மேலும் அறிய

திருச்சி: 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: 130 தேர்வு மையங்கள்; 30,003 மாணவ, மாணவிகள்

திருச்சி மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 13,603 மாணவர்களும் 16.400 மாணவிகளும் மொத்தம் 30,003 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று மார்ச் 1ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்தத் தேர்வின் போது, செல்போன் பயன்படுத்தக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 3,302 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 3,225 மையங்களில் மாணவர்கள் தேர்வினை எழுதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு 12ம் வகுப்பிற்கு மார்ச் 1ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையிலும், 11ம் வகுப்பிற்கு மார்ச் 4ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரையிலும், 10ம் வகுப்பிற்கு மார்ச் 26ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரையிலும் நடைபெறுகிறது.


திருச்சி: 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: 130 தேர்வு மையங்கள்; 30,003 மாணவ, மாணவிகள்

மேலும், இவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் 12ம் வகுப்பிற்குப் பிப்ரவரி 12ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரையிலும், 11ம் வகுப்பிற்குப் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரையிலும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் செய்முறைத்தேர்வு பிப்ரவரி 23ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரையில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசுத் தேர்வுத்துறை இயக்குநரகம் பொதுத்தேர்வினை நடத்துவதற்கு உரிய முன்னேற்பாடுகளைச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை மார்ச் 1ஆ தேதி முதல் 22ஆம் தேதி வரையிலும், சுமார் 3,302 மையங்களில், 7.25 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர். இதற்காக 154 இடங்களில் கேள்வித்தாள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. 1,135 பறக்கும் படையினரும், தேர்வினைக் கண்காணிக்கும் பணியில் 43 ஆயிரத்து 200 பேரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


திருச்சி: 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: 130 தேர்வு மையங்கள்; 30,003 மாணவ, மாணவிகள்

இதனை தொடர்ந்து, திருச்சி மாவட்டத்தில் உள்ள 2 கல்வி மாவட்டங்களில் 01.03.2024 ஆம் தேதி இன்று 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. இத்தேர்வு திருச்சி கல்வி மாவட்டத்தில் 70 தேர்வு மையங்களும், இலால்குடி கல்வி மாவட்டத்தில் 60 தேர்வு மையங்களும், இவற்றுள் சிறைச்சாலை தேர்வு மையம் 1. ஆக மொத்தம் 130 தேர்வு மையங்களிலும் 13,603 மாணவர்களும் 16.400 மாணவிகளும் மொத்தம் 30,003 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். மேலும், 4.03.2024 முதல் 11 ஆம் வகுப்பு தேர்வுகள் தொடங்கப்படவுள்ளது. இதில் 15,211 மாணவர்களும், 17,102 மாணவிகளும் ஆக மொத்தம் 32,313 மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வு எழுதுகிறார்கள். திருச்சி மாவட்டத்தில் 11 ஆம் வகுப்பு  மாணவர்களுக்கு 276 சொல்வதை எழுதுபவரும், 12 ஆம் வகுப்பு  மாணவர்களுக்கு 185 சொல்வதை எழுதுபவர்கள், 250 பறக்கும் படை உறுப்பினர்கள் மற்றும் அறை கண்காணிப்பாளர் 1600 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.திருச்சி வருவாய் மாவட்டத்தில் தனித்தேர்வர்களுக்கு 12 ஆம் வகுப்பிற்கு மொத்தம் 9 தேர்வு மையங்களும் 11 ஆம் ஆண்டு 7 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டு தனித்தேர்வர்கள் தேர்வு எழுதும் வகையில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.


திருச்சி: 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: 130 தேர்வு மையங்கள்; 30,003 மாணவ, மாணவிகள்

திருச்சி மத்திய சிறையிலேயே சிறைக்கைதிகளுக்கு தனித்தேர்வு மையம் அமைக்கப்பட்டு மேல்நிலை 11  வகுப்பிற்கு  35 சிறை தேர்வர்களும், 12 ஆம் வகுப்பில்  9 சிறை தேர்வர்களும் ஆக மொத்தம் 44 சிறை தேர்வர்கள் தேர்வு எழுதுகிறார்கள்.மேல்நிலை தேர்விற்கு திருச்சி கல்வி மாவட்டத்தில் 2 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களும், இலால்குடி கல்வி மாவட்டத்தில் 3 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களும் ஆக மொத்தம் 5 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களிலிருந்து 34 வழித்தட அலுவலர்கள் ஆயுதம் தாங்கிய காவலர்களுடன் தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் சென்றடைய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
மத ஒற்றுமையை வெளிப்படுத்திய பிரார்த்தனை: மழை வேண்டி கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்
மத ஒற்றுமையை வெளிப்படுத்திய பிரார்த்தனை: மழை வேண்டி கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
Skoda Superb: அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Embed widget