மேலும் அறிய

திருச்சி: சிறுத்தை நடமாட்டத்தால் அச்சத்தில் பொதுமக்கள்: நடவடிக்கையில் இறங்கிய வனத்துறை!

திருச்சி மாவட்டத்தில் முதன்முறையாக சிறுத்தை நடமாட்டம் இருப்பது அப்பகுதி மக்களிடையே பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த உப்பிலியபுரம் ஊராட்சி  ஒன்றியத்திற்கு உட்பட்ட  ஆங்கியம் கிராமம். இந்த கிராமத்தின் கடைசி பகுதியில் ஆங்கியம் கரடு என்று அழைக்கப்படும் காட்டுப் பகுதி உள்ளது. இந்த பகுதிகளில் வன விலங்குகளான சிறுத்தை, கரடி, உள்ளிட்ட விலங்குகள் சுற்றி திரிவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில்  நேற்று காலை அப்பகுதி பெண்கள் கரடு பகுதி  அருகே சென்றபோது உருமல் சத்தம் கேட்டுள்ளது. அப்போது  கவனித்து பார்த்த போது  சிறுத்தை ஒன்று சென்றுள்ளது. உடனே  மக்கள் அனைவரும்  வனத்துறை அதிகாரிக்கு  தகவல்  தெரிவித்தனர்.   இந்நிலையில் நேற்று மதியம் வீரமச்சான்பட்டி பகுதி வனக்காப்பாளர் நஸ்ருதீன் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது, கரடு  அருகே சிறுத்தை இருப்பதை கவனித்தார்.உடனே வனதுறை அதிகாரிக்கு தகவல் கொடுத்தார்.


திருச்சி: சிறுத்தை நடமாட்டத்தால் அச்சத்தில் பொதுமக்கள்: நடவடிக்கையில் இறங்கிய வனத்துறை!
ஆங்கியம் கிராமத்தைச் சேர்ந்த  ஹரிபாஸ்கர் வயது ( 20) இவர் மலை காட்டிலுள்ள குகை அருகே சென்று செல்பி எடுக்க முயற்சித்த போது    திடீரென்று சிறுத்தை  பாய்ந்த தாக்கியது. அவரை காப்பாற்ற முயன்ற விவசாயி துரைசாமியையும் (60) ,சிறுத்தை தாக்கியது .இருவரையும் தாக்கிவிட்டு அந்த சிறுத்தை அதே பகுதியில் உள்ள மற்றொரு குகைக்கு  சென்று விட்டது. துரைசாமி, ஹரிபாஸ்கர், ஆகிய  இருவரையும்  அப்பகுதியினர் மீட்டு அருகில் உள்ள  அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்பு மேல் சிகிச்சைக்காக  அங்கிருந்து இருவரையும் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

இதனை தொடர்ந்து  மாவட்ட வன அலுவலர் சுஜாதா, பொறியாளர் ஆனந்தகுமார், உதவி வனபாதுகாவலர் சம்பத்குமார் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். மேலும் சிறுத்தையை பிடிக்க திருச்சி வனசரக அலுவலர் குணசேகரன், துறையூர் வனசரக அலுவலர் பொன்னுசாமி தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு  சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க மறைக்காடு மற்றும் குகை பகுதியில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிப்பதா அல்லது கோயம்புத்தூர் கால்நடை மருத்துவ அலுவலரை வரவழைத்து மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதா என்று வனத்துறையினர் ஆலோசித்து வருகின்றனர்.

திருச்சி: சிறுத்தை நடமாட்டத்தால் அச்சத்தில் பொதுமக்கள்: நடவடிக்கையில் இறங்கிய வனத்துறை!
ஆங்கியம், அழகாபுரி, கோனேரிப்பட்டி, உள்ளிட்ட குன்றை சுற்றி உள்ள கிராம மக்கள் இரவில் வெளியே வரவேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலையில் ஆங்கியம் கிராமத்தின் எல்லையில் வைக்கப்பட்ட கேமராவில் ஊர் எல்லையை தாண்டி சிறுத்தை வெளியேறும் காட்சி படம் பிடிக்கப்பட்டுள்ளது. சிறுத்தை கொல்லி மலையின் அடர்ந்த வனப்பகுதிக்கு சென்று இருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் திருச்சி மாவட்டத்தில் முதன்முறையாக சிறுத்தை நடமாட்டம் இருப்பது அப்பகுதி மக்களிடையே பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடதக்கது 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
Tamilnadu Round Up: SIR முடிவுகள், உயர்நீதிமன்றம் தீர்ப்பு, விஜய் மீது அட்டாக், செவிலியர் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: SIR முடிவுகள், உயர்நீதிமன்றம் தீர்ப்பு, விஜய் மீது அட்டாக், செவிலியர் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு தேதி குறித்த அமைச்சர்கள்- வெளியான முக்கிய அறிவிப்பு
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு தேதி குறித்த அமைச்சர்கள்- வெளியான முக்கிய அறிவிப்பு
ADMK BJP Alliance : பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்.? இது தான் காரணம்.! குட்டிஸ்டோரி சொன்ன இபிஎஸ்
பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்.? இது தான் காரணம்.! குட்டிஸ்டோரி சொன்ன இபிஎஸ்
Embed widget