மேலும் அறிய

வீடு, வணிக குடிநீர் இணைப்புகளில் மின்மோட்டார்களை பொருத்தி நீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை - மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

திருச்சி: மாநகரப் பகுதிகளில் குடிநீர் இணைப்புகளில் மின்மோட்டார் பொருத்தி சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சிய 15 மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டு குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.

திருச்சி மாநகராட்சியில் பல்வேறு திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மாநகராட்சியில் சில பகுதிகளில் குடிநீர் பிரச்சனை அவ்வபோது ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளது. 

மேலும் புகார்கள் வரும் பட்சத்தில் அந்தப் பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

குறிப்பாக திருச்சி மாநகராட்சி முழுவதும் குடிநீர் குழாய்கள் இணைப்பது, சரி செய்வது, புதிய குழாய்கள் பொருத்துவது போன்ற பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஆகையால் வாரந்தோறும் ஒரு சில பகுதிகளில் குடிநீர் வழங்குவது நிறுத்தப்பட்டு வருகிறது. மேலும் குடிநீர் தேக்க தொட்டிகள் மற்றும் நீர்நிலைகளை ஆய்வு செய்து சுத்தமான குடிநீரை மக்களுக்கு வழங்க வேண்டும் என மாநகராட்சி பல்வேறு புதிய திட்டங்களை வகுத்து பணிகளை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் குடிநீரில் கலப்படம் கலந்து வருவதாகவும் அதனால் பல்வேறு தொற்றுகள் பரவுவதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது.

இதனை தொடர்ந்து திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் மண்டல அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்கள். புகார்கள் உறுதி செய்யும் பகுதிகளில் உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டுள்ளார்.


வீடு, வணிக குடிநீர் இணைப்புகளில் மின்மோட்டார்களை பொருத்தி நீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை - மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

திருச்சியில் 15 மின் மோட்டார் பறிமுதல் - மாநகராட்சி ஆணையர்

இந்நிலையில் திருச்சி மாநகராட்சியில் ஒரு சில பகுதிகளில் வீட்டு குடிநீர் இணைப்புகளில் பலர் சட்டவிரோதமாக மின்மோட்டார்களை பொருத்தி தண்ணீர் உறிஞ்சுவதாக மாநகராட்சி ஆணையருக்கு புகார்கள் வந்தது. 

அதன் அடிப்படையில், மாநகராட்சி ஆணையர் சரவணன் உத்தரவின் பேரில் நேற்று திருச்சி மாநகராட்சி மண்டலம் 4, வார்டு எண் 56க்கு உட்பட்ட ராம்ஜி நகர் பகுதியில் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இன்று காலை வீடு வீடாகச் சென்று குடிநீர் விநியோகம் குறித்து திடீர் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின் போது அப்பகுதியில் உள்ள 15 வீடுகளில் சட்டவிரோதமாக குடிநீர் விநியோக குழாயில், மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சியது கண்டறியப்பட்டது. இதையடுத்து சட்டவிரோதமாக குடிநீர் உறிஞ்ச பயன்படுத்திய 15 மின் மோட்டார்களும் பறிமுதல் செய்யப்பட்டது. 


வீடு, வணிக குடிநீர் இணைப்புகளில் மின்மோட்டார்களை பொருத்தி நீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை - மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

மேலும், இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியது..

மாநகர பகுதிகளில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மின்மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுவது தண்டனைக்குரிய குற்றமாகும். மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுவதால் பொதுமக்கள் அனைவருக்கும் சீராக குடிநீர் கிடைக்காமல் போகிறது.

மேலும், தொடர்ந்து மின் மோட்டார்கள் மூலம் குடிநீர் உறிஞ்சினால் மின்மோட்டார் பறிமுதல் செய்யப்படுவதுடன், அபராதமும் விதிக்கப்படும். குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

குறிப்பாக வீடு, வணிக குடிநீர் இணைப்புகளில் மின்மோட்டார்களை பொருத்தி தண்ணீர் உறிஞ்சினால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், மாநகராட்சியில் பணிபுரி கூடிய அதிகாரிகள் இனிவரும் காலங்களில் இது போன்ற புகார்கள் வராத வண்ணம் பணியாற்ற வேண்டும். மேலும் சட்டவிரோதமான குடிநீரை பயன்படுத்தினால், யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Embed widget