மேலும் அறிய

திருச்சி: உடல் உறுப்புதானம் செய்து இறந்தவர்கள் உடலுக்கு அரசு மரியாதை! அமைச்சர், கலெக்டர் நேரில் அஞ்சலி

திருச்சியில் உடல் உறுப்புகளை தானம் செய்த பாதிரியார், ஆட்டோ டிரைவருக்கு அரசு மரியாதை செய்யப்பட்டது. அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

தமிழ்நாடு உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத்  தொடர்ந்து விளங்கி வருகிறது. தமிழ்நாட்டில் உறுப்பு தானம் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், இதயம், கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உடலுறுப்புகளை தானம் பெறுவதற்காக 6,811 நபர்கள் பதிவு செய்து காத்திருக்கின்றனர். இதில் அதிகபட்சமாக 6 ஆயிரத்து 179 பேர் சிறுநீரகம் வேண்டியும் , 449 பேர் கல்லீரல் வேண்டியும் விண்ணப்பித்துள்ளனர்.

72 பேர் இதயத்திற்காகவும், 60 பேர் நுரையீரலுக்காகவும் காத்திருக்கின்றனர். 24 பேர் இதயம், நுரையீரல் இரண்டும் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கைகள் வேண்டி 26 பேரும் கணையம் வேண்டி ஒருவரும் காத்திருக்கின்றனர். உறுப்பு தானம் பெறும் நடைமுறை 2008- ஆம் ஆண்டு தொடங்கியது. அப்போது முதல் இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், கணையம் என முக்கிய உறுப்புகள் தானம் பெறப்பட்டு பலர் மரணத்தின் விளிம்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். கடந்த 15 ஆண்டுகளில் ஆயிரத்து 726 உறுப்பு கொடையாளர்கள் மூலம் 6 ஆயிரத்து 327 உறுப்புகள் பெறப்பட்டுள்ளன. கடந்த இரண்டரை ஆண்டில் மட்டும் 313 கொடையாளர் மூலம் ஆயிரத்து 242 உறுப்புகள் தானமாக பெறப்பட்டு 663 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.


திருச்சி: உடல் உறுப்புதானம் செய்து இறந்தவர்கள் உடலுக்கு அரசு மரியாதை! அமைச்சர், கலெக்டர் நேரில் அஞ்சலி

மேலும் உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களின் குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது மற்றும் உடல் உறுப்பு தானம் செய்தவர்களுக்கு அரசு மரியாதை உடன் இறுதி சடங்குகள் செய்யபடும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்நிலையில் திருச்சி பொன்மலைப்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான திருஇருதய மேல்நிலைப்பள்ளியின் தாளாளரும், தலைமை ஆசிரியராக இருந்து வந்தவர் பாதிரியார் பிரான்சிஸ் சேவியர். இவர் கடந்த 22-ந்தேதி பள்ளியில் நடந்த கூட்டத்தில் திடீரென மயங்கி விழுந்தார். பின்னர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்த அவர், மூளைச்சாவு அடைந்தார். இதைத்தொடர்ந்து அவருடைய உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இதையடுத்து, நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ., திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் உள்ளிட்டோர் பாதிரியார் பிரான்சிஸ் சேவியர் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இன்று காலை அவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.


திருச்சி: உடல் உறுப்புதானம் செய்து இறந்தவர்கள் உடலுக்கு அரசு மரியாதை! அமைச்சர், கலெக்டர் நேரில் அஞ்சலி

இதேபோல் திருச்சி உக்கடை அரியமங்கலம் புங்களாயி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிச்சை. இவரது மகன் பாபு (வயது 38), ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 24-ந் தேதி இரவு அரியமங்கலம் பால்பண்ணை அருகே திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்ற வாகனம் மோதியதில் பாபு படுகாயம் அடைந்தார். இதையடுத்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பாபு இறந்தார். இதனைதொடர்ந்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதன்படி அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. உடற்கூறு ஆய்வுக்கு பிறகு இறுதி அஞ்சலி செலுத்த அவரது உடல் வீட்டிற்கு நேற்று மதியம் கொண்டு வரப்பட்டது. அங்கு தமிழக அரசின் அரசாணைப்படி திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், திருச்சி அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் அருண்ராஜ், பொன்மலை சரக போலீஸ் உதவி கமிஷனர் காமராஜ், அரியமங்கலம் இன்ஸ்பெக்டர் திருவனந்தம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் பாபுவின் குடும்பத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆறுதல் கூறினார். அப்போது பாபுவின் தாயார் தனது இளைய மகனுக்கு அரசு வேலை வழங்குமாறு கோரிக்கை வைத்தார். அதன்பின்னர் பாபுவின் உடல் ஓயாமரி சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

வகுப்புகளில் ப வடிவ இருக்கை முறை; இத்தனை பிரச்சினைகள் ஏற்படுமா? எழும் எதிர்ப்புகள்!
வகுப்புகளில் ப வடிவ இருக்கை முறை; இத்தனை பிரச்சினைகள் ஏற்படுமா? எழும் எதிர்ப்புகள்!
பரிதாப நிலையில் ஓபிஎஸ்! பழைய பன்னீர்செல்வமா வருவாரா? எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரு..
பரிதாப நிலையில் ஓபிஎஸ்! பழைய பன்னீர்செல்வமா வருவாரா? எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரு..
Chennai Power Cut(16.07.25): சென்னைல நாளைக்கு எங்கெங்க பவர் கட் தெரியுமா.? இதோ விவரம், படிச்சுட்டு பிளான் பண்ணுங்க
சென்னைல நாளைக்கு எங்கெங்க பவர் கட் தெரியுமா.? இதோ விவரம், படிச்சுட்டு பிளான் பண்ணுங்க
என்னுடைய உயிருக்கு ஆபத்து! ஆதவ் அர்ஜுனா போலீசில் புகார்! பின்னணி என்ன?
என்னுடைய உயிருக்கு ஆபத்து! ஆதவ் அர்ஜுனா போலீசில் புகார்! பின்னணி என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbumani Vs Ramadoss | பாஜக கூட்டணியில் அன்புமணி.. ரூட்டை மாற்றும் ராமதாஸ் பக்கா ஸ்கெட்ச்!
Nainar Nagendran | ”சோறு கூட போடுறோம் ஓட்டு போட மாட்டோம்” அதிர்ச்சியில் உறைந்த  நயினார் நாகேந்திரன்
மயிலாடுதுறை சுற்றுலா மாளிகை அவசரகதியில் திறந்த அமைச்சர்! பொதுமக்கள் ஆத்திரம்
தவெக உடன் கூட்டணி.. காங்கிரஸ் பக்கா ஸ்கெட்ச்! ஓகே சொல்வாரா ராகுல்?
800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வகுப்புகளில் ப வடிவ இருக்கை முறை; இத்தனை பிரச்சினைகள் ஏற்படுமா? எழும் எதிர்ப்புகள்!
வகுப்புகளில் ப வடிவ இருக்கை முறை; இத்தனை பிரச்சினைகள் ஏற்படுமா? எழும் எதிர்ப்புகள்!
பரிதாப நிலையில் ஓபிஎஸ்! பழைய பன்னீர்செல்வமா வருவாரா? எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரு..
பரிதாப நிலையில் ஓபிஎஸ்! பழைய பன்னீர்செல்வமா வருவாரா? எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரு..
Chennai Power Cut(16.07.25): சென்னைல நாளைக்கு எங்கெங்க பவர் கட் தெரியுமா.? இதோ விவரம், படிச்சுட்டு பிளான் பண்ணுங்க
சென்னைல நாளைக்கு எங்கெங்க பவர் கட் தெரியுமா.? இதோ விவரம், படிச்சுட்டு பிளான் பண்ணுங்க
என்னுடைய உயிருக்கு ஆபத்து! ஆதவ் அர்ஜுனா போலீசில் புகார்! பின்னணி என்ன?
என்னுடைய உயிருக்கு ஆபத்து! ஆதவ் அர்ஜுனா போலீசில் புகார்! பின்னணி என்ன?
ரூ.35 ஆயிரம் ஊதியம்.. கிராம உதவியாளர் பணி- 134 இடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
ரூ.35 ஆயிரம் ஊதியம்.. கிராம உதவியாளர் பணி- 134 இடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
MK Stalin: மகளிர் உரிமைத் தொகை உங்களுக்கு கண்டிப்பா வேணுமா.? இத மட்டும் பண்ணுங்க - ஸ்டாலினே தந்த அப்டேட்
மகளிர் உரிமைத் தொகை உங்களுக்கு கண்டிப்பா வேணுமா.? இத மட்டும் பண்ணுங்க - ஸ்டாலினே தந்த அப்டேட்
Anbumani Vs Ramadoss: நானே வரேன்..! ஐயாவிற்கு டோஸ், அன்பு மகனுக்கு பாசக்கரம் - களத்தில் சரஸ்வதி ராமதாஸ்
Anbumani Vs Ramadoss: நானே வரேன்..! ஐயாவிற்கு டோஸ், அன்பு மகனுக்கு பாசக்கரம் - களத்தில் சரஸ்வதி ராமதாஸ்
Teachers Protest: உரிமைகளுக்காக போராடும் ஆசிரியர்களை கைது செய்வதா? அதிகாரத் திமிர் தலைக்கு ஏறி விட்டதா? அன்புமணி விளாசல்!
Teachers Protest: உரிமைகளுக்காக போராடும் ஆசிரியர்களை கைது செய்வதா? அதிகாரத் திமிர் தலைக்கு ஏறி விட்டதா? அன்புமணி விளாசல்!
Embed widget