மேலும் அறிய

திருச்சி மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கால் 300 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பு

பச்சமலையில் இருந்து வந்த நீரால் வரையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அம்மம்பாளையம், மருவத்தூர், செல்லிபாளையம் பகுதிகளில் உள்ள சுமார் 300 ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியது. .

திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட அம்மம்பாளையத்தில் வரையாற்று அருவி உள்ளது. இந்த ஆறு மருவத்தூர் வழியாக செல்லிபாளையத்திற்கு சென்று அங்குள்ள குண்டாற்றில் கலக்கிறது. பச்சமலை பகுதியில் பலத்த மழை பெய்யும் சமயங்களில் வரையாற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்படும். தற்போது கடந்த சில மாதங்களாகவே வரையாற்றில் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று  காலை முதல் துறையூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை நேரத்தில் திடீரென்று மழை பெய்ய தொடங்கி, சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. இதில் பச்சமலையில் அதிக அளவில் மழை பெய்துள்ளது இதனால் பச்சமலையில் இருந்து வந்த நீரால் வரையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் ஆற்றின் கரையில் உடைப்பு ஏற்பட்டதால் அம்மம்பாளையம், மருவத்தூர், செல்லிபாளையம் பகுதிகளில் உள்ள சுமார் 300 ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியது. மேலும் வரையாற்றுக்கு செல்லும் சாலையில் அம்மம்பாளையத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு தண்ணீர் செல்வதால், அப்பகுதி ஆறுபோல் மாறி உள்ளது.

 

 

இதற்கிடையே வரையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெளியேறிய நீர் செல்லிபாளையம் கிராமத்தில் உள்ள குண்டாற்றில் கலந்து ஏரிக்கு சென்றது. ஆனால் குண்டாற்றின் கரையிலும் உடைப்பு ஏற்பட்டு, ஊருக்குள் வெள்ளநீர் புகுந்தது. மேலும் ஆறுகளின் கரைகளில் ஏற்பட்ட உடைப்பால் அம்மம்பாளையம், மருவத்தூர், செல்லிபாளையம் ஆகிய 3 கிராமங்களில் உள்ள 250-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளநீர் புகுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த செல்லிபாளையம் கிராம மக்கள் இரவோடு இரவாக வீடுகளை காலி செய்துவிட்டு கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் தஞ்சமடைந்தனர். அம்மம்பாளையம், மருவத்தூர் பகுதிகளை சேர்ந்த மக்களில் பலர், வெளியூர்களில் உள்ள தங்களது உறவினர்கள் வீட்டிற்கு சென்றுவிட்டனர்.


திருச்சி மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கால் 300 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பு

நள்ளிரவில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை துறையூர் தாசில்தார் புஷ்பராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணக்குமார், செந்தில்குமார் மற்றும் செல்லிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் அரவிந்தன் ஆகியோர் செய்து கொடுத்தனர். நேற்று அதிகாலை நீர்வரத்து குறைந்துள்ளது. ஸ்டாலின்குமார் எம்.எல்.ஏ. சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பொதுமக்களிடம் நிலைமையை பற்றி விசாரித்தார். மேலும் இனி வரும் காலங்களில் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
Breaking News LIVE: டெல்லி கனமழை எதிரொலி: விமான நிலையத்தில் மேற்கூரை இடித்து விபத்து
Breaking News LIVE: டெல்லி கனமழை எதிரொலி: விமான நிலையத்தில் மேற்கூரை இடித்து விபத்து
Elephant: கூடலூரில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டி - தத்தளித்த வீடியோ
Elephant: கூடலூரில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டி - தத்தளித்த வீடியோ
Virat Kohli: கலங்காதே ராசா..! உடைந்துபோன கோலி, தேற்றிவிட்ட ராகுல் டிராவிட் - வைரல் வீடியோ
Virat Kohli: கலங்காதே ராசா..! உடைந்துபோன கோலி, தேற்றிவிட்ட ராகுல் டிராவிட் - வைரல் வீடியோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
Breaking News LIVE: டெல்லி கனமழை எதிரொலி: விமான நிலையத்தில் மேற்கூரை இடித்து விபத்து
Breaking News LIVE: டெல்லி கனமழை எதிரொலி: விமான நிலையத்தில் மேற்கூரை இடித்து விபத்து
Elephant: கூடலூரில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டி - தத்தளித்த வீடியோ
Elephant: கூடலூரில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டி - தத்தளித்த வீடியோ
Virat Kohli: கலங்காதே ராசா..! உடைந்துபோன கோலி, தேற்றிவிட்ட ராகுல் டிராவிட் - வைரல் வீடியோ
Virat Kohli: கலங்காதே ராசா..! உடைந்துபோன கோலி, தேற்றிவிட்ட ராகுல் டிராவிட் - வைரல் வீடியோ
Karnataka Accident: கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு
கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு
Vijay Meet Students: கட்சி தலைவராக முதல்முறையாக மாணவர்களை சந்திக்கும் விஜய்.. பேசப்போகும் அரசியல் என்ன?
கட்சி தலைவராக முதல்முறையாக மாணவர்களை சந்திக்கும் விஜய்.. பேசப்போகும் அரசியல் என்ன?
IND Vs SA T20 Worldcup Final: 10 ஆண்டுகளுக்குப் பின் டி20 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியா - கரையேற்றுவாரா கேப்டன் ரோகித் சர்மா?
10 ஆண்டுகளுக்குப் பின் டி20 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியா-கரையேற்றுவாரா கேப்டன் ரோகித் சர்மா?
Rohit Sharma: ஐசிசி தொடர்களில் 3 போட்டிகளில் தான் தோல்வி - ஆனால் 3 கோப்பைகளை இழந்த ரோகித் சர்மா..!
Rohit Sharma: ஐசிசி தொடர்களில் 3 போட்டிகளில் தான் தோல்வி - ஆனால் 3 கோப்பைகளை இழந்த ரோகித் சர்மா..!
Embed widget