மேலும் அறிய

அரியலூர் : சர்க்கரை ஆலை கழிவால் நிலமே போச்சு... ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற விவசாயி!

அரியலூர் மாவட்டம் , கோத்தாரி சர்க்கரை ஆலையில் இருந்து கழிவுநீர் வெளியேறியதால் விவசாய நிலம் முற்றுலும் சேதம், இழப்பீடு வழங்காததால் விவசாயி தீக்குளிக்க முயற்சி செய்தார்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மனு அளிப்பதற்காக பொதுமக்கள் வந்தனர். இந்நிலையில் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன் தனது மனைவியுடன் வந்த ஒருவர், கேனில் கொண்டு வந்த மண்ணெண்ணெயை திடீரென தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைக்கண்ட அருகில் இருந்த காவல்துறை மற்றும் பொதுமக்கள் அவரை தடுத்து, அவரிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறித்தனர். மேலும் அவர் மீது தண்ணீரை ஊற்றினர். இதையடுத்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும் தொடர் விசாரணையில் அவர், திருமானூர் ஒன்றியம் சாத்தமங்கலம் கிராமத்தில் உள்ள வடக்கு தெருவை சேர்ந்த குமாரவேல், விவசாயி என்பதும், அவருடன் வந்தது அவருடைய மனைவி கண்ணகி என்றும் தெரியவந்தது. மேலும் இவர் சாத்தமங்கலம் அருங்கால் எல்லையில் சுமார் 6.5 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, அதில் மக்காச்சோளத்தை கடந்த ஆடி மாத கடைசியில் பயிரிட்டிருந்தார். அப்போது பெய்த மழையை தொடர்ந்து அருகில் உள்ள கோத்தாரி சர்க்கரை ஆலையில் இருந்து கழிவுநீர் வெளியேறி, அவரது நிலத்தில் புகுந்ததால் மக்காச்சோள பயிர் முற்றிலும் வீணாகி போனதாக கூறப்படுகிறது.
 

அரியலூர் : சர்க்கரை ஆலை கழிவால் நிலமே போச்சு... ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற விவசாயி!
 
மேலும் இதுகுறித்து குமாரவேல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1-ந் தேதி கீழப்பழுவூர் காவல்துறையிடம்  புகார் தெரிவித்திருந்தார். இதையடுத்து நிலத்தில் இருந்த தண்ணீரின் மாதிரிகளை சேகரித்து, ஆய்வு முடிவுகளை தெரிவிப்பதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர். ஆனால் அதன்பிறகு எவ்வித நடவடிக்கையும் இல்லாததால், இதுபற்றி கடந்த மார்ச் மாதம் அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கண்ணகி, மாவட்ட ஆட்சியரிடம்  புகார் அளித்தார்.
 
இதையடுத்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இருப்பினும் இழப்பீடு தொகை வழங்காததால் தான் குத்தகைக்கு வழங்க வேண்டிய ரூ.1 லட்சம் மற்றும் வயலுக்கு செலவழித்த தொகை என மொத்தம் ரூ.3 லட்சம் தனக்கு இழப்பு ஏற்பட்டதாகவும், பல்வேறு இடங்களில் மனு அளித்தும் எவ்வித பயனும் இல்லாததால்  மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றதாகவும், குமாரவேல் கூறியதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து தங்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம்  கண்ணகி மனு அளித்தார். விவசாயி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 

அரியலூர் : சர்க்கரை ஆலை கழிவால் நிலமே போச்சு... ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற விவசாயி!
 
இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கூறியது, ‘’மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டத்தில் வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது. ஆனால் ஒரு சில புகார்களின் மீது எடுக்கபடும் நடவடிக்கை தாமதமாக ஆகிறது. ஆகையால் பொதுமக்கள் குறைகளை தீர்க்கவே இந்த கூட்டம் நடத்தப்படுகிறது, மேலும் மக்கள் இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபடவேண்டாம் என  வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget