மேலும் அறிய

புதுக்கோட்டையில் தாய் தந்தையை கொலை செய்ததாக மனநலம் பாதிக்கப்பட்ட மகன் கைது

பாலசுந்தர் கடந்த 2 ஆண்டுகளாக வேலைக்கு எங்கும் போகாமல் மனநலம் பாதிக்கப்பட்டது போல பிரமை பிடித்து வீட்டிற்குள்ளேயே இருந்துள்ளார்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவூர் அருகே மண்டையூர் பகுதியை சேர்ந்த விவசாயி ரெங்கசாமி (60) இவரது மனைவி வள்ளி (57). ரெங்கசாமி நாவலிங்ககாடு பகுதியில் அவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வீடு கட்டி அங்கேயே குடியிருந்து வந்தார். அவருக்கு பாலசுந்தர் (24), கோபி (22) என 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது.  கோபி என்ஜினீயரிங் படித்து முடித்து விட்டு வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். பாலசுந்தர் கேட்டரிங் படித்து இருந்தார். இந்நிலையில் பாலசுந்தர் கடந்த 2 ஆண்டுகளாக வேலைக்கு எங்கும் போகாமல் மனநலம் பாதிக்கப்பட்டது போல பிரமை பிடித்து வீட்டிற்குள்ளேயே இருந்துள்ளார். மேலும் அவரது தாய் தந்தையிடம் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இதை பார்த்த அருகில் உள்ளவர்கள் பாலசுந்தரை மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காட்டுமாறு கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் தனது மகனை மனநல மருத்துவமனைக்கு அழைத்து செல்லவில்லை. ஆனால் அப்பகுதியை சேர்ந்த சிலர் ரெங்கசாமியிடம் சென்று உனது மகனுக்கு முனி பிடித்துள்ளது. அதனால் உடுக்கை அடிக்கும் பூசாரியை வரவழைத்து உனது மகனுக்கு பிடித்துள்ள முனியை விரட்டலாம் என்று கூறியுள்ளனர். அதை நம்பிய ரெங்கசாமி  நேற்று உடுக்கை அடிக்கும் ஒரு பூசாரியிடம் தொடர்புகொண்டு இரவு 7 மணி அளவில் தனது வீட்டிற்கு வருமாறு கூறியுள்ளார்.
 

புதுக்கோட்டையில் தாய் தந்தையை கொலை செய்ததாக மனநலம் பாதிக்கப்பட்ட மகன் கைது
 
இந்த தகவல் பாலசுந்தருக்கு தெரியவந்தையடுத்து நேற்று மாலை 5 மணியளவில் ரெங்கசாமி அவரது வீட்டின் அருகே உள்ள வயல் பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அவரது மனைவி வள்ளி வீட்டில் இருந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த பாலசுந்தர் மாடு மேய்த்துக் கொண்டிருந்த தனது தந்தையிடம் சென்று வீட்டிற்கு வருமாறு அவரை அழைத்து வந்துள்ளார். பின்னர் மாலை 5.45 மணியளவில் ரெங்கசாமியின் வீட்டில் வழக்கமாக பால் கறந்து செல்லும் பால்காரர் வந்துள்ளார். அப்போது வீட்டின் முன் உட்கார்ந்திருந்த பாலசுந்தரிடம் பால் கறக்க வேண்டும் உன்னுடைய அப்பா அம்மா எங்கே என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்துள்ளார்.  தொடர்ந்து பால்காரர் அவர்களது வீட்டை ஒட்டிய தாழ்வாரத்தில் அமைக்கப்பட்டிருந்த சமையலறைக்கு சென்று பார்த்தபோது ரெங்கசாமி அவரது மனைவி வள்ளி ஆகிய இருவரும் கழுத்து, முகம் ஆகிய இடங்களில் கத்தியால் குத்தியும், வெட்டியும் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர்.
 

புதுக்கோட்டையில் தாய் தந்தையை கொலை செய்ததாக மனநலம் பாதிக்கப்பட்ட மகன் கைது
 
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பால்காரர் அருகில் உள்ளவர்களிடம் இதுகுறித்து கூறியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த மாத்தூர் காவல்துறை ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், மண்டையூர் உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் காவல் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன், கீரனூர் துணை காவல் சூப்பிரண்டு சிவசுப்பிரமணியன் ஆகியோர் மண்டையூருக்கு சென்று  தம்பதியின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தொடர்ந்து அங்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் சென்று மீண்டும் நடந்து வீட்டிற்கு வந்தது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவான கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. தொடர்ந்து தம்பதியினர் உடலை காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மண்டையூர் காவல்துறை இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து மனநலம் பாதிக்கப்பட்ட பாலசுந்தரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆவூர் அருகே கணவன்-மனைவி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அக்னிபாத் திட்டத்தின் கீழ் இராணுவத்தில் சேர ஒரு சூப்பர் வாய்ப்பு.. ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியீடு- உடனே விண்ணப்பியுங்கள்!
அக்னிபாத் திட்டத்தின் கீழ் இராணுவத்தில் சேர ஒரு சூப்பர் வாய்ப்பு.. ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியீடு- உடனே விண்ணப்பியுங்கள்!
மழைநீர் சேமிப்பு: தண்ணீர் பஞ்சத்தை விரட்டும் தீர்வு! காவேரி கூக்குரல் கருத்தரங்கில் விஞ்ஞானிகள் தகவல் | விவசாயிகள் கவனத்திற்கு
மழைநீர் சேமிப்பு: தண்ணீர் பஞ்சத்தை விரட்டும் தீர்வு! காவேரி கூக்குரல் கருத்தரங்கில் விஞ்ஞானிகள் தகவல் | விவசாயிகள் கவனத்திற்கு
திருச்சி வாழை விவசாயிகள் கண்ணீர்: பலத்த காற்றால் வாழை மரங்கள் முறிந்து வாழ்வாதாரம் கேள்விக்குறி!
திருச்சி வாழை விவசாயிகள் கண்ணீர்: பலத்த காற்றால் வாழை மரங்கள் முறிந்து வாழ்வாதாரம் கேள்விக்குறி!
திருச்சி-கோவை: புதிய 4 வழிச்சாலை! கரூர் வழி பயண நேரம் 2.5 மணி நேரமாக குறையும்! எதிர்பார்ப்பு அதிகரிப்பு!
திருச்சி-கோவை: புதிய 4 வழிச்சாலை! கரூர் வழி பயண நேரம் 2.5 மணி நேரமாக குறையும்! எதிர்பார்ப்பு அதிகரிப்பு!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN udhaya suriyan symbol : 175 தொகுதிகளில் உதயசூரியன் போட்டி.! கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.? ஸ்டாலின் விளக்கம்
175 தொகுதிகளில் உதயசூரியன் போட்டி.! கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.? ஸ்டாலின் விளக்கம்
TVK Candidate List: நாளை மறுநாள் தவெக வேட்பாளர் பட்டியல்; நேரடியாக அறிமுகம் செய்யும் விஜய், சைலண்ட் மோடில் சம்பவமா?
TVK Candidate List: நாளை மறுநாள் தவெக வேட்பாளர் பட்டியல்; நேரடியாக அறிமுகம் செய்யும் விஜய், சைலண்ட் மோடில் சம்பவமா?
LPG Gas Booking: என்னாது? கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் புதிய கட்டுப்பாடுகள்? விளக்கமளித்த மத்திய அரசு
LPG Gas Booking: என்னாது? கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் புதிய கட்டுப்பாடுகள்? விளக்கமளித்த மத்திய அரசு
MK Stalin Vs Modi :
"கோவிட் காலத்தைப் போல" மோடியின் பேச்சு..! பீதிக்கு உள்ளான பொதுமக்கள்- கேள்வி கேட்கும் ஸ்டாலின்
Iran War US 15 Point Plan: இந்தா.. கிளம்பிட்டார்ல; ஈரான் போரை முடிக்க ட்ரம்ப் போட்ட 15 அம்ச திட்டம்; ஒர்க் அவுட் ஆகுமா.?
இந்தா.. கிளம்பிட்டார்ல; ஈரான் போரை முடிக்க ட்ரம்ப் போட்ட 15 அம்ச திட்டம்; ஒர்க் அவுட் ஆகுமா.?
AIADMK Candidate List: அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.! யார் யார் எந்த தொகுதியில் போட்டி.? இதோ முழு லிஸ்ட்
அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.! யார் யார் எந்த தொகுதியில் போட்டி.? இதோ முழு லிஸ்ட்
RCB Owner: ஆர்சிபிக்கு ஓனர் ஆன ராஜஸ்தான் வீரர் - ஆர்யமன் பிர்லா..! யார் இந்த 28 வயது இளைஞர்?
RCB Owner: ஆர்சிபிக்கு ஓனர் ஆன ராஜஸ்தான் வீரர் - ஆர்யமன் பிர்லா..! யார் இந்த 28 வயது இளைஞர்?
SUV Car: வேகம் தான் பிடிக்குமா? 7 ஸ்பீட் ஆட்டோமேடிக் - ஆக்சிலரேஷனில் அதிரடி காட்டும் எஸ்யுவிக்கள், டாப் 5 மாடல்கள்
SUV Car: வேகம் தான் பிடிக்குமா? 7 ஸ்பீட் ஆட்டோமேடிக் - ஆக்சிலரேஷனில் அதிரடி காட்டும் எஸ்யுவிக்கள், டாப் 5 மாடல்கள்
Embed widget