மேலும் அறிய

ஸ்ரீரங்கம், சமயபுரம் கோயில்கள் இனிமே இது கூடவே கூடாது: அறநிலையத்துறை அதிரடி உத்தரவு

பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல், பொதுமக்கள்,  பிராணிகள் சந்தித்து வரும் ஆபத்துகளை தவிர்க்கும் பொருட்டு தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதித்துள்ளது.

தஞ்சாவூர்: இனிமே ஸ்ரீரங்கம், சமயபுரம் உள்ளிட்ட தமிழகத்தில் முக்கியமான 12 கோயில்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தக் கூடாது என்று இந்து சமய அறநிலையத் துறை தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தியாவிலேயே அதிகமான கோயில் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது. எனவே தினந்தோறும் பல லட்சம் மக்கள் தமிழக கோயில்களில் தரிசனம் செய்து வருகிறார்கள். அந்த வகையில் பக்தர்கள் ொண்டு வரும் கோயிலுகளுக்குள் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.. இதனையடுத்து கோயில்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக்

பிளாஸ்டிக் எளிதில் மக்காததால், நிலம், கடல் மற்றும் நீர்நிலைகளில் குவிந்து மாசுபாட்டை ஏற்படுத்துகிறது. கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் குப்பைகள் கடல் வாழ் உயிரினங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. முக்கியமாக மீன்கள் பிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிடுகின்றன. அதே மீன்கள் மீனவர்களின் வலையில் சிக்கி மக்களுக்கு உணவாகிறது. இதனால் மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் பிளாஸ்டிக் கழிவுகள் மண்ணையும் நீர்நிலைகளையும் மாசுபடுத்துகின்றன. விலங்குகளுக்கு பிளாஸ்டிக் ஆபத்தை ஏற்படுத்துகிறது. 

பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்கள்,  பிராணிகள் சந்தித்து வரும் ஆபத்துகளை தவிர்க்கும் பொருட்டு தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கவும், விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் தடை விதித்து 2018-ல் அரசாணை பிறப்பித்தது. அந்த அரசாணையில் பிளாஸ்டிக் ஷீட், பிளாஸ்டிக் பேப்பர் கப், பிளாஸ்டிக் டீ கப், பிளாஸ்டிக் டம்ளர், தெர்மாகோல் கப், அனைத்து அளவு மற்றும் தடிமனான பிளாஸ்டிக் கேரி பேக் உட்பட 9 பொருட்களுக்கு தடை விதித்தது. அரசு அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் தடை மீறலுக்கு அபராதம் விதிக்கின்றன. கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களிலும் அவ்வப்போது ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.

12 கோயில்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

ஆனால் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக ஒழிப்பதில் பெரும் சவால் அமைந்துள்ளது. இந்த நிலையில் பிளாஸ்டிக் பொருளுக்கு தடையுள்ள நிலையில் இயற்கை சார்ந்த பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்ற வலுவான கோரிக்கையும் எழுந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஸ்ரீரங்கம், சமயபுரம் உட்பட 12 கோயில் களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த கூடாது என்று இந்து சமய அறநிலையத்துறை தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட கோயில்களின் நிர்வாகத்துக்கு இந்து சமய அறநிலையத் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில், திருத்தணி முருகன் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், பழனி முருகன் கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், திருச்செந்தூர் முருகன் கோயில், ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில், வடபழனி முருகன் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி  கோயில் ஆகிய 12 கோயில்கள் பிளாஸ்டிக் இல்லா கோயில்களாக மாற்றிடும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இக்கோயில்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. இதற்கு மாற்றாக இயற்கை சார்ந்த பொருட்களை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, இக்கோயில்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கான தடையை சீரிய முறையில் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Embed widget