மேலும் அறிய

திருச்சி : விமான நிலையத்தில் இரண்டு மாதத்துக்கு பின்பு அதிகரித்த பயணிகள் எண்ணிக்கை..

திருச்சி விமான நிலையித்தில் ஜூன் மாதத்தில் பயணிகளின் எண்ணிக்கை 28 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு பிறகு பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

திருச்சி விமான நிலையித்தில் ஜூன் மாதத்தில் பயணிகளின் எண்ணிக்கை 28 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதன்படி இரண்டு மாதங்களுக்கு பிறகு பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மே மாதம் கொரோனா தொற்றின் 2-வது அலை மிகவும் தீவிரமாக பரவ தொடங்கியது. இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த 3 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பயணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. பொது போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கொரோனா அச்சம் காரணமாக விமான பயணிகள் பலர் தங்களது பயணங்களை ரத்து செய்து விட்டனர். இதனால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் கடந்த சில மாதங்களாக குறைந்த பயணிகளுடன் விமான சேவை நடக்கிறது.திருச்சி : விமான நிலையத்தில் இரண்டு மாதத்துக்கு பின்பு அதிகரித்த பயணிகள் எண்ணிக்கை..

குறிப்பாக தமிழகத்தை காட்டிலும் மற்ற மாநிலம், நாடுகளில் கொரோனா தொற்று தீவிரமாக இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் இருந்து விமான மூலம் பயணம் செய்வோர்களின் எண்ணிக்கை குறைந்தது. மேலும் சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், விமானநிலையத்தில் மிகவும் அத்தியாவசிய காரணங்களுக்கு மட்டும் விமானத்தில் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து கொரோனா பாதிப்பு  எண்ணிக்கை சற்று குறைந்த போது தமிழகத்தில் இருந்து மற்ற நாடுகள், மாநிலங்களுக்கு விமானம் சேவை தொடங்கப்பட்டது. ஆனாலும் பயணம் செய்ய வரும் பயணிகள் கட்டாயமாக கொரோனா  பரிசோதனை செய்து இருக்க வேண்டும், பரிசோதனை  முடிவில் நகலை கையில் வைத்திருக்க வேண்டும், அவற்றை  சோதனை செய்த பிறகே அவர்களுக்கு பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தனர். மீண்டும் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் தீவிரமாக இருக்கும் என உலக சுகாதார துறை தெரிவித்துள்ளதால், விமானம் மூலம் பயணம் செய்யும் பணிகள் கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்து இருக்க வேண்டும், இல்லையென்றால் பயணம் செய்ய அனுமதி இல்லை என மத்திய, மாநில அரசுகள் தெரிவித்தனர்.திருச்சி : விமான நிலையத்தில் இரண்டு மாதத்துக்கு பின்பு அதிகரித்த பயணிகள் எண்ணிக்கை..

திருச்சி விமான நிலையத்தில் சென்னை, பெங்களூரு, துபாய், ஐதராபாத், குவைத், மஸ்கட் உள்ளிட்ட 12 நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக விமானங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. இதனால் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக மட்டுமே இருந்தது. கொரோனா 2 அலை ஊரடங்கிற்கு முன்பாக ஜனவரி மாதம் 46,204 பேர், பிப்ரவரி மாதம் 41,224 பேர், மார்ச் மாதம் 47,877 பேர், ஏப்ரல் மாதம் 35,728 பேர் திருச்சி விமான நிலையம் வழியாக பயணங்களை மேற்கொண்டு இருந்தனர். இந்நிலையில் கடந்த மே மாதம் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கி ஊரடங்கு பிறபிக்கப்பட்டது. இதனால் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. இதன்படி கடந்த மே மாதம் 15,088 பேரும், ஜூன் மாதம் 17,606 பேர் மட்டுமே திருச்சி விமான நிலையம் வழியாக பயணங்கள் மேற்கொண்டு இருந்தனர். ஜூலை மாதம் முதல் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டன. இதனால் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. இதன்படி கடந்த ஜூலை மாதம் மட்டும் 28,989 பேர் திருச்சி விமான நிலையம் வழியாக பயணம் செய்துள்ளனர். எனவே இந்த மாதம் பயணிகளின் எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
Embed widget