மேலும் அறிய

Heat Wave: திருச்சியில் 127 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகரித்த வெப்பநிலை - வீட்டில் முடங்கிய மக்கள்

திருச்சியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெயிலின் தாக்கம், என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டில் முடங்கிய பொதுமக்கள்.

கோடை காலம் துவங்கிவிட்ட நிலையில், இந்தியா முழுவதுமே வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு இந்தியா முழுவதுமே வெப்ப நிலை அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் ஏப்ரல் 1 ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், இந்தியாவில் கோடை காலம் நிலவும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் வழக்கத்தைவிட வெப்பம் அதிகமாக இருக்கும் என எச்சரித்திருக்கிறது. இந்தியாவின் கிழக்கு, வடகிழக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் சில இடங்களில் மட்டும் வெப்பம் குறைவாக இருக்கலாம் எனக் கூறப்பட்டிருக்கிறது. இந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் இந்தியாவின் தென் பகுதி, மத்திய இந்தியா, கிழக்கிந்தியா, வடமேற்கு இந்தியாவின் சமவெளிப் பகுதிகளில் வழக்கத்தைவிட அதிகமான வெப்ப அலை வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.


Heat Wave: திருச்சியில் 127 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகரித்த வெப்பநிலை - வீட்டில் முடங்கிய மக்கள்

குறிப்பாக தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் முக்கிய மாவட்டங்களில் திருச்சி ஒன்றாகும். திருச்சியை பொறுத்தவரை தமிழ்நாட்டின் மையப் பகுதியாக விளங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து காணப்படும். ஆனால் இந்த ஆண்டு கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக கடந்த ஒரு வார காலமாக வெயிலின் தாக்கம் எதிர்பாக்காத அளவிற்கு இந்த ஆண்டு வெப்ப காற்று அலை வீசுவதால் செய்வதறியாமல் தவிக்கும் மக்கள். வெயிலின் தாக்கத்தை கண்டாலே உயிர் பயம் ஏற்படுவதாக திருச்சி மக்கள் தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு நாளும் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பி செல்வது மிகவும் அரிதாக உள்ளது. என்ன செய்வது என்று தெரியாமல் உயிர் பயத்தில் அச்சத்துடன் வீட்டில் முடங்கி இருக்கிறோம் என வேதனையுடன் தெரிவிக்கின்றனர். 


Heat Wave: திருச்சியில் 127 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகரித்த வெப்பநிலை - வீட்டில் முடங்கிய மக்கள்

திருச்சியில் 127 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகரித்த வெப்பநிலை

திருச்சியிலும் இந்த ஆண்டு வழக்கத்தைவிட 3 முதல் 4 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் அதிகரித்துள்ளது. நேற்று அதிகபட்சமாக 43.1 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது 1896 ஆம் ஆண்டுக்குப் பின்னர் திருச்சியில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையாகும். 1896 ஆம் ஆண்டு மே 2ஆம் தேதி 43.3 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவாகியிருந்தது. 127 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று பதிவான 43.1 டிகிரி செல்ஷியஸ் என்பதே திருச்சியின் காலநிலை வரலாற்றில் பதிவான இரண்டாவது அதிகபட்ச வெப்பநிலையாகும். இதற்கு முன்னர் 1888 ஆம் ஆண்டில் மட்டும் இதே அளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது. 

முன்னதாக, 2013 ஆம் ஆண்டு மே, 18 ஆம் தேதி 42.9 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது. 2017, 2019, 2020 ஆகிய ஆண்டுகளிலும் 42 டிகிரி செல்ஷியஸுக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. 


Heat Wave: திருச்சியில் 127 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகரித்த வெப்பநிலை - வீட்டில் முடங்கிய மக்கள்

பருவநிலை மாற்றத்திற்கு காரணம் பொதுமக்களே

இந்தியாவில் தற்போது வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளுக்குப் பிறகு வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து உள்ளது. இதற்கு முக்கிய காரணம் பொது மக்களாகிய நாம் அனைவரும் தான். இயற்கை வளங்களை பாதுகாக்க நாம் அனைவரும் தவறிவிட்டோம்,  விவசாய நிலங்களை பிளாட் போட்டு விற்பனை செய்து மரங்கள் ,செடிகள் ,இயற்கை வளங்களை முழுமையாக நாம் அளித்து விட்டோம். என்று மக்கள் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தங்களிடமிருந்த விவசாய நிலங்களையும், மரங்களையும் வேரோடு சாய்த்தார்களோ அன்றே பருவநிலை மாற்றம் தொடங்கிவிட்டது. இயற்கைக்கு நாம் அனைவரும் செய்த துரோகத்தின் வெளிப்பாடு தான் இந்த வெயிலின் தாக்கம் அதிகரிப்பு. இதோடு இந்த பாதிப்பு நிற்கப் போவதில்லை, வருகின்ற ஒவ்வொரு மாதங்களுக்கும் நாம் எதிர்பாராத பருவ நிலை மாற்றம் ஏற்படும். அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தும் நம் அனைவரையுமே சேரும் ,இவை அனைத்திற்கும் முக்கிய காரணம் இயற்கை வளங்களை நாம் அளித்ததே ஆகும்.  இனியாவது இயற்கை வளங்களை மேம்படுத்தவும், பாதுகாக்கவும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
புதுச்சேரியில் ஆன்லைன் மோசடி: 8 பேர் ரூ.15.93 லட்சம் இழந்தனர்!
புதுச்சேரியில் ஆன்லைன் மோசடி: 8 பேர் ரூ.15.93 லட்சம் இழந்தனர்!
பாஜக ஆளும் மாநிலங்களை தட்டித்தூக்கிய தமிழகம்.! நம்பர் 1 இடத்தை பிடித்து அசத்திய மு.க. ஸ்டாலின்
பாஜக ஆளும் மாநிலங்களை தட்டித்தூக்கிய தமிழகம்.! நம்பர் 1 இடத்தை பிடித்து அசத்திய மு.க. ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
புதுச்சேரியில் ஆன்லைன் மோசடி: 8 பேர் ரூ.15.93 லட்சம் இழந்தனர்!
புதுச்சேரியில் ஆன்லைன் மோசடி: 8 பேர் ரூ.15.93 லட்சம் இழந்தனர்!
பாஜக ஆளும் மாநிலங்களை தட்டித்தூக்கிய தமிழகம்.! நம்பர் 1 இடத்தை பிடித்து அசத்திய மு.க. ஸ்டாலின்
பாஜக ஆளும் மாநிலங்களை தட்டித்தூக்கிய தமிழகம்.! நம்பர் 1 இடத்தை பிடித்து அசத்திய மு.க. ஸ்டாலின்
மதுரை மாநகரில் (02.12.2025) முக்கிய பகுதியில் மின்தடை லிஸ்டை செக் பண்ணுங்க !
மதுரை மாநகரில் (02.12.2025) முக்கிய பகுதியில் மின்தடை லிஸ்டை செக் பண்ணுங்க !
’த.வெ.க – காங்கிரஸ் கூட்டணி பற்றி செங்கோட்டையனிடம் பேசினேனா?’ திருநாவுக்கரசர் Exclusive..!
Sengottaiyan : ’த.வெ.க – காங்கிரஸ் கூட்டணி பற்றி செங்கோட்டையனிடம் பேசினேனா?’ திருநாவுக்கரசர் Exclusive..!
Parliament Winter Session : ’அவையை நடத்தப்போகும் சிபி ராதாகிருஷ்ணன்’ தமிழ்நாட்டிற்காக சீறும் திமுக எம்.பிக்கள்..!
’அவையை நடத்தப்போகும் சிபி ராதாகிருஷ்ணன்’ தமிழ்நாட்டிற்காக சீறும் திமுக எம்.பிக்கள்..!
மழை மேகங்களை உருவாக்கிய டிட்வா.. சென்னையில் வெளுத்து வாங்கும் மழை- டெல்டா வெதர்மேன் அலர்ட்
மழை மேகங்களை உருவாக்கிய டிட்வா.. சென்னையில் வெளுத்து வாங்கும் மழை- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Embed widget