A.T Release Issue | G.O.A.T ரிலீஸில் சிக்கல்! அப்செட்டில் விஜய் FANSKN Nehru Lalkudi MLA | ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த  கரடி..! மரத்தின் மீது தஞ்சமடைந்ததால் பொதுமக்கள் பீதி..!
நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த கரடி..! மரத்தின் மீது தஞ்சமடைந்ததால் பொதுமக்கள் பீதி..!
பற்றி எரியும் EVM விவகாரம்.. OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் விளக்கம்!
பற்றி எரியும் EVM விவகாரம்.. OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் விளக்கம்!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
TNPSC Group 4 Answer key: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஆன்சர் கீ எப்போது?- வெளியான தகவல்
TNPSC Group 4 Answer key: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஆன்சர் கீ எப்போது?- வெளியான தகவல்
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
Embed widget