மேலும் அறிய

Fisherman: மீன்பிடி தடைக்காலம் முடிந்து 5 நாட்களிலேயே தமிழக மீனவர்கள் 17 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,

புதுக்கோட்டை மாவட்டத்தில் மீன்பிடி தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டு பல குடும்பங்கள் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக மீன்பிடி தடைக்காலத்தில் வருமானத்திற்கு கூட வழி இல்லாமல் அரசு கொடுக்கும் நிவாரண தொகையை வைத்து தான் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அடிக்கடி மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் போது இலங்கை கடற்படையினரால் தாக்கபடுவது, சிறைபிடிக்கபடுவது என தொடர்ந்து நிகழ்ந்து தான் வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள மீனவர்கள் தினந்தோறும் விசைப்படகுகளில் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவது வழக்கம். நேற்று முன்தினம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியிலிருந்து சுமார் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இதில் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த கர்ணிக்கர் மகன் தமிழரசன் (வயது 39) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், இவரும், அதே பகுதியை சேர்ந்த சிங்காரம் மகன் பாஸ்கர் (40), ஊட்டி மகன் முத்துராஜா (25), தனபால் மகன்கள் அமரன் (30), ஜெகநாத் (35), சுப்பையா மகன் குமார் (43) ஆகிய 6 மீனவர்களும், அதே பகுதியை சேர்ந்த உதயகுமார் (60) என்பவருக்கு சொந்தமான மற்றொரு விசைப்படகில் இவரும், இவரது மகன்களான ரவீந்திரன் (40), உலகநாதன் (35), வைத்தியநாதன் (27), அருள்நாதன் (23), முத்து மகன் குமரேசன் (40) ஆகிய ஆறு மீனவர்களும் கடலுக்கு சென்றனர்.
 

Fisherman: மீன்பிடி தடைக்காலம் முடிந்து 5 நாட்களிலேயே தமிழக மீனவர்கள் 17 பேர் கைது
 
மேலும் இதேேபால் அதேபகுதியை சேர்ந்த காளிமுத்து மகன் அகிலா (40) என்பவருக்கு சொந்தமான மற்றொரு விசைப்படகில் ரங்கநாதன் மகன் காளிமுத்து (45), அர்ஜுனன் (50), சிவபெருமாள் மகன் குமார் (42), முனியசாமி மகன் அருண் (22), நடராஜன் மகன் குருமூர்த்தி (27) ஆகிய 5 போ் என மொத்தம் 17 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் 17 பேரும் 32 நாட்டிகள் கடல் மைல் தொலைவில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 3 விசைப்படகில் மீன்பிடித்து கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 17 பேரையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்து, அவர்களது 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது படகுகளையும் இலங்கையில் உள்ள காங்கேசன் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின்னர் 17 மீனவர்களையும், ஊர்க்காவல் படை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. மீன்பிடி தடைக்காலம் முடிந்து 5 நாட்களிலேயே தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்த சம்பவம் புதுக்கோட்டை மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே மத்திய , மாநில அரசு இதற்கு உடனடியாக தீர்வுகான நடவடிக்கை எடுக்கவேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

 
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!A Raja Speaker chair : ”என்னைய பார்த்து பேசுங்க” சபாநாயகர் CHAIR-ல் ஆ.ராசா! அவையை வழிநடத்திய MPDMK Vs PMK | மக்களை அடைத்து வைத்ததா திமுக?போராட்டத்தில் குதித்த பாமக! விக்கிரவாண்டியில் பரபர!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget