மேலும் அறிய

திருச்சி: காவிரி - கொள்ளிடம் ஆறுகளில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்..!

திருச்சி மாவட்டத்தில் காவிரி-கொள்ளிடம் ஆறுகளில் 2 லட்சத்து 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

கர்நாடக மாநிலத்தில் கனமழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி உள்ளன. இதனால் உபரிநீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், மேட்டூர் அணை நிரம்பியுள்ளதால், தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, கடலூர் ஆகிய 11 மாவட்டங்களில் உள்ள காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காவிரி ஆற்றில் முக்கொம்புக்கு நேற்று மாலை நிலவரப்படி 1½ லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அந்த தண்ணீர் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் அப்படியே திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் இன்று காவேரி, கொள்ளிடம் ஆற்றில் 2 லட்சத்து 5 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றபட்டு வருகிறது.  இதனால் காவிரி, கொள்ளிடம் ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த ஆறுகளில் பொதுமக்கள் இறங்க வேண்டாம். முக்கொம்பு மற்றும் கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பாதை வழியாக யாரும் செல்ல வேண்டாம் என்று கலெக்டர் பிரதீப்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் காவிரி ஆற்றில் அதிகளவில் தண்ணீர் வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையும் இணைந்து 24 மணி நேரமும் காவிரி கரையோரங்களில் பாதுகாப்பு பணியை முடுக்கி விட்டுள்ளனர்.


திருச்சி: காவிரி - கொள்ளிடம் ஆறுகளில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்..!

இதனைத்தொடர்ந்து ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் விழா காலங்கள் மட்டுமின்றி சாதாரண நாட்களிலும் பொதுமக்கள் அதிகளவில் திரண்டு குளித்து சாமி தரிசனம் மற்றும் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். தற்போது படித்துறையில் உள்ள தடுப்பு வேலிகளை மூழ்கடித்தபடி காவிரியில் இருகரைகளையும் தொட்டு அதிகளவில் தண்ணீர் செல்கிறது. இதனால் நேற்று அம்மா மண்டபம், கருடமண்டபம் படித்துறைகளில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் தடுப்பு அரண் அமைத்து பூட்டு போடப்பட்டுள்ளது. நேற்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வந்த பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். இதற்கிடையே ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு பகுதியில் கோர்ட்டுக்கு பின்பகுதியில் காவிரி ஆறு நிரம்பி வழியும் நிலையில் இருந்ததால், அப்பகுதியில் மணல் மூட்டைகள் கொண்டு கரையை பலப்படுத்தி இருந்தனர். தற்போது ஆற்றில் அதிக வெள்ளம் காரணமாக மணல் மூட்டைகள் ஆற்றுக்குள் சரிந்து விழுந்து வருகிறது. 


திருச்சி: காவிரி - கொள்ளிடம் ஆறுகளில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்..!

முக்கொம்பு மேலணைக்கு தற்போது 2 லட்சத்து 5 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இது கொள்ளிடத்திலும், காவிரியிலும் பிரித்து அனுப்பப்படுகிறது. ஜோடர்பாளையத்தில் இருந்து மாயனூருக்கு அதிகளவு நீர் வந்து கொண்டிருப்பதால், காவிரியில் நீரோட்டம் அதிகரித்து காணப்படும். எனவே காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையின்றி ஆற்றில் இறங்க வேண்டாம். காவிரி கரையோர பகுதிகளில் 52 ஆபத்தான இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. தொடர்ந்து வெள்ளம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. நீரின் மேற்பரப்பில் தண்ணீர் வேகமாக செல்வது தெரியாது. எனவே, அதை தவறுதலாக நினைத்து மக்கள் ஆற்றில் இறங்கக்கூடாது. நீரின் அடியில் நீரோட்டம் வேகமாக இருக்கும் என்பதால் நீச்சல் தெரிந்தவர்கள் கூட ஆற்றில் அடித்துச்செல்லப்படும் நிலை ஏற்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
மத ஒற்றுமையை வெளிப்படுத்திய பிரார்த்தனை: மழை வேண்டி கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்
மத ஒற்றுமையை வெளிப்படுத்திய பிரார்த்தனை: மழை வேண்டி கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Maruti Suzuki SUV: 7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
Embed widget