மேலும் அறிய

காதல் திருமணம் செய்ததால்  ஊரைவிட்டு ஒதுக்கிவைத்த கிராமம்.. 9 பேர் மீது வழக்குப்பதிவு..

13 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்ததால்  ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பம் நாட்டாமை உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு.

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் வட்டம் எதுமலை கிராமத்தை சேர்ந்த வெள்ளையன் மனைவி செல்ல பாப்பா (வயது 60) இவருக்கு ரமேஷ், ஜெகதீசன் என இரு மகன்கள் உள்ளனர். கணவர் இறந்துவிட்ட நிலையில் இவர் தனது மகன் ரமேஷ் உடன்  வசித்து வருகிறார்.இவரது இரண்டாவது மகனான ஜெகதீசன் (வயது 41) சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த நிலையில் அங்கு பணிபுரிந்த கோமதி (வயது 33) பெண்ணுடன் காதல் வயப்பட்டு கடந்த பதினைந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ராஜேஷ், வனிஷா என இரு குழந்தைகள் உள்ளனர்.இருவரும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள் என்றாலும் ஊர் மக்கள் இந்த காதல் திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இந்த சூழலில் அந்த ஊர் குடி பாட்டு கோயிலான மாசி பெரியண்ணசாமி கோயில் திருவிழா சமயத்தில், காதல் திருமணம் செய்துகொண்ட ஜெகதீசனிடம் தலைக்கட்டு வரியை அவ்வூர் முக்கியஸ்தர்கள் வசூல் செய்வதை தவிர்த்தனர். ரமேஷ் குடும்பத்தினர் நேரில் சென்று முக்கியஸ்தர்களிடம் முறையிட்டும் வரிவசூல் செய்யபடவில்லை. இதனையடுத்து ரமேஷ் சிறுகனூர் காவல் நிலையத்தில் கடந்த 15-ஆம் தேதி  புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் டிஎஸ்பி தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனாலும் முக்கியஸ்தர்கள் தங்கள் கருத்தில் விடாப்பிடியாக இருந்ததால் கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது.


காதல் திருமணம் செய்ததால்  ஊரைவிட்டு ஒதுக்கிவைத்த கிராமம்.. 9 பேர் மீது வழக்குப்பதிவு..

மேலும் தற்போது நடைபெற்று வரும் மாசி பெரியண்ணசாமி, ஸ்ரீகாமாட்சி, அம்மன்பெரும்பூஜை விழாவிற்கு ரமேஷ்  இடமிருந்து குடி பாட்டு வரி வாங்க  முக்கியஸ்தர்கள் மறுத்துவிட்டனர். இந்த சூழலில் ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் ஊர் முக்கியஸ்தர்கள் சின்னச்சாமி, மாயவன், சிவலிங்கம் உள்ளிட்ட 9 பேர் மீது குடிமையியல் உரிமை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து நம்மிடம் பேசிய ரமேஷ், 120 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலில் வழிபாடு எங்களுக்கும் உரிமை உள்ளது. எனது தம்பி காதலித்து திருமணம் செய்துகொண்டான் என்ற ஒரே காரணத்தினால் கோவில் விழாவில் பங்கேற்க எங்களை அனுமதிக்கவில்லை. எனவே காவல்துறை எங்களுக்கு உரிய வழிபாடு நடத்த அனுமதி பெற்றுத் தர வேண்டும் என்றார்.அவரது தாய் செல்ல பாப்பா பேசுகையில்,ஆண்டாண்டு காலமாய் தலைமுறை தலைமுறையாய் இந்த கோவிலில் வழிபாடு நடத்தி வருகிறோம்.

வழிபாடு நடத்த எங்களை  அனுமதிக்காததால் வேண்டுதல்கள் நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் உள்ளது. குடி பாட்டு வரி செலுத்த தயாராக உள்ளோம், மாவட்ட நிர்வாகம் அதற்கான உத்தரவை பெற்று தர வேண்டுமென கண்ணீர் மல்க கூறினார்.


காதல் திருமணம் செய்ததால்  ஊரைவிட்டு ஒதுக்கிவைத்த கிராமம்.. 9 பேர் மீது வழக்குப்பதிவு..

இந்த விவகாரத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த இந்திய மனித உரிமை கட்சி பொதுச்செயலாளர் குபேரன்  கூறுகையில், காதலித்து திருமணம் செய்துகொண்ட இருவரும் ஒரே வகுப்பை சார்ந்தவர்கள். ஆனால் ஊர் முக்கியஸ்தர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காதல் திருமணம் செய்துகொண்ட  குடும்பத்தை ஒதுக்கி வைப்பதால் அவர்களின் அடிப்படை உரிமை பாதிக்கப்படுகிறது. இதனால் மன ரீதியாக பாதிப்பு ஏற்படுகிறது. அவர்கள் வயல்வெளியில் வேலை செய்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. பொது இடத்தில்  மிரட்டல் விடுத்து இழிவாக பேசி வருகிறார்கள். இதுகுறித்து சிறுகனூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஊர் முக்கியஸ்தர்கள் 9 பேர் மீதும் குடியியல் உரிமை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சரியான நடவடிக்கை இல்லை.அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 103, 110, 506 ( 2 ) 294 (B) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்றார்.இந்தியாவில் மனமொத்த இருவர் திருமண வயது நிரம்பியவராக இருந்தால் அவர்கள் எந்த மதத்திலும்,  எந்த ஜாதியிலும் திருமணம் செய்து கொள்ள தடை இல்லை என்கிறது சட்டம். ஆனால் எதுமலை விவகாரத்தில் குடும்பத்தை ஒதுக்கி வைப்பதால் சக மனிதனின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படுகிறது. இந்த சட்டத்தின் மீதுள்ள நம்பிக்கை தகர்க்கப்படுகிறது. எனவே சட்ட ரீதியாக இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தலைப்பு செய்திகள்

திருச்சியில் தீவிரமடையும் குடிநீர் நெருக்கடி: நீர் ஆதாரங்கள் வறண்டு வருவதால் மாநகராட்சி அவசர நடவடிக்கை
திருச்சியில் தீவிரமடையும் குடிநீர் நெருக்கடி: நீர் ஆதாரங்கள் வறண்டு வருவதால் மாநகராட்சி அவசர நடவடிக்கை
"பால்பண்ணை சந்திப்பைக் கடக்கணுமா? பக்கத்து ஓட்டலில் டீ சாப்பிட்டே வரலாம் !" – திருச்சி மக்களின் கிண்டல் கலந்த வேதனை
துறையூர் அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம், கூடுதல் எடை முறைகேடு? பரபரப்பு புகார்
துறையூர் அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம், கூடுதல் எடை முறைகேடு? பரபரப்பு புகார்
திருச்சி ஜி.ஹெச்-ல் பரபரப்பு... மூதாட்டியின் கால் விரலை கடித்த எலி: உறவினர்கள் அதிர்ச்சி
திருச்சி ஜி.ஹெச்-ல் பரபரப்பு... மூதாட்டியின் கால் விரலை கடித்த எலி: உறவினர்கள் அதிர்ச்சி

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Office: உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
MK Stalin: “கர்நாடக போக வேண்டாம்” - விஜய்யை எச்சரித்த ஸ்டாலின்! பின்னணி என்ன?
“கர்நாடக போக வேண்டாம்” - விஜய்யை எச்சரித்த ஸ்டாலின்! பின்னணி என்ன?
டெல்லி நீட் போராட்டம் வாபஸ்! கரப்பான் ஜனதா கட்சி- அரசு இடையே உடன்பாடு; கோரிக்கைகள் நிலை?
டெல்லி நீட் போராட்டம் வாபஸ்! கரப்பான் ஜனதா கட்சி- அரசு இடையே உடன்பாடு; கோரிக்கைகள் நிலை?
TVK Budget: ஒவ்வொரு அமைச்சருடனும் 3 மணி நேர ஆலோசனை.. எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள விஜய் அரசின் முதல் பட்ஜெட்!
TVK Budget: ஒவ்வொரு அமைச்சருடனும் 3 மணி நேர ஆலோசனை.. எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள விஜய் அரசின் முதல் பட்ஜெட்!
Trump Vs China Russia: “ஈரானுக்கு ஹெல்ப் பண்ணீங்கன்னா, அப்புறம்..“ சீனா, ரஷ்யாவுக்கு ட்ரம்ப் மிரட்டல்; என்ன சொன்னார் பாருங்க
“ஈரானுக்கு ஹெல்ப் பண்ணீங்கன்னா, அப்புறம்..“ சீனா, ரஷ்யாவுக்கு ட்ரம்ப் மிரட்டல்; என்ன சொன்னார் பாருங்க
Top 3 Most Fuel Efficient Hybrid SUVs: ஹைப்ரிட்லயே நாங்க தான் டாப்.! பக்கா சொகுசுடன் அதிகமான மைலேஜும் தரும் 3 SUV-க்கள் எவை தெரியுமா.?
ஹைப்ரிட்லயே நாங்க தான் டாப்.! பக்கா சொகுசுடன் அதிகமான மைலேஜும் தரும் 3 SUV-க்கள் எவை தெரியுமா.?
''இதான் ஆரம்பம்; இன்னும் 3 முக்கிய கோரிக்கை''- அமைச்சர் ராஜினாமாவை அடுத்து CJP முழக்கம்!
''இதான் ஆரம்பம்; இன்னும் 3 முக்கிய கோரிக்கை''- அமைச்சர் ராஜினாமாவை அடுத்து CJP முழக்கம்!
Dharmendra Pradhan Resign: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா; மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து முடிவு
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா; மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து முடிவு
Embed widget